ஞாயிறு, 9 மே, 2021

அன்னையர் தினத்தில், நம் தாய்மார்களை எவ்வாறு கௌரவப்படுத்த முடியும்?

 தாய் என்றாலே கருணை, அன்பு, பாசம் கொண்டவள் என்பதே அவள் பொது இயல்பு இல்லையா..

ஆனால் உண்மையை சொல்லுவோம்.. பெண்களுக்கு கர்வம் உண்டு தானே😃..

என்ன ..ஆண்களை விடக் கொஞ்சமே கொஞ்சம் கூட.😉

.அன்பு உள்ள இடத்தில் கர்வம் இருக்குமா?

கர்வம் கொண்டவள் அன்புள்ளவளாக இருக்க முடியுமா?

கர்வம் கொண்டவன்/கொண்டவள் என்பதற்கு என்ன சொல்வோம்.."அவனுக்கு/அவளுக்கு கொழுப்பு அதிகம்" என்று சொல்வதில்லையா?

"கொழுத்து போன தவளை வலையில் தங்காது' என்று பேச்சு வழக்கும் உண்டே..

ஏன் கொழுப்பு அதிகம் உள்ள மீன்கள் தான் துள்ளி குதித்து விளையாடும்!!

அப்படியெனில்.."கொழுப்பு" என்பது எதை காட்டுகிறது?

"சக்தி"யைத் தானே!!

சரி.. கர்வம் ஏற்படுவது எப்போது?

மற்றவரிடம் உள்ளதை விட தன்னிடம் சிறப்பானது இருக்கும்போது....

பெண்ணுக்கு கர்வம் ஏற்படுவது, அவள் கணவன் போன்ற சிறந்தவன் வேறு யாரும் இல்லை என்னும் போது!!

நாமே பார்த்திருக்கிறோம்..தன் கணவன் பெரிய வேலையில் இருக்கிறார் என்று சொல்லும்போது அவள் குரலில் தெரியும் கர்வத்தை!!

பெரிய பதவியில் இருப்பவர் அந்த சுகத்தை அனுபவிப்பதை விட, அவர் மனைவி தானே அதை அனுபவிப்பது!!😍

மேடம் ஜஸ்டிஸ். மேடம் கலெக்டர் என்று அவர் மனைவி என்பதாலேயே அந்த பெருமை அவளுக்கு சேர்கிறது இல்லையா?

"மகாராஜன் உலகை ஆளுவார்.அந்த மகாராணி அவனை ஆளுவாள்"என்று கவியரசர் பாடவில்லையா?!!

ஆனா..சொல்றதுக்கு இந்த மனுஷன் கிட்டே என்ன இருக்குன்னு…

"நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட
எடுப்பா இருக்கும் மூக்கு"ன்னு

இதில் எத்தனை பேர் ஒத்துக்கொள்வர் என்று தெரியாது!!😄😅

ஆனால் அது வெறும் இரவல் பெருமை அல்லவா?!

அவ்ளுடையது என்று அவள் பெருமை கொள்ள, கர்வம் கொள்ள பொதுவான காரணமமாக அது இருக்க முடியாது..

அப்ப என்ன தான் காரணம்.. சொல்லி முடிங்கிறீங்க!!☺️

பாரதி தான் சொல்றாரே…கர்வம் எப்ப வரும்ன்னு..

"உச்சி தனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி!!

மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!!"

தன் மக்கள் அறிவு, அழகு, திறனுடன் வளர்வதை கண்டு தான் பெண் "கர்வம்" கொள்கிறாள்!!💐

அதனால் தான் , உலகத்துக்கே அன்னையாக இருக்கும் லலிதையை,, நம் போன்ற பக்தியுள்ள சிறந்த மக்களை கொண்டதனால் கர்வம் கொண்டவளாக, "அதிகர்வினி" என்ற நாமத்தில் துதிக்கிறோம்!!

அப்படி ஒவ்வொருவரும் அவர் தன் அன்னை "கர்வம்" கொள்ளுமாறு நடந்துக் கொள்வதே அவளை கவுரவப்படுத்துவதாகும்!!

நம் முதல்வர் "முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்" ஆகிய நான்' என்று சொல்வதில் எப்படி பெருமை கொண்டாரோ, அது போலவே, "தயாளு ஸ்டாலின் ஆகிய நான்" என்று பெருமை கொண்டு சொல்லும் நாள் விரைவில் வரட்டும்!!

https://youtube.com/watch?v=xO4qeA8F7K8&fbclid=IwAR2PhI_PNsBV0n6VSD81zk7s_p8ZYTTwmOF7xVrbbNQZriQeVzxtbMb751Q

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!

படித்தமைக்கு நன்றி!!

ஸ்ரீஜா.

நன்றி: சுகி சிவம் அய்யா!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக