புதன், 19 மே, 2021

ஊரடங்கில் தமிழக அரசு செய்யும் தவறுகள் என்ன?

 நமக்கு எப்போதுமே நம் தவறுகளை மறைத்து மற்றவர் மீது குறை சொல்வதே வழக்கமாகி விட்டது..

ஊரடங்கு போட்டால், என்ன செய்ய வேண்டும்..வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாமா?

ஆனால் நம் ஆட்கள் என்ன செய்தார்கள்..அது 10 மணியோ, பகல் 12 மணி வரையோ எப்போது வரை அனுமதித்தாலோ, எதுவும் பொருட்டில்லை..வாகனங்களில் போய் கொண்டே இருக்கிறார்கள்…😀

ஊரடங்கு போலவே இல்லை…

டி.ஜி.பி.வேறு.. "போலீஸ் பொதுமக்களிடம் தன்மையாக சொல்லுங்கள்" என்றார். ☺️

அந்த பயம் இருக்கட்டும்னு நம்மாளு கமெண்ட்டு வேற…

பெரும்பாலான சாலையில் ரோந்து பணியில் போலீஸ் இல்லை…ஆனால் நம் ஆட்கள் என்ன செய்தார்கள்?!

கோவிட நோய் பற்றிய அச்சமே இல்லாதது போல சாலைகளில் எங்கும் வாகணங்கள்…

இதுலே வேற.. உனக்கு கோவிட வந்துச்சா..அப்புறம்"ன்னு கதை கேட்கிற அளவுக்கு காமெடியா போயிருச்சி..

கோரானா வந்தாலும் குணமாகி வீடு திரும்புகிறார்கள்ன்னு அரசு சொல்றதே,மக்களுக்கு ஊக்கம் கொடுக்க தான்..

ஆனா..விபரீதம் புரியாம..இவர்கள் ஊரடங்கில் செய்யும் கூத்து இருக்கே..😡

வேறு வழியில்லாமல் மக்களே அரசை யாரும் ஊரடங்கில் வெளியே வராமல் இருக்க வைக்க கடும் கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்க வேண்டிய நிலைக்கு போனது.!!

அதனால் போலீசார் ஈ பதிவு செய்துக் கொண்டு சாலைகளில் வரலாம் என்றது..இத்தனைக்கும் முந்தைய ஈ பாஸை விட நடைமுறை எளிது..

ஆனால் நம் மக்கள் இந்த கெடுபிடியில்லாத நிலைக்கு கொஞ்ச நாள் பழகிப்போனதால், விதிமுறைக்கு கட்டுப்படாமல், இன்று வெளியே வந்ததால் போலீசாரால் பிடிப்பட்டவர்கள்.👎

சட்ட ஒழுங்கும், நம் ஆட்களுக்கு உயிர் போகும் பயம் இருக்கும் போதும், வராதா?

எல்லாவற்றிற்கும் போலீஸ் தடியடி நடத்தினால் தான் சரியாகுமா?

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்…

நம் தவறே நமக்கு தெரியாதாம்….

இதில் ஊரடங்கில் அரசு செய்யும் தவறு என்னன்னு..கேள்வி..

போங்க..போயி வீட்டிலே அமைதியா இருங்க…

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக