பிறந்த தேதி: 26 நவம்பர், 1954
பிறந்த இடம்: வல்வெட்டித்துறை, இலங்கை
இறந்த தேதி: 18 மே, 2009
இறந்த இடம்: முல்லைத்தீவு, இலங்கை
ஈழத்தீவு, தமிழர்களின் பூர்விக நிலம் என்னும்போது, அங்கு சிங்களவர்கள் இனம் குடியேறியதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரங்கள் அனைத்தும் சிங்களவர்களின் கைக்குப் போனதோடு அல்லாமல், தமிழர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்க ஆரம்பித்தார்கள். அதை எதிர்த்து பன்னெடுங்காலம் அரசை எதிர்த்து, ஈழ மக்களை திரட்டி, உரிமைப் போர் நடத்தியவர். தமிழ் நாடும் அவர்களுக்கு துணை நின்றது என்றும் சொல்லலாம்.
"ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." என்றவர் பிரபாகரன்.
அவர் எடுத்த ஒரு தவறான முடிவு. நம் .நாட்டையே உலுக்க, ஆனாலஅதை "ஒரு துன்பியல் சம்பவம்" என்று சாதாரணமாக அவர் புறந்தள்ளிப் போனது தான், இந்திய மக்களை, அவர் படையின் மீது கொண்ட நேசத்தை பிரித்தது என நினைக்கிறேன்.
ஏனெனில் இந்திய அமைதி படை, இலங்கைக்கு போன போது, தமிழ்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஓரளவு அறிவேன்.
அது குறித்து புரியாத வயது எனக்கு. இருந்தும் ஆர்வ மிகுதியால், அண்டை நாட்டிற்கு, நம் இராணுவம், நம் இந மக்களுக்கு எதிராக போர் புரிய போகலாமா? என்று கேள்வி கேட்டு அப்போது பிரதமராயிருந்த ராஜீவ் காந்திக்கு நான் கடிதம் ஒன்று எழுதினேன்.
ஆச்சரியத்தில் ஆச்சரியமாக அதற்கு அவர் கையெழுத்திட்ட பதில் கடிதம் வந்தது!!
அதை இன்றும் பொக்கிஷமாக வைத்துள்ளேன்.
"பக்கத்து வீட்டில் தீ பிடித்தால் பார்த்துக்கொண்டிருப்போமா? நல்லெண்ணத்தின் அடிப்படையில், அங்கு அமைதி கொண்டு வரவே அனுப்பப்பட்டது" என்றது அந்த கடிதம்..
அந்த கடிதம் அப்போது என்னை சுற்று வட்டாரத்தில்,பிரபலமாக்கியது எனலாம்.
ஆனால்..நடந்தது விதி…அதை நடத்தியது அவர் மதி…
யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத பயங்கரம்…
அதற்கு அவர் கொடுத்த விலை தான் அதிகம். சூழ்ச்சியால் அவர் வீழ்த்தப்பட்டது..அதுவும் அந்த பச்சை மண்ணும் முடிக்கப்பட்டது,
ஜீரணிக்க முடியாத "துன்பியல் சம்பவங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக