இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 நவம்பர், 2021

பாதசாரிகள் கடக்கும் இடத்திற்கு zebra crossing என்ற பெயர் எப்படி வந்தது?

 சென்னை அண்ணாபல்கலைக்கழகம் அருகேயும் ராஜ் பவன் அருகிலும்" இங்கு மான்கள் கடக்குமிடம். பார்த்து வண்டியோட்டவும்" என்ற அறிவிப்பு பலகை உள்ளதை பார்த்திருக்கிறீர்களா?

கிண்டி உயிரியல் பூங்காவில் இருந்து வெளியே வந்துவிடும் மான்களை பாதுகாக்கவே இந்த ஏற்பாடு!!

இந்த "ஜீப்ரா கிராசிங் " கை பார்க்கும் போதெல்லாம் எனக்கு, zebraa எனும் வரிக்குதிரைகள் அல்ல.. அந்த மான்கள் நினைவு தான் வரும்..

எத்தனை அறிவிப்பு பலகை இருந்தும் என்ன? சீறி வரும் வண்டிகளின் நடுவே அகப்பட்டு, அடிபட்டு இறக்கும் மான்கள் அதிகம்!!

இதே போலத் தான் சாலையை கடப்பவைகள்/கடப்பவர்கள் இடத்துக்கு, அந்த அற்புதமான கோடிட்ட விலங்கான. வரிக்குதிரையின் பெயரை இட்டு "வரிக்குதிரை கடப்பு "என்கிறார்களோ?

அந்த பெயர் ஏன் வந்தது? என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் பள்ளிக்காலத்திலேயே இதன் விடையை தேடியிருக்கிறோம்.

சாலைகளில், குறிப்பாக போக்குவரத்து சிக்னல்களில் உள்ள வெள்ளைக் கோடுகளைக் குறிக்கும் இது, . பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையைக் கடக்க செய்யப்பட்ட ஏற்பாடு..

இந்த யோசனை எங்கிருந்து வந்தது? என்று சரித்திரத்தை புரட்டினால், அதன் ஆரம்பம் லண்டலிருந்து துவங்குகிறது...

1930களில், லண்டனின் போக்குவரத்து மிகவும் குழப்பமாக இருந்ததாலும், மக்கள் கடந்து செல்வதற்கு முறையான வழியோ இடமோ இல்லாததாலும், பாதசாரிகள் சாலைகளைக் கடப்பதற்கு இங்கிலாந்தில் இது ஒரு பரிசோதனை முயற்சியாக , செய்தார்கள்.

ஆரம்பத்தில், கருப்பு தார் சாலைகளில் வரையப்பட்ட இந்த அப்பட்டமான வெள்ளை கோடுகள் "ஜீப்ரா கிராசிங்குகள்" என்று அழைக்கப்படவில்லை.

ஒரு நாள், ஒரு ட்ரையல் கிராசிங்கிற்குச் சென்ற பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவர், தன்னிச்சையாக அவர்களை ‘ஜீப்ரா கிராசிங்’ என்று அழைத்தார் என்பதால், அந்தப் பெயர் ஒட்டிக்கொண்டது!!!

ஜீப்ரா கிராசிங்குகள் இன்று உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போக்குவரத்து சிக்னலாக, மற்ற கிராசிங்குகளுக்கு ஊக்கமளித்துள்ளது..

ஆஸ்திரேலியாவில், ஒரு தட்டையான கூம்பின் மேல் வரிக்குதிரை கடப்பது "வொம்பாட் கிராசிங்ஸ்" என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளை கருப்பு கோடிட்ட புலிகள் உள்ளபோது, "புலி குறுக்குவெட்டு"

அது தான் சரியான தமிழ் சொல் இல்லையா?

என்று ஏன் சொல்வதில்லை? என்று சிலர் கேட்கலாம்.

ஏனெனில் வெள்ளை புலி இனம் ஒரு அரிய வகை . வங்காளத்தில் மட்டுமே இது காணப்படுகிறது. அது மட்டுமல்ல, அது அசல் இனம் அல்ல, ஒரு கலப்பு வகை!!

ஆனாலும், மஞ்சள் கருப்பு வரிகள் கொண்ட புலியையும் இதில் புகுத்தி, ஹாங்காங்கில், மஞ்சள் மற்றும் கருப்பு வடிவமானது "புலி குறுக்குவெட்டு" என்று அழைக்கப்படுகிறது !!

நியாயமாக பார்த்தால், புலி நம் தேசிய விலங்கு என்பதால், இங்கும் அப்படி செய்திருக்க வேண்டும்!☺️

பசுக்கள் கடப்பதற்கு கூட கிராசிங் உள்ளதே.

.

அடிக்கடி தலைப்பு செய்தியில் வரும் "பெகாசஸ்" பெயரில் கூட கிராசிங் உள்ளது!!

ஆனாலும் இதன் ஆரம்பகர்த்தாவான இங்கிலாந்தில், இப்போது இந்த வார்த்தை பிரயோகம் பெரும்பாலும் இல்லையென்றாலும், இந்தியாவில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது.

தூரத்தில் இருந்து வரும்போதே வண்டியோட்டிகளின் கவனத்தை ஈர்த்து சாலையை கடப்பவர்கள் கடந்து முடிக்கும் வரை, வண்டியை நிறுத்திவைக்க, இந்த வெள்ளை கருப்பு கோடுகள் உதவுகிறது.

வரிக்குதிரைகளுக்கு உள்ள வரிகள் ஜெனெட்டிகலாக வந்தது ஏன்? என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்த போது தான், இதிலுள்ள சுவாரசியமான தகவல் தெரிந்தது.

இது வேட்டையாடுபவர்களுக்கு தெரிந்திருக்கும்..

வரிக்குதிரையின் வாழ்விடத்தில் அவற்றை தொந்தரவு செய்யும் பூச்சிகளிடம் இருந்து காத்துக்கொள்ள, இந்த மாதிரியை அவை ஜெனெட்டிகலாக உருவாக்கின என்று கருதுகின்றனர். அதற்காக நடத்திய ஆய்வில், குதிரைகளை வரிக்குதிரையின் வரிகள் போன்ற ஒரு துணியால் மூடி வைத்தபோது, குதிரை அருகில் ஈக்கள் வந்தாலும், கருப்பு-வெள்ளை கோடுகள் அவர்களை குழப்பியதனால் ஈக்கள் குதிரை உடலில் படவே இல்லையாம். அதற்கு பதிலாக மறைவில் மோதினவாம்.!!

இந்த வரிகள் பூச்சிகளை குழப்ப இயற்கையாகவே அவர்களுக்கு கிடைத்த ஒரு அணி!!

மேலும் இவை கூட்டமாக மேயும் போது, அதன் எதிரிகளான சிங்கம், புலி இந்த மொத்த வரிகளை ஒரேயிடத்தில் பார்க்கும்போது குழம்பி விடுமாம்.!!அத்தோடு "விடு ஜுட்" தான்!!

இந்த மின்னல் வேகமுள்ள வரிக்குதிரை பெயரில் உள்ள ஜீப்ரா கிராசிங், போக்குவரத்தை நிறுத்தி மக்கள் சாலையை கடக்க ஏற்ற பகுதிகளாக இருக்கலாம் தான்…. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த விதியை நாம் சரியாக பின்பற்றுவதில்லை..!!

முறுக்கிக் கொண்டிருக்கும் ஆக்சிலேட்டர்களின் சத்தம், சீறிப் பாய துடித்துக் கொண்டிருக்கும் வேகம், சாலையை கடந்துக் கொண்டிருக்கும் பாதசாரிக்கு உள்ளே ஒரு அச்சத்தையே எப்போதும் கொடுகும்.

இது அதன் நோக்கமில்லையே?!

கடப்பது பாதசாரிகளா அல்லது அந்த வண்டிகளா..இல்லையில்லை …அந்த வண்டியோட்டிகளா என்று நினைக்க வைக்கும்.!!

ஆஹ்..சொல்ல மறந்துவிட்டேனே..

வரிக்குதிரைகளின் இயல்புகளில் முக்கியானவை என்ன தெரியுமா?

  • மற்ற குதிரை, கழுதையை போல வீட்டின் வளர்ப்பு ப்பிராணியாக இருக்காது.

அதனால் தான் இந்த வரிக்குதிரைக்கும் குதிரை, கழுதையுடன் கலப்பினம் செய்கிறார்கள் இப்போது!!

  • நெடும் தூரம் சலிப்பில்லாமல் ஓடக்கூடியது
  • எப்போதும் கவனமாக இருப்பது..மின்னல் வேக பாய்க்ச்லில் தன்னுடைய இன விலங்கு ஒன்றுக்கு துன்பம் என்றாலும் நிற்காமல், தன் நலம் ஒன்றே கருத்தாக சிதறி ஓடுவது!!

நேற்று ஒரு காணொளியை காண நேர்ந்தது.நெரிசல் மிகுந்த அண்ணாசாலையில், நடந்த வாகன விபத்து குறித்தது..

Horrific, road mishap, Chennai, Anna Salai, caught, on cam, techie’s life | TOI Original - Times of India Videos
In a horrific road mishap, a pothole on the Anna Salai in Chennai claimed the life of a software engineer on Monday morning. The youth riding on a two-wheeler lost his balance after hitting the pothole on the road and fell under the wheels of an MTC bus. The accident happened at Little Mount at 8.45am. The deceased has been identified as Mohammad Younus, who was working in a tech company. The traffic investigation wing of police rushed to the spot. CCTV footage revealed that Younus lost his balance after his bike hit a pothole. The two-wheeler dashed against the MTC moving on his left side. He fell under the rear wheel and died on the spot.

இதை பார்க்கும்போது தெரிந்தது

  1. வண்டியோட்டிகளின் அதீத வேகம்,
  2. சாலையில் உள்ள பள்ளத்தில் வண்டியொட்டி ஒருவர் சிக்கி விபத்து ஏற்பட்டது அறிந்தும் தாங்கள் "அலெர்ட்"டாக அந்த இடத்தில் இருந்து விலகி, விரைவது,
  3. எத்தனை தடவை விதிகள் சொல்லிக்கொடுத்து, மீறினால் தண்டித்து.. என்றாலும் கட்டுக்குள் அடங்காத தன்மை.

இதில் வீட்டு வளர்ப்பு பிராணியாய் இருந்தும் என்ன பயன்?

மேலே சொன்ன வரிக்குதிரை குணத்தோடு பொருந்தி போகிறதா?

அப்படியானால்…

அந்த zeebraa crossing பாதசாரி கடக்க இல்லையா?😐

வெள்ளி, 4 ஜூன், 2021

பூமி தட்டையானது என உங்களை வாதிட சொன்னால் எந்த காரணத்தை முன்வைப்பீர்?

 ஹை..தாராளமா சொல்வேனே..எண்ணிக்கோங்க

  • ஆசியா கண்டத்திலே இருகிற, இந்தியாவோட நுனியிலே இருக்கிற சென்னைவாசிகள் எல்லாம் பூமியை விட்டு கீழே விழாம இருக்கோமே?
  • ஹார்பருக்கு போயிருக்கீங்களா? கடலிலே மிதந்து வர்ற கப்பல், ஒரு நேர்கோட்டிலேயிருந்து வர்ற மாதிரி தானே தெரியுது? அவ்ளோ ஏங்க கடல் கரையை இங்கிருந்து பார்த்தா நேர்கோடா தானே தெரியுது?
  • வானத்தில் பார்க்கிற நட்சத்திரம் எல்லாம் இப்படித்தானே தெரியுது?
  • ரெண்டு குச்சியை பக்கம் பக்கமா தரையிலே ஊன்றி வச்சிட்டு நிழலை பாருங்க ..ஒரே மாதிரி தானே தெரியுது.
  • உயரத்தில் ஏறி பார்க்கும்போது நல்லாத தெரியுது

சரி போங்க..நம்ப மாட்டேங்கிறீங்க..

இந்த போட்டோ விண்வெளியில் இருந்து எடுத்தது.இத்தாலியும் ஆல்ப்ஸ் மலையும்…இதை பார்த்தாவது ஒத்துக்கோங்க. பூமி தட்டை தான்னு😂🤣😁

படிமபுரவு கூகிள்

நன்றி படித்தமைக்கு

ஸ்ரீஜா.

வியாழன், 3 ஜூன், 2021

சூரிய கிரகணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சூரிய கிரகணம் பற்றி யோசிக்கையிலே எழுத்தாளர் அ.முத்துலிங்கம் எழுதிய கிரகணம் என்கிற சிறுகதைக்குத் தான். மனம் தாவுகிறது.

கதையில் வரும் சிறுமி பஸ்மினா ஒரு கற்பனை பாத்திரம் என்றே மனசு நினைக்க மறுக்கிறது. என்னையறியாமல் அதிலே வரும் சுகன்யாவின் இடத்தில் நான் போய் உட்கார்ந்துக் கொள்கிறேன். பஸ்மினாவுடன் நானும் சேர்ந்து விளையாடுகிறேன். அவளின் அந்த 10 வயது தாண்டிய புத்திக் கூர்மையானது கட்டுக்கடங்காத குதிரையைப் போல திமிறிக்கொண்டு ஓடும்போது, என் மனதும் அதன் பின்னாலேயே ஓடுகிறது.

இதோ பஸ்மினா சூரிய கிரகணத்தை பற்றி எழுதுகிறாள்…

"சூரிய கிரகணம் எனக்குப் பிடிப்பதில்லை. சில நிமிடங்கள் பூமியை அந்தகாரம் சூழ்ந்து கொள்கிறது. சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன் புகுந்து சூரியனுடைய சக்தி வெள்ளத்தை ஏழரை நிமிடங்கள் தடுத்து விடுகிறது. இது இரவு வருவது போன்றதல்ல. எங்களுக்கு இரவு நடந்து கொண்டிருக்கும்போது இந்தப் பூமியின் இன்னொரு பகுதியை சூரியனுடைய ஒளிக் கதிர்கள் தாக்கிக் கொண்டிருக்கும். கிரகணத்தின்போதோ, அந்த ஏழரை நிமிடங்கள், சூரியனுடைய உயிரூட்டும் சக்தி பூமியை அடைவதேயில்லை! தடைபட்டு போகிறது. பூமி அந்த சக்தியை நிரந்தரமாக இழந்து விடுகிறது. அது ஈடு செய்யமுடியாத ஒரு நட்டம்."

படிமப்புரவு கூகிள்

இப்படி கிரகணத்தை பற்றி நான் யோசித்ததே இல்லை. வேறு யாராவது இப்படி யோசித்திருக்கிறார்களா? அட ….விஞ்ஞானிகள் கூட இந்த சூரியனின் ஏழரை நிமிட சக்தி இழப்பை பற்றி கவலைப்பட்டதாக தெரியலையே?

அதுவும் அந்த சின்ன வயதில் பஸ்மினாவுக்கு என்ன சூரியனின் சக்தி இழப்பை பற்றிய கவலை இருக்கும்?

யோசிக்கும் தான் ஞாபகம் வருகிறது. கிரகணம் பார்த்துட்டு எல்லோரும் திரும்பி வரும் போது அவள் அப்பா கொலையாகி கிடந்தார்….அதுவா இருக்குமோ?

இல்லை…அவளை மத்த சிறுவர் சிறுமிகளோடு மூன்று வருடங்களாக ஒரு வீட்டிலே பூட்டி வைக்கப்பட்டு மற்றப் பெண்களுடன் சேர்ந்து கம்பளம் நெய்து கொண்டு இருந்தாளாமே அவள்…சரியான சாப்பாடு இல்லாம…அங்கிருந்து தானே அவளோடு சேர்த்து எல்லோரையும் மீட்டார்கள்…

அவளே சொல்றாளே அந்த இருண்ட காலத்தை…

"எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் நினைப்பதெல்லாம் சாப்பாட்டைப் பற்றித்தான். இருட்டறையில் பூட்டி வைக்கப்பட்டு ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் வேலை செய்து வந்தேன். ஒருநாளா, இரண்டு நாளா? மூன்று நான்கு வருடங்கள். பகலும் தெரியாது, இரவும் தெரியாது. கைவிரல்கள் எல்லாம் வலியெடுத்துவிடும்; கண்கள் குத்திக்கொண்டே இருக்கும்: சாப்பிடக் கிடைப்பதுவோ உலர்ந்த ரொட்டியும் தேநீரும்தான். அதுவும் சீனி போடாத தேநீர். அதுகூட போதியது கிடைக்காது. விடிய சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மத்தியானச் சாப்பாட்டுக் கவலை வந்துவிடும். சாப்பாட்டு கிடைக்குமா என்ற கவலை. எவ்வளவு கிடைக்கும் என்ற கவலை. மத்தியானம் மறுபடியும் காய்ந்த ரொட்டித் துண்டும் பருப்பும் கொடுப்பார்கள்; வேலையில் பிழை விட்டால் அதுவும் கிடையாது. இரவு ஒன்றுமே இல்லை; தேநீர் மாத்திரம்தான்.

“உணவைப் பற்றிய ஸ்மரணைதான் எங்களுக்கு எந்த நேரமும். இந்த ஏக்கம்தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது. உயிர் வாழ்வதற்கு ஏக்கம் மிகவும் முக்கியமானது. அந்த நரகத்தில் இருந்து என்னை மீட்டீர்கள்; ஆனால் பசியிலிருந்து மீட்கவில்லை.

“என் தகப்பனாருடன் நான் இரவு வீட்டுக்குப் போவேன். அங்கே என் தகப்பனாரும், மூன்று அண்ணன்மாரும், காக்காவும் (தகப்பனாரின் தம்பி) இருப்பார்கள். அம்மா சமைத்த உணவை அவர்களுக்கு போட்டு ஹுஸ்ராவுக்கு அனுப்பி விடுவாள். தானும் மற்ற அக்காமாரும்-எங்களில் எல்லாமாக ஆறு பெண் குழந்தைகள்-அம்மாவைச் சுற்றி உட்கார்ந்தபடியே காத்துக்கொண்டு இருப்போம். அவர்கள் சாப்பிட்டபிறகு மிஞ்சியிருப்பதை நாங்கள் பங்குபோட்டுக் கொள்வோம். கால் வயிற்றுக்கும் காணாது.

“சில வேளைகளில் எங்கள் தகப்பனார் சாப்பிட உட்காரும்போது யாராவது விருந்தினர்கள் வந்து விடுவார்கள். அவர்களும் சாப்பிட்டால் எங்களுக்கு மீதமிருக்காது. அன்று நாங்கள் எல்லாம் பட்டினிதான். தண்­ரைக் குடித்துவிட்டு படுத்து விடுவோம். அவர்கள் சாப்பிடக் குந்தியவுடன் நானும் என் அக்காமாரும் அல்லாவைப் பிரார்த்தித்தபடியே இருப்போம், யாராவது விருந்தினர்கள் அன்று வந்து விடக் கூடாதென்று.

“முதன்முறையாக என் வாழ்க்கையில் இப்பொழுதுதான் நான் பசியில்லாமல் இருக்கிறேன்; நம்ப முடியவில்லை, என்றாலும் எனக்கு பயமாயிருக்கு. மேசையில் குவித்து சாப்பாட்டைக் காணும் போதெல்லாம் ‘நாளைக்கு கிடைக்குமா?’ என்ற பயம் பிடித்துவிடும். எவ்வளவுதான் துரத்தினாலும் இந்தப் பயம் போவதில்லை. எப்படியும் சாப்பாட்டைத் திருடிக் கொண்டு வந்து வைத்து விடுகிறேன். நான் என்ன செய்வேன்” என்று விக்கினாள்.

என்ன தான் அவளுக்கு திருப்தி கிடைக்கும் வரையில் சாப்பாடு கொடுத்தாலும், உண்மையில் அந்த பயம் அவளுக்கு கடைசி வரை இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.

அவளுடைய கேள்விகள் எல்லாம் என்னை இன்னும் குடைஞ்சுகிட்டே தான் இருக்கு…

"தேவர்களும் அசுரர்களம் பாற்கடலைக் கடைந்தபோது மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் இழுத்தார்கள் அல்லவா? கடைசியில் ஆலகால விஷம் தோன்றிய போது எல்லோரும் அதன் உக்கிரம் தாங்காமல் பயத்தில் ஓடிவிட்டார்கள். அப்பொழுது சிவபெருமான் தேவர்களின் கஷ்டம் நீங்குவதற்காக அந்த விஷத்தை கையிலே எடுத்து உண்டார். அந்த விஷமும் சிவபெருமானுடைய கண்டத்தில் நிரந்தரமாகத் தங்கி விட்டது; அவரும் நீலகண்டன் என்று பெயர் பெற்றார். சகல ஜ“வராசிகளும் ரட்சிக்கப்பெற்றன.

சிவபெருமான் அப்படி உண்ணும்போது ஒரு சிறுதுளி விஷம் தவறி பூமியிலே வந்து விழுந்தது. அதன் பிறகுதான் பாம்புகளுக்கு வாயிலே விஷம் வந்தது, இல்லையா?”

அப்படியானால் பாற்கடலை கடைந்தபோது ஆரம்பத்தில் வாசுகி வேதனை தாங்காமல் விஷம் கக்கியது என்று வருகிறதே! அது எப்படி?’ என்றாள்

அதற்கு முன் ஓரு தடவை , "பைபிள் வேகத்தில் கூறியதன்படி கடவுள் ஒளியை முதன் நாள் படைத்தார்; ஆனால் சூரியனையும் சந்திரனையும் நாலாம் நாள் தானே படைத்தார், இது எப்படி சாத்தியம்?” என்றாள்.

இவள் என்ன இப்படி யோசிக்கிறாள்? கடவுள் இவளுக்கு மட்டும் எப்படி இந்த திறமையை கொடுத்தார்?..

பதிலே இல்லாத கேள்விகள்…

உங்கள் யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

அவள் கடைசியாக கம்ப்யூட்டரில் எழுதியிருந்த வாசகத்தைப் படிக்கிறேன்…

"உஃகாப் பறவையை எனக்குப் பிடிக்கும். அதன் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதன் நீண்ட சிறகுகளம், வளைந்த மூக்கும், கம்பீரமும் வேறு எந்தப் பறவைக்கும் வரும்? ஆகாயத்தில் புள்ளிபோல வட்டமிட்டுக் கொண்டு நின்று இரையைக் கண்டதும் இறஞ்சிக் கொண்டு சிறகைக் குவித்துக் கீழே விழுந்து, கூரிய நகங்களால் அதைப் பற்றி மேலெழும்பும் லாவகம் இதற்கு மாத்திரமே அமைந்தது. உஃகாப் பறவையும் இதற்கு மாத்திரமே அமைந்தது. உஃகாப் பறவையும் என்னைப் போலத்தால் அதற்கும் சூரியகிரகணம் பிடிப்பதில்லை. ஏனெனில்….”

இதென்ன….இப்படி பாதியில் விட்டுவிட்டு போய் விட்டாளே.. அவளுக்கும் உஃகாப் பறவைக்கும் என்ன தொடர்பு? ஏன் அதற்கும் சூரிய கிரகணத்தை பிடிக்கவில்லை?

வலைத்தளத்தில் தேடுகிறேன்.

நீங்கள் யாராவது உஃகாப் பறவையை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

ஒரு வேளை அந்த மூன்று வருடங்கள், காற்று வசதியில்லாமல் அடைத்து வைத்து சரியான சாப்பாடு இல்லாமல் நாள் முழுவதும் கம்பளி நெய்யும் வேலையில் வைக்கப்பட்டதால், அவள் இதயத்தில் சின்ன பழுது இருக்கிறதுன்னு சொன்னார்களே.. அதனால் தானே அவளும் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்தாள்.. அன்று இதை டைப் செய்த படியே விழுந்து இறந்து கிடந்தாளே…அதை தான் சொல்கிறாளா…?

அவள் வாழ்க்கையில் பிடித்த கிரகணம் அது தானா…? அவளுடைய ஒட்டுமொத்த சக்தியையும் அது எடுத்து போய் விட்டதா? அதே தானே வெளிச்சத்தை மட்டுமே நம்பி வாழும் உஃகாப் பறவைக்கும்.., ?இருவருக்கும் சூரியகிரகணம் பிடிக்காத காரணம் இது தானா?

கதையை படித்து முடித்த பின்னும், சூரியகிரகணத்தின் நிழல் போல பஸ்மினா என்னுடன் கூடவே வருவது போலிருக்கிறது..

அவளுக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டுமே….

சூரியனை போல அறிவுச்சுடராய் ஒளி வீச வேண்டிய அவளும் அவளை போன்ற எண்ணற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் கிரகணம் போல வருவது அவர்களை கட்டாயமாக செய்ய வைக்கும் இந்த கம்பளி நெய்யும் வேலை தானே?..

நான் ஒரு உறுதி எடுத்துக்கொண்டேன் …

இனி எக்காலத்திலும் கம்பளி வாங்கும்போது அவை குழந்தைகளால் நெய்யப்படவில்லை என்ற உறுதிமொழியை விற்பவரிடம் வாங்குவோம் என்று..

எனக்கு தெரியும் நீங்களும் அப்படி தான் இனி செய்வீர்கள் என்று…

இனி வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் வரும் சூரிய கிரகணத்தின் போதெல்லாம் பஸ்மினாவை போன்ற குழந்தை தொழிலாளர்கள் வாழ்வில் விழுந்த கிரகணம் தானே நினைவுக்கு வரும்? அப்போது அதை ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை. இதற்கு நீங்கள் விடை சொல்வீர்களா ?

படித்ததற்கு நன்றி.

ஸ்ரீஜா.

திங்கள், 31 மே, 2021

கழுகு, பருந்து போன்ற பறவைகளும் கீரி, ஹனிபேட்சர் போன்ற சிறு விலங்குகளும் கொடிய விஷமுள்ள பாம்புகளை உண்ணும் போது விஷம் அவைகளை பாதிக்காதா? பாம்புகள் அவைகளை கடித்தால் அவை இறந்து விடாதா?-

 நல்ல சிந்தனையுடன் கூடிய கேள்வி…

முதலில் விஷத்திற்கும் நஞ்சுக்கும் உள்ள வித்யாசம் கண்டறிவோம்.

அப்படியே யோசிச்சுகிட்டே இருங்க.அதுக்குள்ள ஒரு சின்ன படம் பார்த்துட்டு வந்துடலா

சரி அதுக்குள்ள தெரிஞ்சுருப்பீங்களே…

அதே தான் ..இந்த விஷம் , நஞ்சு என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டாலும் ஒன்றல்ல. சரி தான.

  • அவை இரண்டும் தீங்கு விளைவிக்கும் அல்லது கொல்லக்கூடிய ஒரு நச்சுப் பொருள் தான்,
  • ஆனால் அதிலுள்ள முக்கிய வேறுபாடு, துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டவருக்கு அது ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

என்ன தெரியுமா?

வேடிக்கையாக சொல்வதுண்டு…

"விஷம்" என்கிற "பாய்சன்" என்றால், கடித்தவருக்கு ஆபத்து.ஆனால்..

"நச்சு" என்கிற venom கடிப்பட்டவருக்கு ஆபத்து கொடுக்கும் என்பார்கள்.

  • விஷம் என்பது விழுங்குவது, சுவாசிப்பது அல்லது உறிஞ்சுதல் மூலம் உடலுக்குள் நுழைகிறது.

விஷ விலங்குகள் பெரும்பாலும் தங்கள் இரையைத் தீவிரமாகத் தாக்காது, ஆனால் அதை சாப்பிடுவது, தொடுவது அல்லது தொந்தரவு செய்யும் போது, விஷத்தை வெளியிடுகின்றன.

  • ஆனால் நச்சு எனற விஷம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாவது. ஒரு கடி அல்லது சிரிஞ்ச் போன்ற பற்கள் வழியாக விஷத்தை தீவிரமாக உடலுக்குள் செலுத்தப்படுகிறது.

அது சிறிய,பெரிய மூலக்கூறுகளின் கலவையைக் கொண்டிருப்பதால், உடலுக்குள் நுழைய ஒரு காயம் தேவைப்படுகிறது. மேலும் வேகமாக செயல்பட, இரத்த ஓட்டத்தில் அது கலக்க வேண்டும். இந்த காரணத்திற்காகத் தான் , நச்சு விலங்குகள் தங்களை தற்காத்துக் கொள்வதில் மிகவும் தீவிரமாக செயல்படுகின்றன.

  • ஒரு விலங்கு விஷம் மற்றும் நச்சு இரண்டும் கொண்டு இருக்கலாம்..

சரி..…நஞ்சை உட்செலுத்துவதை விட, குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

நஞ்சை விழுங்குவது எந்தவொரு விளைவையும் நிச்சயமாக ஏற்படுத்தாது. வாயில் வெட்டுக்காயங்கள் இருந்தால் மட்டுமே , அது இரத்த ஓட்டத்தில் நுழையக்கூடும்.

ஏனென்றால், வயிற்றில் உள்ள அமிலங்கள், இரத்த ஓட்டத்தை அடைவதற்கு முன்பு வேறு எந்த புரதத்தையும் போல, விஷத்தை உடைக்கும்- கோட்பாடு கொண்டது.

இந்த பரிசோதனைக்கு யாரும் தயாராக இருக்கிறீர்களா …? 😂

அதனால் தான் கழுகு, பருந்து போன்ற பறவைகளும் கீரி, ஹனிபேட்சர் போன்ற சிறு விலங்குகளும் கொடிய விஷமுள்ள பாம்புகளை உண்ணும் போது விஷம் அவைகளை பாதிப்பதில்லை.

சரி…பாம்புகள் அவைகளை கடித்தால் அவை இறந்து விடாதா?

கோல்டன் ஈகிள் பற்றி தெரியும்..அநேகமாக உலகின் மிக ஆபத்தான, .மிகப்பெரிய, வேட்டையாடக்கூடிய, அதிவேகமாக பறக்கக்கூடிய, அதேசமயம் அதிவேக டைவ் அடிக்கக்கூடிய பறவை.அதன் நம்பமுடியாத கண் பார்வை மற்றும் செவிப்புலன் குறிப்பிடதக்கவை . தங்கக் கழுகின் எடையில் பாம்பு 1/3 பங்கு தான் இருக்கும்.இவற்றின் இரை விஷ பாம்புகள் தான்

கழுகுகள் மற்றும் பருந்துகள், காற்றில் டைவிங் செய்து வருவதை, பாம்பு பார்க்கவோ, அதன் வாசனையை உணரவோ வாய்ப்பே இருக்காது.மேலேயுள்ள வீடியோவை பார்த்திருப்பீங்களே..😃 கடல் கழுகு கடல் பாம்பை தண்ணீரிலிருந்து பிடித்து தன் இடத்திற்கு எடுத்துச் சென்று சாப்பிடும் .

அந்த வீடியோவில் பார்த்திருப்பீர்கள்…கழுகு பாம்பைக் கையாளும் விதத்தை.

  • ரேஸர் போன்ற கூர்மையான கண்பார்வை மூலம், ஒரு கழுகு பாம்பை ஒரு பெரிய உயரத்தில் இருந்து பார்க்க முடியும்.
  • கழுகு அதன் கழுத்தை பிடித்து கவ்வி அதனுடைய ராஜ்யமான வானத்தில் பறக்க ஆரம்பிக்கும்.
  • நாகப்பாம்பு அதை கூர்மையான பற்களை பயன்படுத்துவதை விடுத்து, மயக்கமாகக் கூடிய உயரத்திற்கு பறக்கும்.
  • ராஜ நாகம் அதன் நாக்கை நீட்டி கழுகு நகங்களின் பிடியை விட முயற்சிக்கும்.ஆனால் கழுகின் எல்லையில் அதனால் போராட முடியாது. அதன் பிறகு, கழுகு முற்றிலும் வான்வழி தாக்குதலால். தன் இரையை மூழ்கடித்துவிடும்
  • பாம்பு திருப்பி கடிக்க முடியாத வகையில் கழுகின் கூர்மையான நகங்கள் பாம்பை ஒரு இறுக்கமான பிடியுடன் பிடித்துக் கொள்கின்றன,
  • திடீரென காற்றில் பறப்பது நாகத்தை திசைதிருப்ப போதுமானது..விஷம் கொண்ட பாம்பென்றாலும், தாக்குதல் காற்றில் இருந்து வரும்போது அது பாம்பை பாதிக்கிறது.
  • கோப்ராஸ் ஒருபுறம் இருக்க, கழுகுகள் இந்த வான்வழி தாக்குதல் முறையால் வைப்பர்கள் மற்றும் பிற கொடிய உயிரினங்களையும் உட்கொள்கின்றன.
  • ஒரு மரம் அல்லது ஒரு பாறையில் கழுகு பின்னர் இறங்குகிறது. இது பாம்பை திகைக்க வைக்கிறது.
  • கழுகுகள் ஒருபோதும் நாகத்துடன் ‘சண்டை’ போடும் சூழ்நிலைக்கு வராது.
  • பாம்பின் தலையைக் கடித்த பிறகு, கழுகு சுவையான நாக இறைச்சியின் உணவை அனுபவித்து உண்ணும்.
  • கென்யா, தான்சானியா மற்றும் அந்த பகுதியில் உள்ள பிற நாடுகளில் உள்ள செயலாளர் பறவை என்று அழைக்கப்படும் மற்றொரு நீண்ட கால் கழுகு இனங்கள் உண்மையில் கொடிய நாகப்பாம்புகளையும் பிற பாம்புகளையும் சாப்பிடுவதற்கு முன்பு நீண்ட கால்களால் அதைக் கொன்றுவிடுகின்றன.
  • கோப்ராஸ், வைப்பர்ஸ், ராட்டில் ஸ்னேக்ஸ் அல்லது மாம்பாஸ் போன்ற பாம்புகளுடன் சண்டையிட்டால் 80% ஜெயிப்பது கழுகுகள் தான்மற்ற வகை பாம்புகள் என்றால் 80% பாம்புகள் கழுகுக்கு இரையாகும் அதுவே கிங் கோப்ரா, ரெட்டிகுலேட்டட் பைதான், பெர்முடீஸ் பைதான் அல்லது பச்சை அனகோண்டா என்றால் கழுகுகள் 35%, .ஜெயிக்கும். பாம்புகளை உணவாக கொள்ளும் சர்ப்ப ஈகிள் என்று அழைக்கப்படும் கழுகு இனம் உள்ளது..
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://video.nationalgeographic.com/video/news/00000153-ebd4-dbf2-a1f3-effca9e90000&ved=2ahUKEwiIkJm74bnuAhV2ILcAHaf6A0UQ28sGMAB6BAgBEAg&usg=AOvVaw2ufWN_fCkeEhmbpqx7ZCHO

கோப்ராஸ் ஒருபுறம் இருக்க, மற்ற வகை பாம்புகளை வழக்கமாக உண்ணும் பிற பறவைகள் ஆந்தைகள் மற்றும் மயில் போன்றவை. . தவளை முழு பாம்பையும் சாப்பிடுகிறது.

பறவைகளில், மயில்கள், நாகத்துடன் ‘சண்டையில்’ சிக்கினாலும். அது தான் பொதுவாக வெல்லும்.

விலங்குகளில், மிகப்பெரிய கோப்ரா கொலையாளி என்றால் அநேகமாக கீரிப்பிள்ளைகள் தான்

ஒரு கோப்ரா ஆபத்தான வேட்டையாடும் என்ற போதிலும், மங்கூஸ்கள் எனப்படும் கீரிப்பிள்ளைகள் கோப்ராஸை சாத்தியமான உணவாகப் பார்க்கின்றன.

  • பாம்பின் விஷம் ஒரு முங்கூஸுக்கு எதிராக, கிட்டத்தட்ட பயனற்றதாக இருக்கும்.
  • இங்கே. பாம்பு விஷத்தில் பொதுவாகக் காணப்படும் செயலில் உள்ள மூலப்பொருள், ஆல்பா-நியூரோடாக்சின்.
  • தசை செல்களின் மேற்பரப்பில் உள்ள அசிடைல்கொலின் ஏற்பி மூலக்கூறுகளுடன் தன்னை இணைப்பதன் மூலம் செயல்படுகிறது. அவை தசைகள் சுருங்க அல்லது ஓய்வெடுக்கச் சொல்கின்றன.
  • முங்கூஸின் அசிடைல்கொலின் ஏற்பிகள் பாம்பு விஷத்திற்கு எதிர்ப்பு அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
  • இந்த ஏற்பிகள் நரம்புகளிலிருந்து செய்திகளைப் பெற வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் ஆல்பா-நியூரோடாக்சின் செய்திகளைத் தடுக்கிறது, அதனாலேயே அவை செயலிழந்து இறுதியில் பாதிக்கப்பட்டவரைக் கொல்கிறது.
  • ஒரு முங்கூஸ் ஒரு நாகத்தின் நரம்பு வேலைநிறுத்தங்களை வெற்றிகரமாக ஏமாற்றி, அதை எளிதாகக் கொன்று விடுகிறது.
  • ஒரு நாகம் அல்லது பிற பாம்புகளுடன் சண்டையிடும் போது ஒரு முங்கூஸுக்கு கை கொடுப்பது என்னவென்றால், அதன் மின்னல் வேகமான அனிச்சையாக செயல்படும் அதன் தலையில் உள்ள ரோமங்கள் தான், அது தான் பாம்பு அதனை பிடிப்பதை ஊடுருவி கடிப்பதை கடினமாக்குகிறது.
  • ஒரு நாகம் ஒரு முங்கூஸைச் சுற்றிலும் வளைக்கும்போது கூட, அது தன் பிடியை எளிதில் இழப்பதில்லை.
  • முங்கூஸ்கள் பாம்புகளை விட உடல் ரீதியாக வலிமையானவை, அவற்றின் வலுவான தாடைகள் ஒரு நாகப்பாம்பின் முதுகெலும்புகளை முடக்கி முடக்குகின்றன.

ஒரு முங்கூஸ் மற்றும் ஒரு நாகம் இடையே நடக்கும் சண்டையின் போது, ​கோப்ராவின் விஷக் கடி தவிர, முங்கூஸிற்கு ஒரு நாகத்தைக் கொல்ல தேவையான அனைத்து தன்மைகளும் உள்ளன.

இந்த இரண்டும் மோதுகையில், எதிரியின் விஷத்தை வேகம், வலிமை மற்றும் எதிர்ப்பைக் கொண்ட வலுவான முங்கூஸ் சமாளித்து ஜெயிக்கிறது.

கோப்ராவின் விஷக்கடியால் உள்ளே ஏற்பட்ட வேலைநிறுத்தங்களைப் பொருட்படுத்தாமல் பாம்பின் தலையை அச்சமின்றி தாக்கும்.

கோப்ராஸ் போன்ற விஷ பாம்புகளை அவை தவறாமல் தாக்கி சாப்பிடுவதால், மங்கூஸ்கள் நோயெதிர்ப்பு மற்றும் விஷத்தை எதிர்க்கும் தன்மை கொண்டவை, ஏனென்றால் அவை விசேஷமான அசிடைல்கொலின் ஏற்பிகளைக் கொண்டுள்ளன, அவை, விஷத்தின் நச்சுகள் அவற்றைக் கொல்லவிடாமல் தடுக்கின்றன.

இவ்வாறு, ஒரு விஷ பாம்பு கடித்தால், முங்கூஸ் அதன் சுறுசுறுப்பு, அடர்த்தியான கோட் மற்றும் சிறப்பு அசிடைல்கொலின் ஏற்பிகள் காரணமாக விஷ பாம்புகளை கொல்வதில் திறமையானது என்பதால், முங்கூஸ் இறப்பது சாத்தியமில்லை.

ஏன் மனிதனே கூட விஷப் பாம்புகளை உணவாகக் கொள்வதை கேட்டும் பார்த்தும் இருக்கிறோமே…😃 உணவாகவோ, அப்படியே விழுங்குவதாலோ அந்த நஞ்சு எந்த விளைவும் ஏற்படுத்துவதில்லை என்பதால் தான்.

அதற்காக …

இந்த நஞ்சு உட்கொண்டதா அல்லது உட்செலுத்தப்பட்டதா என்று ஆராய்ச்சியில் இறங்காமல், சுற்றுப் பகுதியில் உள்ள விஷ மற்றும் நச்சு உயிரினங்களைப் பற்றி அறிந்திருப்பது மற்றும் அவற்றை முயற்சி செய்து தவிர்ப்பது, பாதுகாப்பானது.🙏🙏

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

படிமப்புரவு கூகிள்