அழகியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழகியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூன், 2021

இரவு நேரத்தில் குளிக்கலாமா?

 நம்மில் நிறைய பேர் , உடல் அழுக்கு நீக்குவது என்பதையே குளித்தல் என நினைக்கின்றனர். அதனாலே தான் வேலை முடிந்து வீடு திரும்பும்போது உடல் அசதி தீர குளிக்கிறோம் என்கின்றனர்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் காலையில் பெண்கள் என்றால் வீட்டு வேலையையும் வயலுக்கு போவதையும் முடித்துவிட்டு மதிய உணவையும் உண்டுவிட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்து குளிக்கப்போகிறார்கள். காட்டு வேலைக்கு போய் விட்டு மாலையில் வந்து குளிப்பதை, நாளடைவில் குளிப்பதையே மாலை என்று ஆக்கி விட்டனர்.

"குளிப்பது" என்றால் என்னன்னு தெரிஞ்சால் தான் எப்போது குளிக்கலாம், எப்போது உடலை கழுவலாம்ன்னு தெரியும்.

நம்ம உடல் இரவு வேளையில் தான் ஒவ்வொரு உறுப்பும் சுத்தப்படுத்தும் வேலையை செய்யும்னு படிச்சுருக்கோம்.இந்த இரவு 11 மணியிலிருந்து 3 மணி வரை ஒவ்வொரு நாளும் நடக்கும் இந்த சுத்தம் செய்யும் பணியால் உஷ்ணமடைந்து இருக்கும். அதை குளிர்விப்பதை தான் "குளித்தல் " என்றார்கள். அது கூட எப்படி செய்யவேண்டும் என்றும் நம் பெரியவர்கள் காட்டியிருக்கிறார்கள்.

ஊரில் ஆற்றில் குளிக்க இறங்கும்போது, உடனே ஆற்றில் இறங்கிவிட மாட்டார்கள். முதலில் காலை நனைப்பார்கள் பார்த்திருக்கிறோம் . இதனால் உடலில் உள்ள சூடு மேல்நோக்கி நகர்ந்து துவாரங்கள் வழி வெளியேறும். பிறகு சிறிது தண்ணீரை எடுத்து உச்சந்தலையில் தெளித்துக் கொள்வார்கள் இப்படி செய்வதால் அங்கிருக்கும் உஷ்ணம் காது கண் நாசி மூக்கு வழி வெளியேறும். அதற்கு பிறகு தான் தண்ணீருக்குள் இறங்கி ஒரு முழுக்கு போடுவார்கள்.

தலையிலிருந்து கால் வரை தண்ணீர் ஊற்றப்படுவதால் உடல் குளிர்ந்து, உஷ்ணம் குறைக்கப்படுகிறது.

இப்படி குளிப்பதிலும் ஒரு முறையை கடைபிடித்ததால் தான், உடம்பில் உள்ள பஞ்சபூத்ங்களும் சம நிலையில் இருக்குமாறு பார்த்து கொண்டார்கள்.

இந்த பஞ்சபூதத்தில் ஒன்று அதிகமாகி ஒன்று குறைந்தாலும் பிரச்சினை தான் . அதிகாலை 6 மணிக்குள் குளிக்கும்போது, தான் நம் உடலில் உள்ள பஞ்சபூதங்கள் சமநிலைப்படுகிறது.

அடுத்து ஒரு சந்தேகம் வரும்.தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பது தான்குளியல் என்றால், தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா?

படிமப்புரவு கூகிள்

உண்மையில் தினமும் தலைக்கு குளிப்பது என்பது நல்லதல்ல. அப்படி தினமும் குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை நீங்கி, முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு குளிப்பது தான் சிறந்ததும் கூட.

அப்படியென்றால் தலையை நனைக்காமல் மற்ற உடல் பகுதிகளில் நீர் ஊற்றப்படுவதை உடல் கழுவுதல் என்ற அர்த்தத்திலேயே கொள்ளவேண்டும் .அது குளியல் கிடையாது.

அதனால், காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது ஆரோக்கியத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் உடலில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் சொல்வதையும் உடல் கழுவுதல் என்ற முறையிலேயே பார்க்கவேண்டும்.

இரவில் உடல் கழுவுவதால் என்னென்ன நன்மை ?

  • முகப்பருக்கள் வருவதை தடுக்கலாம்.
  • பருவகால அலர்ஜிகளை எதிர்க்கும்
  • மிதமான வெப்பம் டென்ஷன் மற்றும் பதட்டத்தை தடுக்கும்,
  • உளவியல்ரீதியாக வும் அமைதியை ஏற்படுத்தும்.
  • சூடான நீரில் குளிப்பது நாள் முழுவதும் செய்த வேலைக்கு மருந்தாக இருக்கும்.
  • இரவில் குளித்து விட்டு தூங்கும் போது தூக்கத்தின் தரம் பலமடங்கு அதிகரிக்கும்.
  • ஆரோக்கியமான சருமம்

அதனால் மிதமான வெதுவெதுப்பான நீரில் மாலையில் அல்லது இரவில் உடல் கழுவலாம்.

சிலர் சொல்வதுண்டு."நான் இரண்டு மூன்று முறை தினமும் தலை குளித்தாலும் ஒன்றும் ஆனது இல்லை" என்று.

ஒவ்வொருவரின் உடலும் வித்யாசப்பட்டது. வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும்

வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.

பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.

கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’

என்று வள்ளுவரே சொல்லியுள்ளார்

வாதம், பித்தம் கபம் என்ற இந்த மூன்றும் உடலுக்கு ஏற்ப மாறுபடும். கப உடம்பு கொன்டோர் அடிக்கடி குளித்தால் சளி இருமல் தொல்லை ஏற்படும்.

அதனாலே அவரவர் உடலில் இதில் எது மிகுதியாக உள்ளது என்று பார்த்து அதற்கு ஏற்ப அவர் உடலை குளிர்சிப்படுத்துவதும் அதற்கேற்ப உணவு உண்பதும் நன்மை தரும்.

நன்றி.

ஸ்ரீஜா.

திங்கள், 31 மே, 2021

கண்ணாடி அணிவதை தவிர்க்க எதாவது வழி கூற முடியுமா?

 பழைய சினிமாப் படங்களை பார்த்திருக்கிறேன். .சில வருடங்கள் கழிந்ததுன்னு காட்ட, கதாநாயகனுக்கோ இல்லே..கதாநாயகிக்கோ🤣 கண்ணாடி மாட்டி விட்டுடுவாங்க.

அதனாலோ என்னவோ நமக்கெல்லாம். கண்ணாடி போடுறதுனாலே, அது வயசோடு சம்பந்தப்பட்டதாகிட்டது…😀

உண்மை தானே… எந்த ஹீரோயினாவது கண்ணாடி போட்டு, அவரை ஹீரோ விரும்புவது போல காட்டுறாங்க?☺️

அதனால் தானோ என்னவோ என் அக்கா பெண் கல்லூரி வரை கண்ணாடி போட்டவள், பிறகு போட மாட்டேன்,.. லேசர் சிகிச்சை செய்துக்கிறேன்னு கேட்டாள்.

இது இப்போதெல்லாம் சகஜம் ஆகி விட்டது..அதுவும் கல்யாணம்ங்கிற போது "கண்ணாடியும் வேண்டாம்..காண்டாக்ட் லென்சும் வேண்டாம்"…என்கிறார்கள்.☺️

அவள் ஆசைப்பட்டது போல "நாங்க இருக்கிறோம்..எங்க கிட்டே வாங்க"ன்னு சொன்னவங்க கிட்டேயே போய் பண்ணியாச்சு.😃 .ஒரே நாள் தான் .கண்ணாடியையும் தூரப் போட்டாச்சு..

அதுக்கப்புறம் பாருங்க…விதி எப்படி கும்மியடிச்சுதுன்னு..🤔 இவள் எழுதின போட்டித் தேர்வில் ஜெயிச்சதாவும் ..உடல் தகுதி தேர்வு (fitness டெஸ்ட்) ..

அது ஒரு formal டெஸ்ட் இருக்கும். எந்த அரசு துறையிலும் வேலைக்கு சேரும்.முன் நடத்தப்படும்

அட்டெண்ட் பண்ணிட்டு வேலைக்கு சேர இராணுவத்திலிருந்து லெட்டர் வந்தது.😃

ஆனா..

அங்கே, இந்த அறுவை சிகிச்சை செய்துக்கிட்டு லென்ஸ் போட்டதை, ஏத்துக்காம, திருப்பி அனுப்பிச்சுட்டாங்க..😣

சரி நான் அந்த மாதிரி துறை வேலைக்கு போகப் போறதில்லைன்னு சொல்றீங்களா?

ஒரு விஷயம்….கண்ணில் உள்ள லென்ஸை தூக்கிப் போட்டு புதுசா மாற்ற, இது சாதாரண விஷயம் இல்லே.

குழந்தை பிறப்பு இனி இல்லைன்னு பெண்கள் யாரும் கர்ப்பப்பையை, பிரச்சினை இருந்தால் ஒழிய, தூக்கியெறிஞ்சுறது இல்லயே..😃

உடலின் ஒரு உறுப்பு மாற்றி இன்னொன்று உள்ளே நுழைக்கப்படும் போது, அதை எந்த அளவிற்கு உடல் ஏற்றுக்கொள்கிறதுன்னு இருக்கு. அதுவும் கண் ரொம்ப சென்சிட்டிவ். ..எல்லோருக்கும் அது சரியா பொருந்துறது இல்லே.

சிலருக்கு கண்ணின் விழித்திரை அளவு சிறிதா இருக்கலாம், .இல்லே…கண் ரெட்டினாவின் வலு குறைந்து இருக்கலாம். அவர்களுக்கெல்லாம்.இந்த சிகிச்சை கண்டிப்பா பின் விளவுகளை ஏற்படுத்தும் என்ன..உண்மையா டாக்டர்களே ஒத்துக்க மாட்டாங்க. அப்படியே செய்து ஏதும் ஆச்சுன்னா, விதி வலியதுன்னு…😣

நான் சங்கர நேத்ராலயா கண் மருத்துவரை ஒரு தடவை வேடிக்கையா கேட்டேன்…

"டாக்டர் காண்டாக்ட் லென்ஸ் போடுறது..இல்லை இந்த அறுவை சிகிச்சை செய்றதுன்னு ரெண்டு வழி இருந்தா நீங்க உங்களுக்கு எதை தேர்ந்தெடுப்பீங்க?"

அதுக்கு அவர் சொன்ன பதில் தான் முக்கியமானது…

"கண்ணாடி"

பதில் வேணும்னா பிற்போக்குத் தனமா இருக்கலாம்.ஆனால் அதுக்கு அவர் சொன்ன காரணங்கள் நிறைய..

லென்ஸ் அணிந்த கண்கள் கண்ணுக்கு மேலும் பாதிப்பையே உண்டாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிப்பதை நாம நிச்சயம் கவனத்தில் கொள்வது நல்லது.

இப்பல்லாம் முப்பது அடி தூரத்தில் வரும் வண்டியோட பெயர்ப் பலகையாகட்டும், தரையில் விழும் குண்டூசியா இருக்கட்டும், துல்லியமாகக் கண்டுபிடிக்கும் கூர்மையான பார்வைத்திறனைக் கொண்டவர்கள் நம்மில் எத்தனை பேர்? கண்ணாடியைக் கழட்டி துடைத்து மாட்டின பிறகும் சந்தேகத்தோடு அதை படித்து , கேட்டு அப்புறம் தான் அதிலே ஏறுறவங்க தான் அதிகம்….

நம்ம தாத்தா பாட்டியெல்லாம்.கண்ணாடி போடாம பேப்பர் படிப்பாங்க .கண்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்பாங்க..கீரை, காய்கறிகள்னு கண்ணுக்கு பலம் சேர்க்கிறதை அதிகமா எடுத்துக்குவாங்க.

ஆனா நாம . swiggy zomota இல்லாம லாக் டவுனில் தவிச்சவங்க எத்தனை பேரு தெரியுமா..😄 கீரை செய்ய நேரமில்லை..காய்கறி கட் பண்ண நேரமில்லை..அப்படியே நேரம் இருந்தாலும் அதுல நிறைய நமக்கு பிடிக்காது..

இப்போ முக்கால்வாசி பேருக்கு பஸ் நம்பர் தெளிவாத் தெரியிறதில்லை. பத்து வயசுக் குழந்தை கூட, கண்ணாடி போட்டு இருக்கு..

குழந்தைகளை தாக்கக்கூடிய மையோப்பியா என்று சொல்லக்கூடிய கிட்டப்பார்வை குறைப்பாட்டை ஆரம்பத்திலேயே சரி செய்யமுடியும். பார்வை குறைபாட்டின் மோசமான பின்விளைவுகளை தெரிந்துக் கொள்ளாமல், காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தையின் பார்வைத்திறனை மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாகும் என்று கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

கண்ணுக்கு தான் இப்போ நிறைய வேலை இருக்கே.. கணினி பயன்பாடு, புத்தகம் படிப்பது, அதிக வெளிச்சம் இருக்கிற திரைகளைக் கொண்ட டெக்னாலஜிகள் ..இது எல்லாம் கண்களைக் கூச வைக்குது . இப்படி கண்பார்வைக்கு வேட்டு வைக்கிற செல்ஃபோன், டீவி, கம்ப்யூட்டர் கேம்ஸ்னு தூங்கும் நேரம் போக, மத்த நேரத்தில் கண்ணுக்கு வேலை கொடுக்கிறோம். சொல்லப்போனால், கண்ணுக்கு வேலை கொடுத்துக்கொண்டே, தூங்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்கிறோம்.

கல்லீரல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றாலும் கண்ணில் குறைபாடு உண்டாகும்.

கண்ணாடி, லென்ஸ், அறுவை சிகிச்சை என்று இழந்த பார்வையை மீட்கும் சிகிச்சைகளைத் தொடர்ந்தாலும் இயற்கை கொடுத்த பொலிவான கண்களில் மீண்டும் சரியான வெளிச்சத்தைக் பார்க்க முடியாது என்பது தான் உண்மை!!.

உணவில் சத்தில்லை; கண்ணுக்கு ஓய்வில்லை. இதுதான் இன்னிக்கு கண்ணான பிரச்சினை! !☺️

என்ன செய்யலாம்?

  • நல்ல காற்றோட்டமான வெளிச்சமான இடத்தில் வேலை செய்யும்போது வெளிச்சம் நேரடியா கண்களைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இருளான இடத்தில் இருக்கும்போது, ரொம்ப வெளிச்சம் உள்ள திரைகளை கண்ணுக்கு பக்கத்தில் வைத்து பார்ப்பதைF நிறுத்துவது நல்லது.
  • டிவி , கம்பியூட்டர் முன்னால ரொம்ப நேரம் இருக்காமல் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டும் பார்க்க வேண்டும். குறிப்பா 8 அடி தொலைவில் தள்ளி அமர்ந்து பார்க்க வேண்டும். முக்கியமா குழந்தைகள்…
  • கம்ப்யூட்டரையோ, டீவியையோ, செல்ஃபோனையோ கண்சிமிட்டாமல் பார்ப்பதைத் தவிர்த்து அவ்வப்போது கண்களைச் சிமிட்டுவதும், கண்களில் குளிர்ந்த நீரால் கழுவுவதும் கண்களைப் பாதுகாக்கும்.
  • கண்ணில் குறைபாடு இருந்து டாக்டர் கண்ணாடி போட சொன்னால் கூச்சமில்லாமல் போட்டுக் கொள்ளுங்கள். நல்லது தானே அது ‘ஒருத்தர் கண்ணைப் பாத்தே அவன் நல்லவனா, கெட்டவனானு சொல்லிடலாம்’ என்பார்கள். .அப்படி கண்டு பிடிக்காம தடுக்கிற மாதிரி கண்ணை ஷோகேசுக்குள்ளே வச்சுக்கிறது…😚
  • மருத்துவக் கட்டுரைகள் படிச்சாலே சத்தான ஆகாரமில்லாததாலும், உணவு முறைகளை மாற்றியதாலும் தான் இந்த கண் பார்வைக் குறைவு வரக் காரணம்ன்னு தெரியும்.
  • ஆரம்பத்தில் கண்டுபிடிச்ச மைனஸ், ப்ளஸ் வித்தியாசம் போகப்போக சத்தான உணவால் சரி செய்யப்பட்டு விடும்.
  • கண்களைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ அதிகமுள்ள கேரட், பீட்ரூட், பூசணி, வெண்டைக்காய், பசும்பால், மோர், தயிர், முளை கட்டிய தானியங்கள், கொத்துமல்லி... தின சாப்பாட்டில் இதில் ஏதாவது ஒன்று இருக்கனும். அதே போல, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, பழங்களில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, பேரிச்சை, நெல்லிக்காய், ஆப்பிள் நிறைய சேர்த்துக்கொள்ளனும் .

இதெல்லாம் இப்ப யாரு கடைப்பிடிக்கிறா…யாரு சொல்லிக் குடுக்குறாங்கன்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது 😁

இத போன்ற ஒரு பயிற்சியைத் தான் .பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தோடும் மருத்துவமனையோடும் இணைந்த The School for perfect eye sight, கண்ணாடியை போடாமலேயே கண் பார்வையை சீராக்க கொடுக்கிறார்கள்.

The School for perfect eye sight,

அதற்கு முன்பதிவு உண்டு.குழந்தைகளுக்கு முன்னுரிமை உண்டு. அங்கேயெ ஒரு வாரம் தங்கி பயிற்சி எடுக்க வேண்டும்.குழந்தையுடன் ஒருவர உடன் இருக்க அனுமதி உண்டு.

என் பெண்ணிற்கு இப்படி தான் கண்ணாடி போட வேண்டியதாகியது. நாங்கள் அங்கு போய் அப்படி ஒரு வாரம் தங்கி அவர்கள் சொல்லிக் கொடுக்கும் எளிய பயிற்சிகசளை தொடர்ந்து செய்ய, அந்த வார இறுதியில் அவளுக்கு நடத்தப்பட்ட கண் பரிசோதனைக்கு பிறகு கண்ணாடியை கழற்றி விட்டாள்.🤣

அவள் சிறு வயது என்பதாலும், குறை கண்டவுடன் சென்று பயின்றதாலும் சரியானது என்றார்கள்.நிறைய பேருக்கு கண்ணாடி பவரில் பெரிய மாற்றமே ஏற்பட்டது என்றார்கள்

எவ்வளவு விரைவாக அதை செய்ய தொடங்குகிறோமோ அந்த அளவிற்கு பார்வை குறைபாடு சரி செய்யப்படுகிறது என்றார்கள்.எந்த மாத்திரை,மருந்தும் கிடையாது. இயற்கையோடு ஒன்றிய கண் பயிற்சி மட்டுமே.முக்கியமாக அவர்கள் இந்த சேவைக்காக பணம் எதுவும் கேட்டுப் பெறுவதில்லை.நாமாக. நம் விருப்பத்திற்கு அங்கிருக்கும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தலாம்.

இது எங்கள் சொந்த அனுபவம். நீங்களும் முயன்று பாருங்கள்…

கண் மருத்துவரது ஆலோசனையின்படி கண்களுக்கு கொடுக்க வேண்டிய பயிற்சிகளைத் தவறாமல் செய்யுங்கள். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் மட்டுமல்ல குழந்தைகள் முதல் அனைவருமே வருடத்துக்கு ஒருமுறை கண்பரிசோதனை செய்து கொள்வது நல்லது…

அதே சமயம் நம்ம பார்வை பொறுத்து கவனம் ரொம்ப முக்கியம்ன்னு சொல்றேனில்லை😁.

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

நன்றி விகடன் ஜோக்ஸ்..

சனி, 29 மே, 2021

உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி எது? ஏன் அப்படி?

 ஓஷோ சொன்ன கதை இது.

போதிதர்மரை சீனாவுக்கு அவருடைய குருவாகிய பிரயக்தாரா அனுப்பிய போது ஏற்கனவே, சீனாவில் புத்த மதம் ஸ்தாபிக்கப்பட்டு இருந்தது அங்கு கிட்டத்தட்ட 200000 புத்த பிட்சுகளும் புத்த மத கோவில்களும் இருந்தன

அப்போதைய சீன பேரரசர் யூ என்பவர் தன்னுடைய செல்வங்களையெல்லாம் புத்தமதத்தை அங்கு நிலைநாட்டுவதற்காக செலவழித்துக் கொண்டிருந்தார்

போதிதர்மர் சீனாவை அடைவதற்கு முன்பே அவருடைய புகழ் பேரரசின் காதிற்கு ஏட்டியிருந்ததால், அவரை வரவேற்க வந்து காத்திருந்தார்

இவரைப் பார்த்தவுடன் , அரசரின் உள்ளத்திலே ஒரு இனம் புரியாத பயம் ஏற்பட்டு விட்டது மென்மையான மனது கொண்டவராக போதி தர்மர் இருந்தாலும் , இரண்டு பெரிய கண்களையும், , பார்ப்பதற்கு அச்சம் ஊட்டக்கூடிய அளவிற்கு முகத்தை கொண்டவராகவும் இருந்தார்

பேரரசர், போதிதர்மரை பார்த்தவுடன், " நான் புத்த மதத்திற்காக நிறைய பணிகள் செய்துருக்கிறேன் . அதற்கு பதிலாக எனக்கு என்ன வெகுமதி கிடைக்கும் ?" என்று கேட்டார்

உடனே போதிதர்மர் கடும் கோபத்துடன் சீற்றமாக "உனக்கு ஏழாவது நரகம் தான் கிடைக்கும்" என்று சொன்னார்

இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற பேரரசர் "நான் என்ன தவறு செய்தேன். என்னால் முடிந்த அளவுக்கு நற்காரியங்களைத் தானே செய்து கொண்டிருக்கிறேன்" என்று கேட்க

"என்ன வெகுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு என்பதே ஒருவித பேராசைதான். உன்னுடைய உள்குரலை நீ கேட்டிருந்தால், இந்த கேள்வியை கேட்க துணிந்திருக்க மாட்டாய். இதற்கு உனக்கு யாரும் உதவ முடியாது. நீயே தான் முயரற்சிக்க வேண்டும்" என்றார்.

பேரரசர் அதிர்ந்து போனார் . அவர் அதுவரை இந்தியாவில் இருந்து வந்த புத்த பிட்சுகளை எல்லாம் பார்க்கும் போது, அவர்களுடைய கனிவான குரலையும், எளிய உபதேசங்களை தான் கேட்டு இருந்தார். இதுபோன்ற அதிரடியான பேச்சுக்களை கேட்டதில்லை எனவே அவர் போதிதர்மனை பார்த்து "மன்னியுங்கள் .எனக்கு எப்போதும் இடைவிடாத எண்ணங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால் தான் என் மனதில் இருந்து வரும் குரலை என்னால் கேட்க முடியவில்லை என்று தெரிகிறது அதனை அமைதியாக்க என்ன செய்யவேண்டும் என்ற உபாயம் எனக்கு தெரியவில்லை" என்றார்

இதைக் கேட்ட போதிதர்மர், தான் ஊருக்கு வெளியே தங்கியிருக்கும் கோயிலுக்கு, மறு நாள் காலை நாலு மணிக்கு தனியாக வரச்சொன்னார் அப்படி வந்தால் "உன் மனதை நான் அடக்கி காட்டுகிறேன்" என்றார்

இரவு முழுதும் பேரரசருக்கு இதே சிந்தனைதான் "ஆளைப் பார்த்தால், காட்டுமிராண்டி போலத் தெரிகிறார் இவரை நம்பி தனியே போனால் என்ன ஆகும்? மிஞ்சி மிஞ்சி போனால் என்ன செய்ய முடியும் …நம்மை கொலை செய்து விடலாம் ஆனால் அதே சமயம், அவர் தான் நம்முடைய மனத்தை அடக்கி காட்டுகிறேன் என்றும் சொல்லியிருக்கிறாரே. அதனால் முயற்சித்துப் பார்ப்போம்" என்று ஒரு வித தைரியத்துடன் கிளம்பிப் போனார் இவர் செல்லும்போது கோயிலின் வாசல் படியில் நின்று இருந்த போதிதர்மர் இவரைப் பார்த்து "என்னை சந்திக்க வருவதற்காக அவ்வளவு யோசித்து இருக்கிறாயே அதுவே உன்னுடைய பயத்தை காட்டுகிறது ஒரு புத்தபிட்சு ஆகிய நான் உன்னை என்ன செய்துவிட முடியும்" என்றார். அப்போது அவர் கையில் ஒரு தடியை வைத்து இருந்தார்

சிறிது வெட்கமுற்ற பேரரசரை அங்கிருந்த கோவிலின் நீண்ட தாழ்வாரத்தில் அமரவைத்து அவர் எதிரே உட்கார்ந்து கொண்டார் போதிதர்மர். தன் அருகில், கை தடியை வைத்துக் கொண்டார் பிறகு இவரை பார்த்து "நீ உன் கண்ணை மூடிக்கொள் உள்ளே போய் உன்னிடம் இருந்து நழுவிக் கொண்டு ஓடும் அந்த மனதை பிடி .அது உன் கைக்கு அகப்பட்ட உடன், என்னிடம் சொல் " என்று , தன் பக்கத்தில் இருந்த தடியில் கையை வைத்தார் .

அரசருக்கு ஒன்றும் புரியவில்லை . தடியை வைத்து அடித்தால், உடம்பு தானே காயப்படும். இதில் மனதை என்ன செய்ய முடியும். ஆனாலும் இவரைப் பார்த்தால் சற்று கிறுக்குப்பிடித்தவர போல இருக்கிறது எதற்கு வம்பு . அவர் சொல்லியபடியே செய்து பார்ப்போம்" என்று கண்ணை மூடிக்கொண்டு மனதை தேட ஆரம்பித்தார்

மனது என்பதே, நாம் தேடாது இருக்கும் வரை தான் உள்ளே இருக்கும்… எண்ணற்ற எண்ணங்களுடன் .

எப்பொழுது நாம் விழிப்புற்று, அதை தேட ஆரம்பிக்கிறோமோ, அப்போது அந்த விழிப்புணர்வே, அந்த மனதை கொன்று விடுகிறது. பேரரசர் மனதை தேடிக் கொண்டே இருந்தார் .எதிரே போதிதர்மர் காத்துக்கொண்டு இருக்கிறாரே.ஆனால் அவர் தேடத் தேட, அது தட்டுப்படவே இல்லை.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. பொழுதும் புலர ஆரம்பித்தது போதிதர்மர் பேரரசரை உலுக்கி, " என்ன மனது உங்கள் கைக்கு இன்னும் அகப்படவில்லையா. விடிந்துவிட்டது " என்றார் அப்போது கண்ணை திறந்து பார்த்த பேரரசர் , "நானும் எவ்வளவோ தேடிப் பார்த்தேன்.மனது என் கைக்கு அகப்படவில்லை" என்றார் . இதை சொல்லும்போது அவர் தன் உள்ளே, பேர் அமைதி நிலவுவதையும் உடலெல்லாம் தளர்வாகி, ஒரு இனிமையான அனுபவம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தார் .தன் உள் குரலை அவரால் கேட்க முடிந்தது.அது போன்ற ஒரு அனுபவம் அவருக்கு அதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. அவர் போதிதர்மரை பார்த்து, " நீங்கள் சரியாகத்தான் சொன்னீர்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கும் அல்லது செய்யாமல் விடுவதற்கும் வெகுமதி தேவையில்லை அந்த செயலை செய்வது மட்டுமே நமக்கான வெகுமதி என்பதை நன்றாக உணர்த்துக் கொண்டேன் " என்று சொன்னார்

இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, வெகுமதி என்று தனியாக ஒன்றே கிடையாது அது ஆத்மார்த்தமான ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன், நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே நமக்கு கிடைக்கும் வெகுமதி தான் .

எழுத்தாளர் சுஜாதா எழுதிய "ஆ" என்ற நாவலில் இப்படி வரும்…

"வாழ்க்கையில் சில விஷயங்கள் ஓசைப்படாமல் அறிமுகமாகின்றன,சில திருப்பங்கள் அறிவிப்பில்லாமல் நுழைகின்றன. சில மாறுதல்கள் அனுமதியில்லாமல் தம்மை நுழைத்துக்கொண்டு விடுகின்றன."

அது போல ஓசைப்படாமல் எனக்கு அறிமுகமாகி, எந்தவித அறிவிப்புமில்லாமல் பல திருப்பங்கள் உள்ள என் கோரா பயணத்தில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சக பயனாளர்கள் பங்களிப்புடன் நடத்தி வரும்

சங்கடம்  தவிர்க்கும் சட்டம் க்கான ஐகான்
Kavin Ganes இன் தற்குறிப்பு போட்டோ
Nageshwaran Bjlc இன் தற்குறிப்பு போட்டோ
சுல்பிர் சாதாத் இன் தற்குறிப்பு போட்டோ
Kavin GanesNageshwaran Bjlcசுல்பிர் சாதாத் உள்பட மேலும் 180 பேர் பங்களிப்பாளர்களாக உள்ளனர்

என்ற களத்தில் இடும் பதிவுகளால், நிறைய பேர் பயனடைந்தனர் என்று கோரா மேலாளர் திரு செல்வ கணபதி மூலம் அறிந்ததே எனக்கான வெகுமதி தான்.!!

தனியாக ஒரு வெகுமதியை நான் எதிர் பார்க்கவேயில்லை

படித்தமைக்கு நன்றி

ஸ்ரீஜா .

ஒரு பெண் எப்போது பெருமை கொள்கின்றாள் மகளாக இருக்கும் பொழுதா? மனைவியாக இருக்கும் பொழுதா? அல்லது தாயாக இருக்கும் பொழுதா? மற்றும் அதற்கான காரணம் என்ன?

 ஒரு ராஜாவுக்கு தீராத நோய் இருந்ததாம். அதற்கு தீர்வு காண்பவர்கு வெகுமதி அளிக்கப்படும்ன்னு அறிவிச்சாங்க. இதை கேட்ட ஏழையான இளைஞன் ஒருவன் தானும் முயற்சி செய்வோம்னு காட்டிலே சில மூலிகைகளை தேடித் தேடி ரொம்ப தூரம் உள்ளே போய்ட்டான். அங்கே ஒரு வீட்டை பார்த்து உள்ளே எட்டிப் பார்த்தால், ஒரு அகோரமான கிழவி இருந்தாள். அவளிடம் கேட்டால், ஏதாவது சொல்வாள்ன்னு நினைச்சு தீர்வு கேட்கிறான்.

அதற்கு அவள், "நான் சொன்னால் உனக்கு வெகுமதி ராஜாகிட்டே கிடைக்கும்.எனக்கு என்ன தருவ?" ன்னு கேட்டாள. " நீ மட்டும் சரியான மருந்து காட்டினியானா, நீ என்ன சொல்றியோ அதை செய்றேன்" ன்னு இவன் வாக்கு கொடுப்பான்.அவளும் அவனுக்கு மருந்தை கொடுத்து ராஜா கிட்டே போய் குடுத்துட்டு வான்னு அனுப்புவாள். இவனும் ராஜாகிட்டே மருந்தை கொடுக்க, அவர் அதை போட்ட கொஞ்ச நேரத்தில் நோய் பறந்துருச்சு!! ராஜா சந்தோஷமாகி ரொம்ப பரிசு கொடுக்கிறார்.

அந்த இளைஞனும் அதை தன் குடும்பத்துக்கிட்டே சேர்த்துட்டு, கொடுத்த வாக்குப் படி கிழவி கிட்டே போய் நின்னான்..கிழவி அவனிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ள கேட்டாள். இளைஞன் வாக்கு குடுத்துருக்கானே.. ஒத்துக்கொள்வான். அவளுக்கு மாலை மாற்றி திருமணம் செய்து விட்டு, திரும்பி பார்த்தால், அவள் அழகான பெண்ணாக மாறியிருந்தாள்.!!

பிறகு தான் சாபம் நீங்க பெற்ற கதையை சொன்ன அவள், அவனிடம் கேட்கிறாள்..

"இப்போது சொல்லுங்கள்.நான் பகலில் கிழவியாக தெரிந்தால், இரவில் குமரியாக மாறிவிடுவேன்.ஆனால் பகலில் குமரியாக காட்சி தர வேண்டுமானால், இரவில் கிழவியாக தெரிவேன். நான் எப்படி தெரிய வேண்டும் ?"

அதற்கு அவன் சற்றும் யோசிக்காமல், "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்.அதை நீயே முடிவு செய்துக் கொள்" என்று விட்டான்..

பிறகு பார்த்தால்..அன்று இரவும் அவள் உருவம் மாறவில்லை.இதை கேட்ட அவனிடம் அவள சொன்னாள் ,"எப்போது என் சம்பந்தப்பட்ட விஷயத்தை என்னையே முடிவு எடுக்க சொன்னாயோ, அப்போதே உன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல இருக்க முடிவு செய்து விட்டேன்"

இது தான் எல்லா பெண்ணின் மனநிலையும்.தன்னை மதித்து, தன் விருப்பு வெறுப்புசுளுக்கு மதிப்பு கொடுக்கப்படும்போது, அவள் பெருமை கொள்கிறாள்…அது மகளாகவோ, மனைவியாகவோ அல்லது தாயாகவோ,.எந்த நிலையிலிருந்தாலும் சரி..

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

பட உபயம் கூகிள்

சனி, 8 மே, 2021

கவிஞர்கள் பெண்களை தேன், இனிப்பு, பழரசம் நறுமணம் என்றெல்லாம் சொல்கிறார்களே. உண்மையில் அப்படி எதாவது சிறப்பு பெண்களிடம் இருக்கிறதா இல்லை பட்டிணத்தார் சொன்னது போல பருவவெறி தான் அப்படியெல்லாம் பிதற்ற வைக்கிறதா?

 லலிதா சஹஸ்ரநாமத்தில் , "மதுப்ரீதா" என்ற நாமம், ..தேனில் நாட்டம் உள்ளவள்" என்ற பொருளில் வரும்.

"தேன்" இனிமையானது…

இனிப்பிற்கும் மனதிற்கும் சம்பந்தம் உண்டு என்று நமக்கு தெரியும் தானே!!

எப்படி என்கிறீர்களா?

இனிப்பு எப்போது எடுத்து கொள்வோம்?

ஏதேனும் ஒரு சந்தோஷம் அனுபவிக்கும் போது..

ஒரு மகிழ்ச்சியான செய்தியை இனிப்புடன் தானே கொண்டாடுகிறோம்.!!.

குழந்தை பிறந்தவுடன் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவதில்லையா?!

திருமண விருந்துகளில் மூன்று வகை இனிப்பு, பாயசம்i, ஐஸ் க்ரீம் என்று இனிப்பிலேயே எத்தனை வகையில் இடம்பெறுகிறது?

அதில் ஒன்று நம் இலையில் வைக்கவில்லையென்றால், மற்றவை எவை இருந்தாலும், அது 42 வகை விருந்தென்றாலும், நமக்கு கிடைக்காத அந்த ஐஸ் க்ரீமில் மட்டும் ஏங்குவதில்லையா?

ஒன்றும் வேண்டாம்…

சர்க்கரை அளவு உடலில் குறைந்தால், உடலும் மனதும் எப்படி தள்ளாட்டம் போடுகிறது!!

உடனே, ஒரு சாக்லெட்டை எடுத்து வாயில் திணித்துக்கொண்டால், மனது பழைய உற்சாகத்திற்கு திரும்புகிறது அல்லவா?

இது எதை காட்டுகிறது?

மனதிற்கும் இனிப்பிற்கும் உள்ள சம்பந்தம்..!!

இந்த விற்பனை பிரதிநிதிசுளை கேட்டால் சொல்வார்கள்..

ஒரு கிளையன்டை பார்த்து எந்த பலனும் இல்லை என்றால் எழும் மனசோர்வை தடுக்க ஒரு சாக்லெட்டை வைத்துக்கொள்ள சொல்லி அவர்களுக்கு பயிலரங்கத்தில் சொல்லித்தரப்படுவதை..!!..

இவையெல்லாம் எதை சொல்கிறது?

மனது மகிழ்ச்சியை இனிப்புடன், அது தரும் நறுமணத்துடன் தொடர்பு படுத்திக் கொள்கிறது..

அது போலவே அந்த இனிப்பு கிடைக்கும்போது, மகிழ்ச்சி அடைகிறது..

பெண்ணும் மனதிற்கு இன்பம் கொடுப்பவள்.இல்லையா?!!

அதனால் தான் அந்த மகிழ்ச்சிக்கு காரணமான இனிப்ப்பை பெண்ணுடன் ஒப்பிடுகின்றனர் கவிஞர்கள்.

அன்னை லலிதையை கையில் கரும்பு கொண்டு காட்சி தருபவளாக காட்டுவதும் அதன் பொருட்டே…

அவளே ஒவ்வொரு பெண்ணிலும் அடக்கம்.என்பதால் தான் பக்தி இலக்கியங்களும் இனிப்பை கடவுளுக்கு ப்ரீதியானதாகக் காட்டுகின்றன.

பட்டினத்தாராகட்டும் அருணாகிரிநாதர் ஆகட்டும்…இருவரும் தேர்ந்தெடுத்த பாதை வேறு, அந்த அனுபவத்தால் தான் அதனை மடை மாற்றி இனிமையான பாடசலகளை கொடுத்தனர்..அதுவும் அருணகிரிநாதர் பாடல்களில் வரும் வர்ணனையும் தாள லயமும் வேறு எதிலும் இல்லை எனலாம்.

கவிஞர் கண்ணதாசனின் ரசனையினால் தானே அந்த "கவியரச" பட்டத்தை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்!!

ஒவ்வொன்றுக்கும் அளவு உண்டு..அது அதிகமானால் 'வெறி' என்று தான் சொல்ல வேண்டும்..வெறி அதிகமாகும் போது பிதற்றுதலும் இருக்கும் தஸ்ன்!!

அது சரி..

லட்டுவிலேயே காலம் முழுதும் நாட்டம் கொண்டிருந்தால், அமிர்தத்தை அடைவது எப்படி?

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.