"எனக்கு உங்களிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன.உங்களால் பதில் சொல்ல முடியுமா?"
நிச்சயமாக.ஆனால் அதற்கு விலை உண்டு"
"நான் தயார். எவ்வளவு வேண்டும்"
"இரண்டு வருடம் நீங்கள் அமைதியாக உட்கார வேண்டும்"
தத்துவ ஞானி திகைத்தார்…ஆனாலும் ஏற்றுக்கொண்டார்.
படிமப்புரவு கூகிள்
அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து அமைதியாக இருக்க ஆரம்பித்தார்.பக்கத்தில் இருந்த மரத்தடியில் இருந்த நபர் சிரித்தார்.
"இதே போல தான் என்னிடமும் புத்தர் சொன்னார்.இரண்டு வருடங்கள் கழித்து என்னிடம் வந்து அவர் கேட்டபோது , எனக்கு கேட்க கேள்விகளே இல்லை"
தத்துவ ஞானி தளரவில்லை. அமைதியை கடைப்பிடித்தார்.இரண்டு வருடம் முடிந்த போது, புத்தர் அவரிடம் வந்தார்.
"ஏதேனும் என்னிடம் கேட்க வேண்டுமா?"
"இல்லை"
இது தான் மனதின் நிலை...உள்ளுக்குள்ளே எழும் அரிப்பினாலேயே கேள்விகள் வருகின்றன.ஒரு பதில் பெற்றவுடன், அதை தொடர்ந்து இன்னொரு கேள்வி பிறக்கிறது..முடிவேயில்லாமல் நீளுகிறது.
நீங்கள் கேட்கலாம்..கேள்வி கேட்பதால் தானே அறிவு விருத்தியடைகிறது என்று. ..
அறிவு வளர வளர அமைதியை தான் கடைசியில் நாடுகிறது.
அப்ப கோராவிலே கேள்வி கேட்கவா வேண்டாமான்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது,😀
அறிவு விருத்தி பெற்று அமைதியை பெறலாம். அல்லது நேரடியாக அமைதியை கடைபிடிக்கலாம்.
எது நமக்கு வசதி?
காலி பாத்திரங்கள் தான் அதிக சத்தமே எழுப்பும் இல்லையா?☺️😊
இவர் தான் கெவின் கார்டர். தென் ஆப்பிரிக்க போட்டோ கிராஃபரான இவர் எடுத்த புகைப்படம் புகழ்பெற்ற புலிட்சர் விருதை இவருக்கு பெற்றுத் தந்தது. ஆனால் அந்த படமே இவர் தனது 33வது வயதிலேயே தற்கொலை செய்துக்கொள்ள காரணமாக அமைந்தது.
உங்களுக்கு தெரிந்திருக்கும் …அந்த் படம் 1993ம் வருடத்திய சூடான் நாட்டில் நிலவிய பஞ்சத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்தது எனலாம்.
போராடும் பெண் குழந்தை/கழுகும் பெண் குழந்தையும் என்று பெயரிடப்பட்டு 1993 மார்ச் 26 அன்று நுயுயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் முதன் முதலாக வெளிவந்த இந்த புகைப்படம், பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட, முதலில் பெண் குழந்தை என்று நினைக்கப்பட்ட ஒரு சிறுவன் தரையில் ஊர்நபிது செல்லும்போது, நிலைகுலைந்து விழுவதையும், அதை எட்ட நின்று ஒரு கழுகு பார்ப்பதையும் காட்டுகிறது. அரை மைல் தூரத்தில் இருந்த ஐக்கிய நாட்டின் உணவு மையத்திற்கு செல்லும் முயற்சியில் அது ஈடுபட்டிருந்தது என்று சொல்லப்பட்டது.
விருது பெற்ற நான்கு மாதத்தில் அவர் தற்கொலை செய்துக்கொண்டார்.உலகமே அவரை கொண்டாடிய போது என்ன நடந்தது?
ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது…அந்த குழந்தைக்கு என்ன ஆயிற்று?
அதற்கு அவர சொன்ன பதில்…
தெரியாது. எனக்கு பிலைட் நேரமாகி விட்டதால், நான் காத்திருந்து என்ன நடந்தது என்று பார்க்கவில்லை
பேட்டியாளர் சொன்னார்…
உங்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்…நீங்கள் அந்த படம் பிடித்த போது, அங்கு இரண்டு கழுகுகள் இருந்தன.ஒன்றின் கையில் காமிரா இருந்தது
இந்த வாக்கியம் அவரை நொறுக்கி விட்டது.இறக்கும் தருவாயில், அவர் எழுதிய தற்கொலை குறிப்பில் இவ்வாறு இருந்தது…
I'm really, really sorry. The pain of life overrides the joy to the point that joy does not exist. ...depressed ... without a phone ... money for rent ... money for child support ... money for debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings & corpses & anger & pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners ... I have gone to join Ken if I am that lucky.
மூலம்.. விக்கிப்பீடியா
இந்த கடைசி வரி அவருடன் பணியாற்றி சமீபத்தில் இறந்த Ken Oosterbroek ஐ குறிப்பிடுகிறது.
வாழ்க்கையில் சாதிக்கும் வேளையில், அன்பை முதலில் வைக்கவேண்டும் என்பதை கெல்வின் இறக்கும் தருவாயில் உணர்ந்தார்.அதை அவர் முன்பே உணர்ந்து இருந்தால், அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கும்.
ஆனால் நாமும் அதைத்தானே செய்கிறோம்?
நாமும் போகும் வழியில் காணும் விபத்து என்றாலும், எந்த உதவி செய்ய மனம் வராமல் கைபேசியில் படம் பிடித்து நம் வளைத்தளத்தில் போடுகிறோம். கெல்வினுக்காவது குற்ற உணர்ச்சி இருந்ததால் தன் முடிவைத் தேடி கொண்டார்.
ஆனால் நாம் ……
அந்த இன்னொரு கழுகாகத் தான் இருக்கப் போகிறோமா?
அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டு நெடுங்காலம் வாழ்ந்ததாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அப்படியிருந்திருந்தால் அது நன்றாகத் தான் இருந்திருக்கும். ஆனால் அது தவறான தகவல். அந்த குழந்தை குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. இதோ அந்த பததிரிக்கையே அது குறித்து 1993லேயே வெளியிட்ட செய்தி
Editors' Note
March 30, 1993
Credit...The New York Times Archives
See the article in its original context from March 30, 1993, Section A, Page 2
*Does not include Crossword-only or Cooking-only subscribers.
About the Archive
This is a digitized version of an article from The Times’s print archive, before the start of online publication in 1996. To preserve these articles as they originally appeared, The Times does not alter, edit or update them.
Occasionally the digitization process introduces transcription errors or other problems; we are continuing to work to improve these archived versions.
A picture last Friday with an article about the Sudan showed a little Sudanese girl who had collapsed from hunger on the trail to a feeding center in Ayod. A vulture lurked behind her.
Many readers have asked about the fate of the girl. The photographer reports that she recovered enough to resume her trek after the vulture was chased away. It is not known whether she reached the center.
👆மேலே உள்ளவை அந்தப் பத்திரிக்கையில் வந்த செய்தியின் டிஜிட்டல் வெர்ஷன்.
அதே போல அந்த போட்டோகிராபருக்கும் பேட்டியாளருக்கும் இடையே இதே வார்த்தைகள் தான் பரிமாறப்படாமல் இருக்கலாம். ஆனால் இது குறித்த எழுந்த விமர்சனங்களை இப்படி சுவைபட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் இறக்க இந்த விமர்சனங்கள் தான் காரணம்
இவர் தான் "தூங்கும் இளவரசர்" என்று அழைக்கப்படும் அல்வாலித் பின் காலித் பின் தலால் .சவுதி அரேபியாவின் இளவரசர் ..
கடந்த 15 வருடங்களாக தூங்கிக்கொண்டே இருப்பவர்..அதாவது கோமாவில்…
2015ல் மருத்துவர்கள் உயிர் காக்கும் உபகரணங்களை நிறுத்தி விட முடிவு செய்தனர். ஆனால் அரசர் மறுத்து விட்டார்.ஏதாவது அதிசயம் நடந்து, மகன் எழமாட்டானா என்ற ஆசையில்…
இந்த 14 வருடங்களில் அவர் ஒரு முறை தலையை அசைத்தாராம்.
உண்மையாக அப்படி நடக்க வாய்ப்புள்ளதா?
அதை தெரிந்துக் கொள்ளும் முன் கோமாவை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கோமா
கோமா என்பது கண்கள் மூடிய மயக்கத்தின் ஆழமான நிலை.
அங்கு ஒரு நபர் மக்களுக்கு அல்லது அவர்களைச் சுற்றியுள்ள சூழலுக்கு பதிலளிக்க முடியாது.
கோமாவில், ஒரு நோயாளி உயிருடன் இருக்கிறார். மேலும் மூளை செயல்பாடு உள்ளது.
காயத்தின் தீவிரத்தை பொறுத்து, மீட்பு நேரம் மாறுபடும்
கோமா தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.
கோமாவில் உள்ள நோயாளிகளுக்கு மூளை தண்டு மறுமொழிகள், தன்னிச்சையான சுவாசம் மற்றும் / அல்லது நோக்கமற்ற செயல்கள் இருக்கலாம்.
ஒரு நபர் கோமாவில் இருக்கும்போது கேட்கவும் சிந்திக்கவும் முடியுமா?
கோமாவின் உள்ளவர், மற்றவர் பேசுவதை கேட்கவும் புரிந்துகொள்ளவும் செய்கின்றார் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.
2011 ஆம் ஆண்டில் நடந்த ஒரு ஆய்வில், எஃப்எம்ஆர்ஐ ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய, நரம்பியல் விஞ்ஞானிகள் , சாலை போக்குவரத்து விபத்துக்குப் பின்னர் 12 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த ஒரு மனிதனின் மூளையின் செயல்பாட்டைக் கவனித்தனர்.
டென்னிஸ் விளையாடுவதாகவோ அல்லது அவரது வீட்டைச் சுற்றி நடப்பதாகவோ கற்பனை செய்யும்படி அவரிடம் கேட்டபோது, அவரது மூளையின் செயல்பாடு அவர் இந்த விஷயங்களைச் செய்ய நினைப்பதைப் பிரதிபலித்தது.
அதே போல தாவர நிலை என்று அழைக்கப்படுபவர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் முழு உணர்வுடன் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர்
கோமா நிலையில் இருக்கும் ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரைப் பார்ப்பவர்கள் வழக்கம் போல அவருடன் பேசலாம்; ஆனால் அவர் எவ்வளவு புரிந்துக் கொள்ள முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை: அந்த நபர் கேட்கவும் புரிந்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு உள்ளது: அவர்கள் இசையைக் கேட்கவும் விரும்பலாம்:ஒரு பார்வையாளர் பிடித்த வாசனை திரவியத்தை அணிவதன் மூலமோ அல்லது அந்த நபரின் கையைப் பிடிப்பதன் மூலமோ உதவலாம். தொடுதல், வாசனை, ஒலி மற்றும் பார்வை போன்ற உணர்வுகளைத் தூண்டுவது, அந்த நபரை மீட்க உதவும் என்றும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
கோமாவில் விளைவுகள்:
:மூளை இறப்புக்கு முன்னேறுவது,
சுயநினைவை மீட்டெடுப்பது அல்லது
ஒரு தாவர நிலை போன்ற நாள்பட்ட மனச்சோர்வின் நிலைக்கு செல்வது.
மூளை மரணம்:
மூளை செயல்பாடு எதுவும் இருக்காது.
மூளை மரணம் என்றால் மரணம் தான்.
மூளையில் வீக்கம் ஏற்படுவதால் மூளை மரணம் ஏற்படுகிறது;
மூளையில் இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டு, உயிரணுக்களை ஆக்ஸிஜனேற்ற இரத்தம் இல்லாமல், திசு இறக்கிறது.
அதை மாற்ற முடியாது.
மூளை திசு இறந்தவுடன், அதை குணப்படுத்த எதுவும் செய்ய முடியாது.
மூளை சிந்தனை, இயக்கம் மற்றும் இரத்த அழுத்தம், இதய துடிப்பு, உடல் வெப்பநிலை, ஹார்மோன்கள், சுவாசம் போன்றவற்றை பராமரிக்க உடலை அனுமதிக்கும் அனைத்து நரம்பியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது. ஒரு நபரின் மூளை சாவிற்கு பிறகு,, உடலின் முழு அமைப்பும் நிறுத்தப்படும். . மூச்சுவிட முடியாது, இதயம் துடிக்க முடியாது, மூளை இறந்தவுடன் உடல் செயல்பட முடியாது.
உறுப்பு செயல்பாட்டை பராமரிக்க செயற்கை மருத்துவ நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும், ஆனால் இவை ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே
மூளை இறப்பு சோதனை
மூளை மரணம் மிகவும் பழமைவாத நோயறிதல் மற்றும் கண்டுபிடிப்புகளில் எந்த சந்தேகமும் இல்லாதபோது மட்டுமே செய்யப்படுகிறது.
அது ஒவ்வொரு 200 மருத்துவமனை இறப்புகளில் ஒன்றில் நிகழும் ஒரு அரிய நிகழ்வு (சிடிசி ஆய்வு, 1986).
மூளை மரணம் ஏற்பட்டதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் தொடர்ச்சியான சோதனைகளை செய்வார்கள்.
இந்த சோதனைகள் உறுதிப்படுத்தும்: நோயாளிக்கு
வாய்மொழி அல்லது காட்சி கட்டளைக்கு எந்த பதிலும் இல்லை,
உறுப்புகள் செயல்படாத நிலையில்
கருவிழியின் அனிச்சை செயல் இல்லை;
தன்னிச்சையான சுவாசம் இல்லை.
இந்த சோதனைகள் உறுதி செய்யப்பட்ட பின்னரும் கூட, பல மருத்துவர்கள் மூளை இறப்பை உறுதி செய்யும் முன்பு கூடுதல், சோதனைகளை செய்கின்றனர்.
இவற்றில் பொதுவாக எலக்ட்ரோஎன்செபலோகிராம் (ஈ.இ.ஜி) மற்றும் பெருமூளை இரத்த ஓட்டம் (சி.பி.எஃப்) ஆய்வு கள் அடங்கும்.இது மிகவும் உணர்திறன் வாய்ந்தது, ஒரு நபரின் ஆடைகளில் உள்ள நிலையான மின்சாரம் கூட, EEG இல் ஒரு தவறான தன்மையைக் கொடுக்கும். EEG மைக்ரோவோல்ட்களில் மூளை மின்னழுத்தத்தை அளவிடுகிறது.
மூளை சாவும் கோமாவும் ஒன்றா?
ஆழ்ந்த கோமாவில் உள்ள நோயாளி கூட சில EEG எலக்ட்ரோஆக்டிவிட்டி காண்பிப்பார், அதே நேரத்தில் மூளை சாவு அடைந்த நோயாளி அவ்வாறு செய்ய மாட்டார்.
மூளைக்கு இரத்த ஓட்டம் இல்லை என்றால், மூளை இறந்துவிட்டது. கோமாவில் அப்படியில்லை.
கோமாவில் உள்ள நோயாளிகள் உறுப்பு, கண் அல்லது திசு தானத்திற்காக கருதப்படுவதில்லை. மூளை மரணம் உறுதி செய்யப்பட்டு, இறந்த நேரம் குறிப்பிடப்பட்ட பின்னரே, உறுப்பு தானம் சாத்தியமாக முடியும்.
கோமாவில் உள்ளவருக்கு மூளை சாவு ஏற்படும் நிலைக்கு போகலாம்.ஆனால் மூளை சாவு ஏற்படுமானால், அத்தோடு மரணம் உறுதிப்படுவது தான்.
பெற்றோர் என்ற போர்வையில் உள்ள இந்த இரண்டு மிருகங்களையும் பாருங்கள்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள சிவநகர் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தம்(50). இவரது மனைவி பத்மஜா
இவர்களின் மகள்களும் படிப்பில் சோடை போகவில்லை. மூத்தவள் அலெக்கியா (27), இந்திய வன சேவை தேர்வில் தேர்ச்சி பெற்றவராம்.. போன வருஷம் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் வன அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.. ஆனால் லாக்டவுன் வந்துவிடவும், லீவு எடுத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.. அப்போது கூட வீட்டில் சும்மா இல்லையாம்.. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்..இளையவள் சாய் திவ்யா (22) எம்பிஏ முதுகலைப் படிப்பை முடித்துள்ளார்.. சென்னை மியூசிக் அகாடமியில் இசைப் படிப்பை தொடங்கி உள்ளாராம்.
இவ்வளவு இருந்தும், இன்னும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளனர் புருஷோத்தமன் தம்பதியினர். ஏற்கனவே இந்த தம்பதிகள் மாந்திரீக விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருபவர்களாம்.. இதற்காகவே பல வருடம் பல பூஜைகளை செய்தும் வந்துள்ளனர்.. மேலும் பணத்தாசை பிடித்து ஆட்ட, கடைசியில் தங்கள் வயசுக்கு வந்த இரு மகள்களையும் நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு வீட்டில் பூஜைகள் செய்து கொண்டிந்தபோது, முதலில் சாய் திவ்யாவையும் பின்னர் அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அவரது பெற்றோர் அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் மகள்களை பூஜை அறையில் நிர்வாணமாக கிடத்தி சிறப்பு பூஜை செய்திருக்கிறார்கள்.
வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரிடம் புருஷோத்தம், பத்மஜா இருவரும், 'நாங்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களது 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். 2 மகள்களும் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவார்கள்' என்று கூறி அதிரவைத்துள்ளார்கள்.
இவ்வளவு அழகான, அறிவான, திறமையான மகள்களை, ஈவிரக்கமில்லாமல் கொன்று போட்டதற்கு இந்த பெற்றோருக்கு இல்லையில்லை இந்த மிருகங்களுக்கு…? படிச்ச படிப்பு எல்லாம் வெறும் ஏட்டளவில்தான் இருந்திருக்கும் பகுத்தறிவும், சுயசிந்தனையும் இல்லாமல் தன் பிறந்த 2 குழந்தைகளையே கொன்றுவிட்டு, அதன்மூலம் வரும் பணத்தை வைத்து கொண்டு இந்த மிருகங்கள் என்னதான் செய்யம்?.
பேராசையும் சுயநலனும் தான் மனிதன் மிருகமாக காரணம்.அதற்கு இந்த மிருகங்களே உதாரணம்.
ஔவையார் ஒரு அரசனின் சபைக்கு சென்ற பொது, அங்கு நிறையப் புலர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் தங்களின் பாண்டித்யத்தை பற்றி பெருமையாகப் பேசி தன்னை தானே புகழ்ந்து கொண்டிருந்தனர். ஔவையார் ஒன்றும் பேசவில்லை. அரசன் அவரை பார்த்து யார் இவர்களில் அதிகப் புலமை பெற்றவர் எனக் கேட்டபோது அவர் இப்படி பாடினார்
நீங்கள் தூக்கணாங்குருவி கட்டும் கூடு பார்த்திருக்கிறோமா?
கீழ்புறமாக வழி ஏற்படுத்தி கூடு மரத்தில் கட்டும். அந்தரத்தில் கட்டும் இந்த கூட்டில் கீழ்புறமாக வழி இருந்தால், அதன் குஞ்சுகள் விழுந்து விடாதா? அது தான் அது கூடு கட்டுவதின் அற்புதம்!! அது போன்ற திறமை நமக்கு உள்ளதா ? என்றுக் கேட்டார். புலவர்கள் எல்லோரும் புழு பூசியோடு தங்களை ஒப்பிடுவதா என எதிர் கேள்வி கேட்டபோது, ஆறறிவு பெற்ற மனிதனை விட குறைந்த அறிவு பெற்ற அந்த பறவையின் திறமை நமக்கு உள்ளதா எனக் கேட்டபோது. பாதி புலவர்கள் பதில் சொல்ல முடியாமல் உட்கார்ந்து விட்டனர்.
மற்றவர்களைப் பார்த்து ஔவையார், நாம் வீடு கட்டுவதற்கு உறுதியான மரத்தினால் பயன்படுத்துகிறோமே, அதில் ஓட்டைப் போட்டு தனக்கு இருப்பிடம் ஏற்படுத்திக் கொள்ளும் கரையானின் திறமை நமக்கு உள்ளதா ?
அதே போல தான் இருக்கும் இடத்திலேயே வலையை ஏற்படுத்தி தனக்கு உணவான் பூசசிகளை தன இருப்பிடத்திற்கே வரவழைக்கிறதே அந்த சிலந்தி பூச்சியின் திறமையாவது நமக்கு உள்ளதா என்று கேட்டார் .
மீதி புலவர்களும் பதில் சொல்ல முடியாமல் அமர்ந்து விட்டனர்.
கடைசியாக ஔவையார் எல்லோரையும் பார்த்து, " எல்லாச் செயல்களையும் எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது. எனவே நானே வல்லவன் என்று யாரும் தம்பட்டம் அடித்துக்கொள்ளக் கூடாது" என்றுக் கூறினார். அவர் பாடிய வெண்பா தான் இது