திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 நவம்பர், 2021

என் மாமனாருக்கு என்னை பிடிக்காது. என் மனைவியும் அவர் பேச்சை கேட்டு கொண்டு விவாகரத்து கேட்கிறார், நானோ அவள் மேல் அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். நான் என்ன செய்வது?

 மனைவிக்கு ஒரு துரோகம் செய்துவிட்டேன். மன்னிக்க முடியாத குற்றம். அவர் விவாகரத்து செய்யப்போகின்றார். இந்த குற்ற உணர்வில் இருந்து எப்படி வெளிவருவது? மனைவியின் மனதை எப்படி மாற்றுவது அல்லது நீதிபதியிடம் எப்படியான கேள்விகள் கேட்பது?

என் மாமனாரின் பேச்சை கேட்டு கொண்டு என் மனைவி விவாகரத்து கோரப் போவதாக சொல்கிறாள், எனக்கோ அவளை பிரிய மனமில்லை. இதில் சட்டம் யாருக்கு சாதகமாக அமையும்?

இது போன்ற கேள்விகளை அதிகம் பார்க்க நேர்ந்ததால் சற்று விளக்கமாக பதில் எழுதலாம் என்று நினைக்கிறன்.

முதலில் ஒன்று சொல்ல வேண்டும். கணவனாலும் சரி மனைவியானாலும் சரி ஒருவர் மீது உணமயான அன்பை வைத்தவர்களால், அவர்களின் மறுதலிப்பு தாங்க முடியாத வேதனை தரும். அது அனுபவவித்தவர்களுக்கே புரியும்.

அதே போல தவறு செய்ததற்கு மனம் வருந்தி ஒன்று சேர நினைப்பதிலேயே ஒருவரின் நல்ல குணம் தெரிகிறது. இப்போதெல்லாம் இந்த குற்ற உணர்ச்சி மனப்பான்மை அரிதாகத் தான் காணப்படுகிறது.

உங்களுக்கு முதலிலேயே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஆண்கள் ஒரு விஷயத்தை அணுகும் முறையும் பெண் அதை கையாள்வதும் வேறு வேறு வகை. அதனால் தான் ஆண்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள், பெண்கள் சுக்கிர கிரகத்திலிருந்து…Men are From Mars Women are from Venus. இது குறித்து ஏற்கெனவே ஒரு பதிவில் எழுதியுள்ளேன். இரண்டு தரப்பினரின் அடிப்படையான, முரண்பாடான குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.

சரி. இந்த கேள்விகள் அனைத்திலும் உள்ள பொதுவான அம்சம் மீண்டும் உங்கள் மனைவியை எப்படி திரும்ப காதல் வாழ்க்கைக்குள் கொண்டு வருவது என்று . அதைப் பார்ப்போம்.

பிரிவிற்கு பின் உங்கள் மனைவியை ஜெயிப்பது என்பது ஒவ்வொரு படியாக போகவேண்டிய அணுகுமுறையாகும்.

நீங்கள் முதலில் என்ன செய்திருப்பீர்கள்? கெஞ்சியிருப்பீர்கள். வாதாடி பார்த்திருப்பீர்கள். முடியாது என்று அவர் மறுத்த போது, உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும்.

யோசித்துப் பாருங்கள். எங்கு தவறு நடந்திருக்கும்? நீங்கள் அவர் மீது குறையை சுமத்தும்போது தான் பிரிவை அதிகப் படுத்தியிருக்கும். அவர் இன்னும் தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருப்பார். நீங்கள் அவரை மேலும் கவரக்கூடிய நபராக இல்லாதவராக மாறிியிருப்பீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள் என்று அவரை நினைக்க வைக்கும். இப்போது நான் மாறுகிறேன் என்று நீங்கள் சொன்னாலும், அவரை அது மேலும் கோபப்படுத்தும். .தான் தற்போது செய்வது நியாயம் தான் என்று அவர் தன்னைக் தானே நினைக்க வைக்கும்.

இது தான் பெரும்பாலோரின் பிரச்சினையில் நடப்பது.

சரி மன்னிப்பு கேட்டும் ஏன் அவர் சமாதானம் ஆகவில்லை, என்ன தவறு நடந்தது. நான் சொல்லட்டுமா?

அவரை முன்னிலைப் படுத்தாமல் விட்டுவிட்டு, அவர் மனதை மாற்ற முயன்றீர்கள். இந்த உங்கள் செயல் தான் உங்களை சுயநலக்காரராக அவருக்கு காட்டியிருக்கிறது.

இங்கு உள்ள பல பதில்களிலும் உங்கள் மனைவியின் மனதை மாற்ற முயலுமாறு சொன்னதை தான் பார்த்தேன். அந்த யோசனை பலன் அளிக்காது. அதே போல இது ஒத்து வரவில்லை என்று மற்றதைத் தேட இது சட்டையும் அல்ல.

"தாய்க்குப் பின் தாரம்" தானே தவிர மற்றவர் அல்ல. மேலும், சரியில்லை என்று மனைவியை மாற்றி கொண்டே இருப்பவருக்கு சமூகத்தில் என்ன மதிப்பு என்பதும் சொல்லத் தேவையில்லை.

பெண்களின் உளவியல் ரகசியல் தெரிந்தவள் என்பதால் நான் உங்களுக்கு அந்த ரகசியம் சொல்லித தருகிறேன்.

உங்கள் மனைவி உங்களை பிரிவதாக சொன்னபோது, உங்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியமாகத் தான் இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஆனால் உங்களுக்குத் தெரியுமா? அது தான் அவர் எடுத்து வைத்த கடைசி அடி என்று. சாதரணமாக பெண்கள் பிரிவது என்று சட்டென்று முடிவு எடுக்க மாட்டார்கள். அவர் பல காலம் உங்களுக்கு பிரியமானவராக இருக்க முயற்சி எடுத்திருப்பார் என்றே நினைக்கிறன். ஆனால் ஏதோ ஒரு குறை உங்கள் திருமனத்தில் அவருக்கு இருந்திருக்கிறது.

அவர் அதை சரி செய்ய முயற்சித்திருப்பார். அமைதியாக இருக்க முயற்சித்து இருப்பார், உங்கள் மீதான் அவர் அன்பு குறையும் வரை. இப்போது உங்களிடமிருந்து பிரிந்து நிறைய மாற்றங்களை தனக்குள் பார்த்து, அதுவே போதும் என நினைக்க துவங்கியிருப்பார்.

நீங்கள் எதையும் உணர்திருக்க மாட்டீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக போவதாகத் தான் எண்ணிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இப்போது நீங்கள் அவரிடம் பிரியம் காட்டினாலும் , அவருக்கு அந்த கடினமான நாட்கள் தான் ஞாபகத்திற்கு வரும். அதை மீண்டும்அனுபவிக்க அவர் தயாராய் இருக்க மாட்டார்.

நீங்கள் தொடர்து சமாதானம் செய்ய முயற்சிக்க அவர் மனது பிடிவாதமாக மாறி விடும். உங்கள் தேவைக்காகத் தான் அவரை நீகள் கூப்பிடுகிறீர்கள் என்று எண்ணத் தொடங்குவார். நானே பார்த்திருக்கிறேன், நிறைய கணவன்மார்கள் பிள்ளைகளை காட்டி கூபிடுவர். ஆனால் அதுவே, அவர் தன சுயநலலத்திற்காகத் தான் செய்கிறார் என்று அவரை எண்ண வைக்கும். அவர் மன வேதனை குறித்து நீங்கள் கவலைப் படவில்லை என எண்ணுவார்.

முதலில் அதை நிறுத்துங்கள்.

திரும்ப சேருவதற்கு தடையாக உள்ள விஷயங்கள் என்னென்ன ?:

  1. திருமண உறவை நீடிக்க அவரை சமாதானப்படுத்துவது அல்லது கவுன்சிலிங்கிற்கு கூப்பிடுவது.
  2. வாதாடுவது;
  3. பொறாமையின் காரணமாக மற்ற ஆணுடன் சேர்த்து பேசுவது. குழந்தைகளில் தேவைகளை அவர் முன் வைப்பது.
  4. அவர் குற்றவாளி போலோ அவமானப்படுவது போலோ உணர வைப்பது
  5. அவர் மத நம்பிக்கையை விமர்சனம் செய்வது'
  6. தான் மன உளைச்சலில் இருப்பது போலவும் அவர் தேவை இருப்பது போலவும் நடப்பது.
  7. பரிசுகள் கொடுக்க முனைவது.
  8. அவர் விரும்பாத நடவடிக்கையில் ஈடுபடுவது.

இவை எல்லாம் அவரை கவர உதவாமல் மேலும் உங்களிடம் மிருந்து அதிக தூரம் செல்ல வைக்கும்.

உங்கள் மேல் அவருக்கு உள்ள அன்பை அவர் உணர அவருக்கு உதவுவதே அவரை சமாதானப்படுத்துவதை விட சரியானதாகும்

நான் உங்கள் மனைவியிடம் உங்களை அவர் விரும்புகிறாரா என்று கேட்டால் உண்மையில் அவருக்கு சொல்லத் தெரியாது. விரும்புகிறேன் என்றும் சொல்லுவார். விரும்பவில்லை என்றும் சொல்லுவார். இதுவரை உங்களுக்குள் என்ன பிரச்சினை நடந்திருந்தாலும் இந்த எண்ணம் தான் உங்கள் இருவரையும் சேர்க்க தடை போடும் விஷயம்.

ஞாபகம் இருக்கிறதா? திருமணம் ஆன புதிதில் அவருக்கு உங்கள் மீதிருந்த பிரியத்தை எப்படி வெளிபடுத்தினார் என்று…அதே போன்ற உணர்வை தான் திரும்ப பெற முடியுமா என்று அவருக்கே தெரியாது. நீங்கள் பேசும் வார்த்தைகளால், அல்லது செயல்களால் திரும்ப அந்த உணர்வு கிடைக்குமா என்றும் தெரியாது.

நீங்கள் மன்னிப்பு கேட்பதாலோ அல்லது சமாதானப்படுத்த முனைவதாலோ, உங்களைப் பற்றி அவர் உணர்வது எதுவும் மாறாது. ஆனால் நீங்கள் முயன்றால் அவருக்கு அந்த பழைய காதல் அன்பை திரும்ப கொண்டு வர முடியும்.

உங்கள் உறவை முதலில் சீர் செய்ய முனையுங்கள். உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதை சற்று ஒத்துக்கி வையுங்கள். அவர் திருமணமாகதவர் என்றும் உங்களை விரும்பாதவர் என்றும் அவர் மீது உங்களுக்கு மட்டுமே ஒரு தலை காதல் உள்ளது என்று நினையுங்கள். அப்போது, என்ன செய்வீர்கள்? முதன் முதலில் அவர் மீது காதல் வந்த போது என்ன செய்தீர்கள்? அவரை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள் அல்லவா. அதை செய்ய ஆரம்பியுங்கள்.

என்ன சினிமா போல நான் சொல்கிறேன் என்கிறீர்களா"? எல்லோருடைய வாழ்க்கையில் நடப்பதை தானே காட்டுகிறோம் என்கிறார்கள்?

உங்கள் மீது பிரியம் இல்லாத பெண்ணை பிரியம் கொள்ள வைப்பது எவ்வளவு கடினம் என்பது நிறைய ஆண்களுக்கு தெரியாது. ஆனால் பெரும்பான்மையான ஆண்கள் மற்ற பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள அந்த கலையில் வல்லவர்கள் ஆக இருப்பார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை மறைக்கத் தெரியாது. அதை மெதுவாக சரியான திசையில் அவள் உணர்வுகளை கொண்டு செல்ல வேண்டும். சில ஆண்கள் இதையும் அதிகமாக செய்து பாழடித்து விடுவார்கள்.

சரி எப்படி சரியான அளவில் செய்வது?

உங்களுடன் இருக்கும்போது, அவர் தற்காப்பில் ஈடுபடத்தேவையில்லை என்ற எண்ணத்தை உருவாக்குவது.

அவர் தேவைகளையும் ஆசைகளையும் உணர அவருக்கு உதவுவது. உங்கள் துணையோடு அதை அடைய முடியும் என்று அவரை எண்ண வைப்பது.

அவரை நீங்கள் மேலும் சமாதானப்படுத்த முனையவில்ல என்று அவர் நினைக்கத் துவங்கும்போது, அவரை எளிதில் அணுக முடியும். அவருக்கும் உங்களுக்கும் இடையேயான இடைவெளி குறையலாம். ஆனால் உங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு இன்னும் காலம் வரவில்லை. இந்த நேரத்தில் அவரிடம் சமாதானப் படுத்த முயலாதீர்கள். அது எப்படி இருக்கும் தெரியுமா?

பசியில்லாத நேரத்தில் சாப்பிட வற்புறுத்துவது போல அவருக்கு தோன்றும்.

உங்களை பற்றி மட்டுமே பேசாதீர்கள். நான் என்ற வார்த்தையை ஆண்கள் அதிகம் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். "நான் இதை செய்தேன்" " நான் அதை செய்தேன்"……………….அது அவருக்கு விருப்பமில்லாத விஷயங்கள்.

அவருக்கு அவர் வாழ்வின் மீதியில் தான், இப்போது விருப்பம் இருக்கும். அவர் எதிர்காலம்…அதுவும் முக்கியமாக நீங்கள் இல்லாத எதிர்காலம்…….

அவருடன் உரையாடலை ஆரம்பியுங்கள்.அவர் சொல்வதற்கு பதில் சொல்லுங்கள். அவருடைய யோசனைகளை நீங்கள் பரிகாசம் செய்தால், அவரை மேலும் பேச வைக்க முடியாது. உங்களுடன் பேசுவதற்கான ஆர்வத்தை தான் தூண்டவேண்டுமே, தவிர உங்களை பற்றிப் பேச அல்ல.

நேருக்கு நேர் பேசுவதை நீங்கள் அதிகப்படுத்துவதன் மூலம் அதிகபட்சமாக உங்களோடு பேசத் தடை இல்லாமல் இருப்பதை அவர் விரும்ப ஆரம்பிக்கலாம், அதற்கு மேல் இல்லை.

இங்கு நீங்கள் சக மரியாதை கொடுப்பது முக்கியமான அம்சம். அதேபோல அவருக்கு தேவைப்படுவதையேல்லாம் வாங்கி கொடுபதாலேயே உங்கள் மீது அவருக்கு விருப்பம் வராது. உங்களை அந்தத் தேவைக்காக மட்டும் எதிர்பார்க்க ஆரம்பிக்கலாம், அதனால் அது வேண்டாம்.

ஆனால் உங்களுடனான பழக்கத்தை அவர் புதுப்பித்த பிறகு உங்களை விட்டு பிரிய எடுத்த முடிவைக் குறித்து அவருக்கு சந்தேகம் தோன்றும். அவருக்குள் இது அமைதியின்மையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும். உங்களை மோசமாக நடத்தி உங்களை தூண்ட முயற்சிப்பார். ஏன் அப்படி? தான் எடுத்த முடிவு சரிதான என நிரூபிக்க முயலுவார்

உங்களை அவர் பழைய மாதிரி தாக்கி பேச ஆரம்பித்தால். சரியான பாதையில் தான் செல்லுகிறோம் என்று திருப்தி அடையுங்கள்., உங்களை விட்டு பிரிய நினைப்பவரின் மனது, அதை ஏற்று கொள்ள முரண்டு பிடிக்கும் . சற்று குழப்பமான நேரம் இது. அதனால் அடிக்கடி மனோ நிலை அவருக்கு மாறி கொண்டிருப்பது சரியான திசையில் செல்கிறோம் என்பதற்கான அறிகுறி.

ஆனால் ஒன்றே ஒன்று ……..அவர் செயலுக்கு எதிர் வினை ஆற்றாமல் இருங்கள், அதுவொன்றே உங்கள் மனைவியை திருமபக் கொண்டு தரும் .

இப்போது பாதி தூரம் வந்துள்ளோம். மீதி பாதி உங்களுக்குள் செய்ய வேண்டிய மாற்றம். முன்னர் இருந்ததை விட சிறந்தவராக மாறுவது. உங்கள் மனைவி நினைப்பது போல அல்ல.

நேற்றைய உங்களை விட இன்றைய நீங்கள் ரசிக்கத்தகுந்த ஆணாக மாற முயலுங்கள். வெற்றியடைந்த, சுய மரியாதையுள்ள வாழ்வில் எதன் மீதான ஆர்வம் கொண்ட ஆணை ஒரு பெண் விரும்புவாள்.

உங்கள் உறவு மேம்பட கவனம் செலுத்தி இருப்பது உங்கள் உறவைக் காப்பாற்றும்.

இதை எல்லாம் செய்தால் எவ்வளவு நாட்களுக்குள் வெற்றி கிட்டும் என்பது தானே?

உங்கள் உறவிற்குள் ஏற்கெனவே எவ்வளவு சேதம் எற்பட்டிருக்கிறது , எந்த அளவிற்கு நீங்களும் உங்கள் மனைவியும் திரும்ப பேசுகிறீர்கள், நேருக்கு நேர் உரையாடுவதை சேதமடையாமல் எவ்வளவு தடுக்கிறீர்கள் எனபதைப் பொறுத்தும் உள்ளது.

உங்களுடைய மனோ நிலை, தேவை மற்றும் பழைய நடத்தை ஆகிவை தாமதப்படுத்தலாம் அல்லது மொத்தமாக சேதப்படுத்தலாம்.

உங்களால் இதெல்லாம் முடியுமா? என்று மலைக்காதீர்கள். உங்கள் துணையின் மீதுள்ள உங்கள் அன்பு இதையெல்லாம் கண்டிப்பாக செய்ய வைக்கும்.

உங்கள் சக்தி உங்களுக்கு தெரியாது.

அனுமனுக்கே அவர் சக்தியை அந்த ஜாம்பவான் தானே எடுத்து சொன்னது? வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வியாழன், 3 ஜூன், 2021

மாப்பிள்ளை பார்ப்பது எப்படி?

மாப்பிள்ளையின் வருமானம், படிப்பு, வேலை, குடும்ப பின்னணி இவை மட்டுமே பார்ப்பது போதாது..

எத்தனையோ பொருத்தம் இருந்தும் ஜோடிப் பொருத்தம் இருந்தும், குடும்ப நல நீதிமன்றத்தில் வந்து விவாகரத்து கேட்டு நிற்கும் இளம் தம்பதியினரை பார்க்கும் போது , தோன்றுவது..பார்க்க வேண்டிய முக்கிய பொருத்தம்…

குணம்….

அது தான் முக்கியமானது. அதற்கு அவர் நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மூலம் முன்னர் விசாரிப்பர். ஆனால் இப்போதெல்லாம் அதுவே எதிராக போகிறது..ஆனாலும் ஏதேனும் ஒரு வழியில் இதை தெரிந்துக் கொண்டு தான் மேற்கொண்டு இறங்கவேண்டும்.

அத்தோடு நில்லாது வரப்போகும் மாமனார், மாமியாரின் குணத்தையும் தெரிந்துக் கொள்வது உத்தமம்😂 சரி சரி கோபம் வேண்டாம்..😀

சும்மா ஜாலிக்காக கிழே பாருங்க…😀

இந்த மாப்பிள்ளை பார்ப்பது எப்படி? 😁😂

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

படிமப்புரவு கூகிள்