பெற்றோர் என்ற முறையில் நான் என் பெண்ணுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது..
- கீழே விழும் போது அழலாம்.தப்பில்லை..ஆனால் அங்கேயே விழுந்து கிடப்பதும் சரியல்ல.எழுந்திரு..முகத்தை கழுவு..அந்த இடத்தை விட்டு நீங்கு….
- நீ ஒரு பெண், உனக்கு ஒரு ஆண் துணை தேவையில்லை, உன்னால் தனித்து இயங்க முடியும். ஒரு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும் போது, உன் வாழ்க்கையை முற்றிலும் அனுபவிக்கலாம்.
- மகிழ்ச்சி என்பது ஒரு நிரந்தர நிலை அல்ல. ஆனால் முழுமை...இவற்றைக் குழப்ப வேண்டாம்.
- ஒருபோதும் ஒரு சந்து வழியாக தனியாக நடக்க வேண்டாம்.
- ''முடியாது' - இது கிடையாது
- உன் ஹீரோக்களை உயர் தரத்தில் வைத்திரு.. சரி தான்..ஆனால் நீயே உன் ஹீரோவாக முதலில் இரு.
- உன் கண்களால் சிரிக்க முடியாவிட்டால், சிரிக்க வேண்டாம். நேர்மையற்ற தன்மை என்பது விரும்பக்கூடியது இல்லை.
- எப்போதும் உனக்கு உண்மையாக இரு.
9. உன் உடல், உன் விதிகள்.
10. உனக்கு ஒரு கருத்து இருந்தால், அதற்கான காரணம் உனக்குத் தெரியும்.
11. உன் ஆர்வங்களை பயில்.
12. உனக்கு என்ன வேண்டும் என்று கேள். அவர்கள் சொல்லக்கூடிய மிக மோசமான விஷயம் "இல்லை"என்பது மட்டுமே..
13. நட்சத்திரங்களை பெற விரும்பு. பின்னர் அவற்றை பெற, முயற்சி செய்.
14. உன்னைப் போலவே இனிமையாக இரு.
15. எப்போதெல்லாம் தேவையோ, அப்போதெல்லாம் தயங்காமல் சொல் "தயவுசெய்து", "நன்றி", மற்றும் "என்னை மன்னியுங்கள்"
16. நீ உண்மையிலேயே உணரும்போது, "மன்னிக்கவும்" என்று சொல்
17. எல்லாவற்றையும் கேள்வி கேள் ... உன் சொந்த உள்ளுணர்வு தவிர.
18. நீ ஆச்சரியப்படத்தக்கவள். நீ அப்படி இல்லை என்று வேறு யாரும் உன்னை உணர வைக்க அனுமதிக்காதே.யாராவது அப்படி செய்தால் ..அவர்களை விட்டு விலகிச் செல். அவர்களை விட தகுதியானவர் கிடைக்க நீ தகுதியானவன்
19. நீ எங்கிருந்தாலும், இது உன் வீடு.இங்கு நீ எப்போதும் வரலாம்
20. மகிழ்ச்சியாக இரு, உன் வேர்களை நினைவில் கொள்.
21. நீ என்ன நினைக்கிறாயோ அதையே சொல்.., நீ சொல்வதை மட்டுமே அர்த்தப்படுத்து.
22. கனிவாக இரு; மற்றவர்கள் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படியே அவர்களை நடத்து.
23. சந்தேகம் இருந்தால், நீ யாருடைய மகள் என்பதை நினைவில் கொள். உன் கிரீடத்தை சரி செய்துக் கொள்..