- இரத்த தானம் செய்வதன் மூலம், நம்முடைய உடலில் புது ரத்தம் ஊற, நமக்கு நாமே உதவி செய்கிறோம்
- ஒரு எறும்பு கடிக்கும் அளவிற்கு கூட வேதனை இருக்காது.
- நான் என் பிறந்த நாள், திருமண நாள் போது கொடுப்பது வழக்கம்.
- நம்மால் இன்னொரு உயிருக்கு உதவி செய்கிறோம் என்ற பெருமிதம் கொள்ளலாம்.
- எல்லோராலும் ரத்த தானம் கொடுக்கமுடியாது. இளம் வயதினர், நோயாளிகள், குறைவான எடை கொண்டோர், மஞ்சள் காமாலை நோய் வந்தவர்கள் ஆகியோர் கொடுக்க முடியாது.
அதேபோல் டாட்டூ போட்டுக் கொண்டோரும் ஒரு வருடம் வரை கொடுக்க முடியாது.
படிமப்புரவு கூகிள்
ஏனென்றால் உடலின் உள்ளே நுழைக்கப்பட்ட உலோகம், இங்க் போன்றவை நம் உடலின் எதிர்ப்பு சக்தியுடன் எதிர் வினை புரிந்து அதனால் ரத்த ஓட்டம் சமன் செய்யப்பட்டிருக்கும் என்பதால் டாட்டூ போட்டதிலிருந்து ஒரு வருடம் ரத்த தானம் கொடுக்கவேண்டாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
படித்தமைக்கு நன்றி.
ஸ்ரீஜா.