Men are from Mars, Women are from Venus".
"ஆண்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள்.பெண்கள் சுக்கிர கிரகத்தில் இருந்து வந்தவர்கள்" என்றொரு கூற்று உண்டு..
செவ்வாய் கிரகத்தின் காரகத்துவம் என்று ஆண்களின் முக்கிய குணங்களான வேகம், வீரம் போன்றவற்றை சொல்லும் போது, சுக்கிரன், பெண்கள் அழகுணர்ச்சி, கலைகளில் காட்டும் ஈடுபாட்டை காரகத்துவமாக கொண்டது.
இத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் செவ்வாய் குரு அணியிலும் அதன் எதிர் அணியின் தலைவராக சுக்கிரன் இருந்தாலும் இரண்டும் பகைத்தன்மை கொண்டவை அல்ல. இரண்டும் சம தன்மையானது..அது தான் ஆண் பெண் உறவுக்கும் சொல்லப்படுகிறது!!
.ஆனாலும் ஒரே தாயின் வயிற்றில் பிரந்தவர் எண்றாலும் ஒரு பெண்ணின் மனதை ஆணால் உணர முடியாதது ஏன்?
மூளையின் வலது புறம் தான் கலைகளுக்கு தேவையான கற்பனை வளத்தை கொடுக்கிறது. என்றால் அதன் இடது புறம், எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மையை கொடுக்கிறது.
ஆனாலும் பாருங்களேன்..அங்கேயே ஒரு மாறுபட்ட தன்மையை மூளையின் வலது பக்க செயல்பாட்டை இடது கை தான் செயல்படுத்துகிறது. வலது கையின் செயல்பாடு, இடது மூளையின் கட்டுப்பாட்டில்..இதுவே எதிர் தன்மை தானே?
ஒளியினால் உயிர் வாழும் இந்த பிரபஞ்சத்தின் நாயகனாக இருக்கும் சூரியனும் அதன் ஒளியை பெற்று பிரதிபலிக்கும் சந்திரன் அம்மையப்பன் எனப்படுகின்றனர்.
அதாவது இந்த உலகத்தின் தலைவனான சூரியனின் தலைவி சந்திரன்…அவர்களின் வழியாகவே, , கணவன் மனைவிக்கு இடையே உள்ள தாத்பர்யம் சொல்லப்படுகிறது.
சித்திரை மாதத்தில், .சூரியன் மேஷ ராசியில் உச்சமடையம் போது, அதன் அடுத்த ராசியான ரிஷபத்தில் தான்,அதாவது அடுத்து வரும் தமிழ் மாதமான வைகாசியில் தான், சூரியனின் ஒளியை பெற்று பிரதிபலிக்கும் சந்திரன் உச்சமடையும். அதாவது தனி ஒளியுடன் பிரகாசமாக இருக்கும்.
கணவனும் மனைவியும் ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி இருக்கவேண்டும் என்கிறது?!!
நிறைய வீடுகளில், இப்போதெல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பொது அறையை ஒட்டியே, அவர்களுக்கு தனித்தனியறையம் உள்ளது!!
ஆனால் புதிதாக திருமணமானவர்களும் திருமணம் செய்ய இருப்பவர்களும், தன் வாழ்க்கைத்துணையான மனைவி தன்னை சார்ந்தே இருக்கவேண்டும், தன்னிடம் மட்டுமே வெகு நெருக்கமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கும் ஒரு வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகிறார்கள்கள் அம்மையப்பர்.
அடூத்தடுத்த இராசியில் உச்சமான ஒளியை வெளிப்படுத்தும் சூரியனும் சந்திரனும்., ஒரே இராசியில் ஒன்று சேரும் போது இருளான “அமாவாசை”யாகிறது..
“நெருக்கம் அதிகமானால் புழுக்கம் அதிகமாகும்” என்று சொல்வதில்லையா? அது இதைத்தான்!!
ஆத்மகாரகன் என்னும் சூரியனிடம் ஆழ்மனோகாரகனான சந்திரன் சரணடையும் அந்த தருணத்தை, ஆண்மீகத்தில் சிறப்பாக சொல்லப்படுகிறது!!
.இல்லறம் சிறக்காதபோது மனம் ஆன்மீகத்தை தேடுகிரது இதனால் தான் போலும்!
அதனால் தான் தம்பதிகள் ஒன்றிணைவது என்றாலும், அவர்களுக்குள் சற்று இடைவெளியும் வேண்டும் என்கிறார்கள்.
சூரியன் உச்சமடையம் இராசிக்கு அடுத்துள்ள இராசியில் சந்திரன் உச்சமடைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அங்கு சூரியனின் கிருத்திகை நட்சத்திரக்கூட்டம் மட்டுமல்ல சந்திரனின் சொந்த நட்சத்திரக் கூட்டமான ரோஹிணியில் தான் நிற்கும் என்பதால்…
.எவ்வளவு பாசமான கணவனின் சொந்தங்கள் உடன் இருந்தாலும், பிறந்த வீட்டு உறவும் உடன் இருக்கும்போது பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேது!! மாதாகாரனாகிய சந்திரனும் இதை தான் உணர்த்துகிறது!!
உச்சத்தை போலவே சூரியன் துலாத்தில் நீச்சம் அடையும்போது, அடுத்த இராசியான விருச்சிகத்தில் சந்திரன் நீசம் அடைவதும் இதன் அடிப்படையிலேயே!!
அதே போல, ,சூரியனை விட்டு எவ்வளவு தூரம் சந்திரன் விலகி இருக்கிரதோ அந்தளவிற்கு அதன் ஒளி பிரதிபலிக்கும் தன்மையும் அதிகம் இருக்கிறது. சூரியனுக்கு நேர் எதிரில் அதாவது ஏழாம். பாவத்தில் சந்திரன் இருக்கும் போது ஒளி வீசும் முழு நிலவான “பவுர்ணமி”யாகிறது.
அதாவது சூரியனுக்கு எதிரில் இருப்பதால் அது “எதிரி”அல்ல .அதன் ஒளியை முழுதாக பெற்று பிரதிபலிக்கத் தான்...
இதை தான் தம்பதிகளாக இருப்பவர் உணர்ந்துக்கொள்ள வேண்டியது..ஏனெனில், ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் ஜாதகரை குறிக்கும் என்றால், அதற்கு நேர் எதிரே உள்ள ஏழாம் பாவம் அவர் வாழ்கைத் துணையை குறிக்கிறது.
என்ன சொன்னாலும் முழுதாக உள்வாங்கிக்கொள்ள கொள்வதில்லை என் மனைவி என்று ஆண்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள்.
அந்த பவுர்ணமி சந்திரனே சூரியனுக்கு நேரெதிராக நின்று சூரியனின் ஒளியை உள் வாங்கினாலும் வெளிப்படுத்துவதென்னவோ சூரியனின் பாதி அளவை தானாம்!!..இதை நான் சொல்லவில்லை. மகா புருதர் காளிதாசர் தனது “உத்தர கலா மருதம்”என்னும் நூலில் கிரகங்களின் ஒளி அளவை பதிவு செய்துள்ளார்.அதில் சூரியனுடையது 30 என்றவர் சந்திரனுக்கு ஒளி அளவு 16 என்றதிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம்!!
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஜோதிடத்தில், ஒவ்வொரு லக்கினத்திற்கும் வாழ்க்கை துணையை குறிக்கும் ஏழாம் பாவம், லக்கினத்திற்கு பகையான கிரகத்தின் ஆட்சிக்கு உட்பட்டது! அதனால் தான் கணவன்/மனைவி எதிர் தன்மையுடன் இருப்பதும் நடக்கிறது.
இருந்தாலும், களத்திரகாரகனான சுக்கிரன் இருவரிடத்திலும் உள்ள ஈர்ப்புத் தன்மையை ஏற்படுத்தி, காமத்தீயை அணைக்காமல் இருவருக்கும் இடையே உள்ளே நெருக்கத்தை கூட்டி உறவை வளர்க்கிறார்..
இதைத் தான், கிரகங்களின் உறவுக்கு ஒளியம் அவற்றிற்கு இடையே உள்ள தூரம் மட்டுமல்லாமல் அவற்றிற்கு இடையே உள்ள ஈர்ப்புவிசை சுட்டிக்காட்டுகிறது. .
கிழக்கில் உள்ள சூரியன் சிம்மத்தில் ஆட்சியாகவும் மூலத்திரிகோணமாகவும் இருக்கும் போது, வட மேற்கில் உள்ள சந்திரன் கடகத்தில் ஆட்சியாகவும் மூலத்திரிகோணமாகவும் இருப்பது இப்படித் தான்!!,
ஆனால் இந்த ஈர்ப்பை ஏற்படுத்தும் சுக்கிரன் நீச்சமாக இருந்தாலோ, பாவக்கிரகங்களுடன் சேர்ந்தாலோ, இந்த காதல் உணர்வே அற்றுப் போய் விடும்.
இந்த ஏழாம் பாவத்தில் சுக்கிறனுடன் சனியும் இராகுவும் சேர்ந்தால் மனைவி கணவனை விடுத்து வேற்று ஆணுடன் நாட்டம் கொள்வதும், .அதுவே நீச்ச சுக்கிரன், சனி, செவ்வாய், இராகுவோடு சேரும் போது, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தன்மையை கொடுப்பதுமாய் இருக்கும். ஒரு பெண்ணை கதறக் கதற பாலியல் ரீதியான துன்பத்துக்கு ஆளாக்குபவனின் ஜாதகத்தில் இந்த அமைப்பே இருக்கும்.அதில் தான் அவனுக்கு காமக்கிளர்ச்சியே உண்டாகும்..மனைவியிடம் அளவுக்கு மீறிய காமக்களியாட்டடம் கொள்வதும் இது போன்ற அமைப்பினால் தான்.
ஆனால் குருவின் பார்வை இதை அப்படியே மாற்றிவிடும்..
அது போலவே, சுக்கிரன் சுபத்துவமாக தனித்திருக்கும் போது, அவன் பெண்களுக்கு பிரியமானவனாய் அவன் அருகாமைமை பாதுகாப்பாய் பெண்கள் உணரும் விதமாய் இருப்பான்..
பெண் தன் கணவனிடம் எதிர்பார்ப்பதே இதைத் தானே…காதலுடன் கூடிய காமத்தை தரும் கணவனுக்கு என்றுமே அவள் சரணாகதி தான்..அவன் அவளுடைய ஆத்மாவாக இருக்கும் போது, இவள் அவனுடைய ஆழ்மனதாகிறாள்!!
இதைத் தான் ஜோதிடம் நமக்கு வாழ்க்கை தத்துவமாக உணர்த்துகிறது!