திங்கள், 31 மே, 2021

இரக்கம் இன்று உலகில் ஏன் கண்டுபிடிக்க கடினமாக உள்ளது?

 


இவர் தான் கெவின் கார்டர். தென் ஆப்பிரிக்க போட்டோ கிராஃபரான இவர் எடுத்த புகைப்படம் புகழ்பெற்ற புலிட்சர் விருதை இவருக்கு பெற்றுத் தந்தது. ஆனால் அந்த படமே இவர் தனது 33வது வயதிலேயே தற்கொலை செய்துக்கொள்ள காரணமாக அமைந்தது.

உங்களுக்கு தெரிந்திருக்கும் …அந்த் படம் 1993ம் வருடத்திய சூடான் நாட்டில் நிலவிய பஞ்சத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்தது எனலாம்.

போராடும் பெண் குழந்தை/கழுகும் பெண் குழந்தையும் என்று பெயரிடப்பட்டு 1993 மார்ச் 26 அன்று நுயுயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் முதன் முதலாக வெளிவந்த இந்த புகைப்படம், பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட, முதலில் பெண் குழந்தை என்று நினைக்கப்பட்ட ஒரு சிறுவன் தரையில் ஊர்நபிது செல்லும்போது, நிலைகுலைந்து விழுவதையும், அதை எட்ட நின்று ஒரு கழுகு பார்ப்பதையும் காட்டுகிறது. அரை மைல் தூரத்தில் இருந்த ஐக்கிய நாட்டின் உணவு மையத்திற்கு செல்லும் முயற்சியில் அது ஈடுபட்டிருந்தது என்று சொல்லப்பட்டது.

விருது பெற்ற நான்கு மாதத்தில் அவர் தற்கொலை செய்துக்கொண்டார்.உலகமே அவரை கொண்டாடிய போது என்ன நடந்தது?

ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது…அந்த குழந்தைக்கு என்ன ஆயிற்று?

அதற்கு அவர சொன்ன பதில்…

தெரியாது. எனக்கு பிலைட் நேரமாகி விட்டதால், நான் காத்திருந்து என்ன நடந்தது என்று பார்க்கவில்லை

பேட்டியாளர் சொன்னார்…

உங்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்…நீங்கள் அந்த படம் பிடித்த போது, அங்கு இரண்டு கழுகுகள் இருந்தன.ஒன்றின் கையில் காமிரா இருந்தது

இந்த வாக்கியம் அவரை நொறுக்கி விட்டது.இறக்கும் தருவாயில், அவர் எழுதிய தற்கொலை குறிப்பில் இவ்வாறு இருந்தது…

I'm really, really sorry. The pain of life overrides the joy to the point that joy does not exist. ...depressed ... without a phone ... money for rent ... money for child support ... money for debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings & corpses & anger & pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners ... I have gone to join Ken if I am that lucky.

மூலம்.. விக்கிப்பீடியா

இந்த கடைசி வரி அவருடன் பணியாற்றி சமீபத்தில் இறந்த Ken Oosterbroek ஐ குறிப்பிடுகிறது.

வாழ்க்கையில் சாதிக்கும் வேளையில், அன்பை முதலில் வைக்கவேண்டும் என்பதை கெல்வின் இறக்கும் தருவாயில் உணர்ந்தார்.அதை அவர் முன்பே உணர்ந்து இருந்தால், அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஆனால் நாமும் அதைத்தானே செய்கிறோம்?

நாமும் போகும் வழியில் காணும் விபத்து என்றாலும், எந்த உதவி செய்ய மனம் வராமல் கைபேசியில் படம் பிடித்து நம் வளைத்தளத்தில் போடுகிறோம். கெல்வினுக்காவது குற்ற உணர்ச்சி இருந்ததால் தன் முடிவைத் தேடி கொண்டார்.

ஆனால் நாம் ……

அந்த இன்னொரு கழுகாகத் தான் இருக்கப் போகிறோமா?

 அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டு நெடுங்காலம் வாழ்ந்ததாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அப்படியிருந்திருந்தால் அது நன்றாகத் தான் இருந்திருக்கும். ஆனால் அது தவறான தகவல். அந்த குழந்தை குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. இதோ அந்த பததிரிக்கையே அது குறித்து 1993லேயே வெளியிட்ட செய்தி

Editors' Note

March 30, 1993

Credit...The New York Times Archives

See the article in its original context from
March 30, 1993, Section A, Page 2

Buy Reprints

New York Times subscribers* enjoy full access to TimesMachine—view over 150 years of New York Times journalism, as it originally appeared.

SUBSCRIBE

*Does not include Crossword-only or Cooking-only subscribers.

About the Archive

This is a digitized version of an article from The Times’s print archive, before the start of online publication in 1996. To preserve these articles as they originally appeared, The Times does not alter, edit or update them.

Occasionally the digitization process introduces transcription errors or other problems; we are continuing to work to improve these archived versions.

A picture last Friday with an article about the Sudan showed a little Sudanese girl who had collapsed from hunger on the trail to a feeding center in Ayod. A vulture lurked behind her.

Many readers have asked about the fate of the girl. The photographer reports that she recovered enough to resume her trek after the vulture was chased away. It is not known whether she reached the center.

A version of this article appears in print on

March 30, 1993

, Section A, Page 2 of the National edition with the headline: Editors' Note. Order Reprints | Today’s Paper | Subscrib

👆மேலே உள்ளவை அந்தப் பத்திரிக்கையில் வந்த செய்தியின் டிஜிட்டல் வெர்ஷன்.

அதே போல அந்த போட்டோகிராபருக்கும் பேட்டியாளருக்கும் இடையே இதே வார்த்தைகள் தான் பரிமாறப்படாமல் இருக்கலாம். ஆனால் இது குறித்த எழுந்த விமர்சனங்களை இப்படி சுவைபட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் இறக்க இந்த விமர்சனங்கள் தான் காரணம்

ஒரு திருநங்கை செய்த உங்களை வியக்க வைத்த செயல் என்ன?

 திருநங்கை அஞ்சலி குரு சஞ்சனா ஜான் செய்த செயல் ஆச்சர்யமாக உள்ளது.

பெண்கள் ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பஞ்சாயத்து வார்டு தேர்தலில் பெண் வேட்பாளராக மனு செய்து நிரகரித்ததை எதிர்த்து வழக்கு போட்டுள்ளார் இவர்..…இது இங்கல்ல மும்பையில்..

அதில் தான், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 கீழ் ஒரு திருநங்கைக்கு அங்கீகாரம் பெற உரிமை உண்டு என்பதையும், அத்தகைய திருநங்கைகளுக்கு சுயமாக உணரக்கூடிய பாலின அடையாளத்திற்கான உரிமை இருப்பதையும் குறிப்பிட்டு, மாண்புமிகு மும்பை உயர் நீதிமன்றம் (அவுரங்காபாத் பெஞ்ச்) கடந்த சனிக்கிழமை ( ஜனவரி 02) அன்று, தீர்ப்பு வழங்கியது.

என்ன நடந்தது?

அஞ்சலி

இனி அவரை அப்படியே குறிப்பிடுவோம்😀

  • பெண்கள் பிரிவின் கீழ் ஜல்கான் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட அவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
  • அதை நிராகரித்த திருப்பிய அதிகாரியின் உத்தரவை எதிர்த்து ரிட் மனுவை[1] மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்
  • விசாரணையின் போது, :அவர், பெண் பாலினத்தை தனது சுய-உணரப்பட்ட பாலின அடையாளமாகத் தேர்ந்தெடுத்தும், பொது வாழ்க்கையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் தவிர, இனிமேல் தனது வாழ்நாளில் தான் சந்தர்ப்பவாதத்தால் தான் ஆண் இனத்திற்கு மாறமாட்டேன் என்றும் ஒரு முழுமையான அறிக்கையை நீதிமன்றத்திற்கு அளித்தள்ளார.
  • அவருடைய வேட்புமனு படிவத்தை நிராகரித்ததற்கான காரணம், மனுதாரர் ஒரு திருநங்கை, மற்றும் வார்டு பெண்கள்-பொது வகைக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. என்றும் கிராம பஞ்சாயத்து தேர்தலில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதாகும்.

நீதிமன்றத்தின் முன் மனுதாரர் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 இன் பிரிவு 4 (2)யையும், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் இந்திய யூனியன் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை [2] யம் சுட்டிக்காட்டி மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

நீதிமன்றம் கணக்கில் கொண்டவை

  • இனிமேல், மனுதாரர் தனது வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் ஆண் பாலினத்திற்கு மாறமாட்டார் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது
  • வேறு எந்த வேட்பாளரும் மனுதாரருக்கு எதிராக எந்தவொரு ஆட்சேபனையும் எடுக்கவில்லை
  • வார்டு பெண்கள் பொது வகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதால் மனுதாரர் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்க முடியாது என்று நம்பிய ரிட்டர்னிங் அதிகாரி போதிய சட்ட அறிவை கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று பெஞ்ச் குறிப்பிட்டது.

கடைசியாக, ரிட் மனுவை அனுமதித்த நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்து, மனுதாரரின் நியமன படிவத்தை ஏற்றுக்கொண்டு, அவர் தேர்ந்தெடுத்த பிரிவின் (பெண் பிரிவு) கீழ் வார்டில் இருந்து தேர்தலில் போட்டியிட அனுமதித்தது.

எவ்வளவு பெரிய வெற்றி இது…பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்..😀👍👍

இதை படிக்கும் திருநங்கைகள் நம் மாநிலத்திலும் பின்பற்றுவர் என்று நம்புவோம்

சரி..ஆண்கள் தான் பெண்களாக மாறுகிறார்களா என்ன.பெண்களும் ஆண்களாக மாறுகின்றனர்.இதோ இவர் தான் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த

ஜைமி

This Transgender Man's Before And After Pictures Are Leaving People Speechless

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா


ஆண் குழந்தை பிறக்க என்னென்ன வழிகள் உள்ளன?

 நான் உசிலம்பட்டியில் வாக்கப்பட்ட பெண் என்பதால் இந்த கேள்வியின் தாக்கம், வீச்சு அறிந்தவள். இந்த கேள்வியின் பின்னே உள்ள ஏச்சு பேச்சுகள், வலி, வேதனை அறியாதவர்களின் பதில்களாகத் தான் மற்றவற்றை பார்க்கிறேன்.

நாம் என்ன ஒரு நவ நாகரீக உலகில் இருந்தாலும், பழமையும் சில மூடப்பழக்கஙகளும் உள்ள பத்தாம்பசலிகள் இடத்தில், நாம் தான் வித்தியாசமாக பார்க்கப்படுவோம். அது போன்றதுதான் ஆண் குழந்தை இல்லாதவரின் நிலை…

"எவனோ ஒருத்தன் வந்து உட்கார்ந்து திங்கப் போறதுக்கு, எதுக்கு இப்படி ஓடியோடி வேலை செய்ற"

"உனக்கு பொட்டைப் புள்ளை தானே.அந்த வீட்டை அவனுக்கு விட்டுக் குடுத்துடு.அவன் தான் ஆம்பிளை புள்ளை வச்சிருக்கான்.."

"..தப்பா நினைக்காதேடி யம்மா…அவங்கல்லாம் சந்தனம் வக்கட்டும்.நீ கொஞ்சம் கூடமாட இங்க வந்து ஒத்தாசை பண்றியா?"

சொந்தக்கார புள்ளைதாச்சிக்கு வளைக்காப்புலே சந்தனம் வைக்கப் போன, பொண்ணை பெத்தவளை, தடுத்துக் கூப்பிடும் வயதான பெரிய மனுஷி!!

எத்தனை காலம் போனால் என்ன..மேல்தட்டு, கீழ்தட்டு மாறினால் என்னா…

பழம் பெருமை பேசுவதில் இதுவும் சேர்த்தி தான்…

விஞ்ஞானம் முன்னேறி விட்டது..ஆனால் அதை கொண்டு பிறக்கும் குழந்தை பாலினம் தெரிந்து "முடித்து" வைப்பதால்..தடை சட்டமும் பின்னாடியே வந்தது.

அதனாலென்ன…"அண்டத்தில் உள்ளது தானே பிண்டத்தில் உள்ளது" என்று,

ஜோதிடம் என்பதே, வானியல் ரீதியாக கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால நிகழ்வுகளைக் கணித்துக் கூறும் விஞ்ஞானம் தானே.

அதனால் தான் விண்வெளியை ஆராய்பவர்கள், Astronomy Astrology என்று சேர்த்து பார்த்துள்ளனர்.

ஜோதிடம்/ ஜாதகம் நம்முடைய வாழ்க்கை துணையை மட்டுமா காட்டுகிறது…. நம் சந்தானத்தையும் சேர்த்து தான்.

ஜாதகத்தில் 5ம் இடம் புத்திர பாவம் என்பர். அதுவே ஜாதகரின் மூன்றாம் இடம் இளைய சகோதரர்களை காட்டும்..அதாவது 7 ம் இடம் மற்றும் 9 ம் இடம். பிறக்கப்போகும் குழந்தை எத்தனையாவது என்பதை பொறுத்து கணக்கிடுவர். அதே போல கிரகங்களில் ஆண் தன்மையுள்ளவை உண்டு…அவை அந்த கட்டத்தில் எத்தனை உள்ளன , அதே போல குருவை புத்திர காரகன் என்பர்.அது இருக்கும் இடமும், அதன் அதிபதி யார் ,என்பதும் பார்க்கப்படும் . அது நட்பு கிரகமா என்பதும் சனி இருக்கும் இடங்களை பொறுத்தும், ஆண் குழந்தை ஜாதகருக்கு உண்டா இல்லையா என்று தெளிவாக சொல்ல முடியும்.

ஆனாலும் ஏன் சிலருக்கு ஜாதகத்தில் கணிப்பு தவறுகிறது என்றால்…அந்த கணக்கு போடுவதும் அதற்கு கொடுக்கப்படும் தகவல்கள் சரியில்லாமல் இருப்பதும் ஒன்று.

சிலருக்கு ஆண் குழந்தை பிறப்பது என்பது அவர்கள் மண வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும். என் நாத்தனாருக்கு ஆண் குழந்தை பிறந்த இரண்டாம் வருடம் அவர் கணவர் தவறி விட்டார்.பின்னால் பையனின் ஜாதகம் கணித்த போது, அவனுக்கு 9ம் இடம் தகப்பன் பாக்கியம் இல்லாமல் போவான் என்று இருந்தது.

..ஆனால் எல்லாமே கணித்து விட முடியுமா?

அதிலும் இறைவன் ஒரு சூட்சசம. வைத்துள்ளான்.

புகழ்பெற்ற வானவியலார் பாஸ்கராச்சியாரை தெரியும் அல்லவா?

படிமப்புரவு கூகிள்

அவர் எத்தகைய மேதை…அவருடைய ஒரே மகள் லீலாவதி. அவளுக்கு ஜாதகம் அவர் கணிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட முகூர்த்த நாழிகையில், அவள் திருமணம் நடந்தால் மட்டுமே உண்டு..இல்லையென்றால் வாழ்க்கை முழுதும் கிடையாது என்று அறிகிறார்.

பெற்றவர் இல்லையா…அவளுக்கு அந்தக் காலம் வரும்போது, திருமண ஏற்பாடு செய்கிறார்..குறித்த நாழிகை வரும்போது, திருமணம் நடக்க வேண்டும் என்று அந்த காலத்தில் இருந்த மணல் குடுவை வழியாக நேரம் கண்டுபிடிக்க வைக்கிறார். எல்லாம் தயாராகிக்கொண்டு இருக்கிறது.

சிறுமி லீலாவதி ஒரு ஆரவத்தில், அந்த கடிகார குடுவைக்குள் எட்டி பார்க்கிறாள்.அவளின் மூக்குத்தியில் இருந்த கல் ஒன்று குடுவைக்குள் விழுந்து விடுகிறது.பயந்து போய் யாரிடிடமும் சொல்லாமல் விடுகிறாள்.இங்கு திருமணத்திற்கு எல்லாம் தயார்.குறித்த நேரத்தில் முடிக்க காத்திருக்கின்றனர். நேரம் போனதே தவிர குடுவை குறித்த நேரம் காட்டவில்லை. முகூர்த்த நேரமும் போய்விட்டது தெரிகிறது. என்ன நடந்தது என்று பார்த்தால், லீலாவதியின் மூக்குத்தியில் இருந்து விழுந்த கல், குடுவையில் மண் விழும் பாதையை அடைத்திருக்கிறது..!!☺️

விதியை மதியால் வெல்ல பார்த்தார்…முடியவில்லை.

தன் .மகள் மேல் கொண்ட அளப்பரிய பாசத்தால், தான் எழுதிய கணித நூலுக்கு "லீலாவதி" என்றே பெயர் வைத்தார்.

இது சொல்வது எதற்கு என்றால்,

கடமையை செய். பலனை ஏதிர்பாராதே..

எல்லாம் விதிப்படி தான் நடக்கும்.




மேலே உள்ள அட்டவணையில் பெண்ணின் வயது மற்றும் கர்பமடைந்த மாதம் ஆகியவற்றில் இருந்து பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம். இது சரியா எனபார்த்தபொழுது 100% சரியாக இருந்தது. இந்த அட்டவணையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அவரவர்க்கு உரிய பிராப்தம் உரிய காலத்தில், வந்து சேரும்.

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

கோமாவில் இருக்கும் ஒருவரின் மனதிற்குள் எண்ணங்கள் ஓடுமா? கோமா மற்றும் மூளைச்சாவு இரண்டும் ஒன்றா? பதில் தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும்.

 



இவர் தான் "தூங்கும் இளவரசர்" என்று அழைக்கப்படும் அல்வாலித் பின் காலித் பின் தலால் .சவுதி அரேபியாவின் இளவரசர் ..

  • கடந்த 15 வருடங்களாக தூங்கிக்கொண்டே இருப்பவர்..அதாவது கோமாவில்…
  • 2015ல் மருத்துவர்கள் உயிர் காக்கும் உபகரணங்களை நிறுத்தி விட முடிவு செய்தனர். ஆனால் அரசர் மறுத்து விட்டார்.ஏதாவது அதிசயம் நடந்து, மகன் எழமாட்டானா என்ற ஆசையில்…
  • இந்த 14 வருடங்களில் அவர் ஒரு முறை தலையை அசைத்தாராம்.

உண்மையாக அப்படி நடக்க வாய்ப்புள்ளதா?

அதை தெரிந்துக் கொள்ளும் முன் கோமாவை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

கோமா

  • கோமா என்பது கண்கள் மூடிய மயக்கத்தின் ஆழமான நிலை.
  • அங்கு ஒரு நபர் மக்களுக்கு அல்லது அவர்களைச் சுற்றியுள்ள சூழலுக்கு பதிலளிக்க முடியாது.
  • கோமாவில், ஒரு நோயாளி உயிருடன் இருக்கிறார். மேலும் மூளை செயல்பாடு உள்ளது.
  • காயத்தின் தீவிரத்தை பொறுத்து, மீட்பு நேரம் மாறுபடும்
  • கோமா தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.
  • கோமாவில் உள்ள நோயாளிகளுக்கு மூளை தண்டு மறுமொழிகள், தன்னிச்சையான சுவாசம் மற்றும் / அல்லது நோக்கமற்ற செயல்கள் இருக்கலாம்.

ஒரு நபர் கோமாவில் இருக்கும்போது கேட்கவும் சிந்திக்கவும் முடியுமா?

கோமாவின் உள்ளவர், மற்றவர் பேசுவதை கேட்கவும் புரிந்துகொள்ளவும் செய்கின்றார் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.

2011 ஆம் ஆண்டில் நடந்த ஒரு ஆய்வில், எஃப்எம்ஆர்ஐ ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய, நரம்பியல் விஞ்ஞானிகள் , சாலை போக்குவரத்து விபத்துக்குப் பின்னர் 12 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த ஒரு மனிதனின் மூளையின் செயல்பாட்டைக் கவனித்தனர்.

டென்னிஸ் விளையாடுவதாகவோ அல்லது அவரது வீட்டைச் சுற்றி நடப்பதாகவோ கற்பனை செய்யும்படி அவரிடம் கேட்டபோது, ​​அவரது மூளையின் செயல்பாடு அவர் இந்த விஷயங்களைச் செய்ய நினைப்பதைப் பிரதிபலித்தது.

அதே போல தாவர நிலை என்று அழைக்கப்படுபவர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் முழு உணர்வுடன் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர்

கோமா நிலையில் இருக்கும் ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரைப் பார்ப்பவர்கள் வழக்கம் போல அவருடன் பேசலாம்; ஆனால் அவர் எவ்வளவு புரிந்துக் கொள்ள முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை: அந்த நபர் கேட்கவும் புரிந்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு உள்ளது: அவர்கள் இசையைக் கேட்கவும் விரும்பலாம்:ஒரு பார்வையாளர் பிடித்த வாசனை திரவியத்தை அணிவதன் மூலமோ அல்லது அந்த நபரின் கையைப் பிடிப்பதன் மூலமோ உதவலாம். தொடுதல், வாசனை, ஒலி மற்றும் பார்வை போன்ற உணர்வுகளைத் தூண்டுவது, அந்த நபரை மீட்க உதவும் என்றும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

கோமாவில் விளைவுகள்:

  1. :மூளை இறப்புக்கு முன்னேறுவது,
  2. சுயநினைவை மீட்டெடுப்பது அல்லது
  3. ஒரு தாவர நிலை போன்ற நாள்பட்ட மனச்சோர்வின் நிலைக்கு செல்வது.

மூளை மரணம்:

  • மூளை செயல்பாடு எதுவும் இருக்காது.
  • மூளை மரணம் என்றால் மரணம் தான்.
  • மூளையில் வீக்கம் ஏற்படுவதால் மூளை மரணம் ஏற்படுகிறது;
  • மூளையில் இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டு, உயிரணுக்களை ஆக்ஸிஜனேற்ற இரத்தம் இல்லாமல், திசு இறக்கிறது.
  • அதை மாற்ற முடியாது.
  • மூளை திசு இறந்தவுடன், அதை குணப்படுத்த எதுவும் செய்ய முடியாது.
  • மூளை சிந்தனை, இயக்கம் மற்றும் இரத்த அழுத்தம், இதய துடிப்பு, உடல் வெப்பநிலை, ஹார்மோன்கள், சுவாசம் போன்றவற்றை பராமரிக்க உடலை அனுமதிக்கும் அனைத்து நரம்பியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது. ஒரு நபரின் மூளை சாவிற்கு பிறகு,, ​​உடலின் முழு அமைப்பும் நிறுத்தப்படும். . மூச்சுவிட முடியாது, இதயம் துடிக்க முடியாது, மூளை இறந்தவுடன் உடல் செயல்பட முடியாது.
  • உறுப்பு செயல்பாட்டை பராமரிக்க செயற்கை மருத்துவ நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும், ஆனால் இவை ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே

மூளை இறப்பு சோதனை

மூளை மரணம் மிகவும் பழமைவாத நோயறிதல் மற்றும் கண்டுபிடிப்புகளில் எந்த சந்தேகமும் இல்லாதபோது மட்டுமே செய்யப்படுகிறது.

அது ஒவ்வொரு 200 மருத்துவமனை இறப்புகளில் ஒன்றில் நிகழும் ஒரு அரிய நிகழ்வு (சிடிசி ஆய்வு, 1986).

மூளை மரணம் ஏற்பட்டதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் தொடர்ச்சியான சோதனைகளை செய்வார்கள்.

இந்த சோதனைகள் உறுதிப்படுத்தும்: நோயாளிக்கு

  • வாய்மொழி அல்லது காட்சி கட்டளைக்கு எந்த பதிலும் இல்லை,
  • உறுப்புகள் செயல்படாத நிலையில்
  • கருவிழியின் அனிச்சை செயல் இல்லை;
  • தன்னிச்சையான சுவாசம் இல்லை.

இந்த சோதனைகள் உறுதி செய்யப்பட்ட பின்னரும் கூட, பல மருத்துவர்கள் மூளை இறப்பை உறுதி செய்யும் முன்பு கூடுதல், சோதனைகளை செய்கின்றனர்.

இவற்றில் பொதுவாக எலக்ட்ரோஎன்செபலோகிராம் (ஈ.இ.ஜி) மற்றும் பெருமூளை இரத்த ஓட்டம் (சி.பி.எஃப்) ஆய்வு கள் அடங்கும்.இது மிகவும் உணர்திறன் வாய்ந்தது, ஒரு நபரின் ஆடைகளில் உள்ள நிலையான மின்சாரம் கூட, EEG இல் ஒரு தவறான தன்மையைக் கொடுக்கும். EEG மைக்ரோவோல்ட்களில் மூளை மின்னழுத்தத்தை அளவிடுகிறது.

மூளை சாவும் கோமாவும் ஒன்றா?

  • ஆழ்ந்த கோமாவில் உள்ள நோயாளி கூட சில EEG எலக்ட்ரோஆக்டிவிட்டி காண்பிப்பார், அதே நேரத்தில் மூளை சாவு அடைந்த நோயாளி அவ்வாறு செய்ய மாட்டார்.
  • மூளைக்கு இரத்த ஓட்டம் இல்லை என்றால், மூளை இறந்துவிட்டது. கோமாவில் அப்படியில்லை.
  • கோமாவில் உள்ள நோயாளிகள் உறுப்பு, கண் அல்லது திசு தானத்திற்காக கருதப்படுவதில்லை. மூளை மரணம் உறுதி செய்யப்பட்டு, இறந்த நேரம் குறிப்பிடப்பட்ட பின்னரே, உறுப்பு தானம் சாத்தியமாக முடியும்.
  • கோமாவில் உள்ளவருக்கு மூளை சாவு ஏற்படும் நிலைக்கு போகலாம்.ஆனால் மூளை சாவு ஏற்படுமானால், அத்தோடு மரணம் உறுதிப்படுவது தான்.

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.

மறைந்த புற்றுநோய் மருத்துவர் சாந்தா அம்மாவை பற்றி கூற முடியுமா?

 




டாக்டர் சாந்தா அம்மா …😥😥 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை, மாரடைப்பால், தனது 93 வயதில் காலமானார்.

புற்றுநோய் ஆராய்ச்சியாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்த டாக்டர் சாந்தா அம்மாவிற்கு இந்தியாவின் விஞ்ஞானிகள், புற்றுநோயியல் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல மக்களாகிய நாமும் பெரிதும் கடன்பட்டிருக்கிறோம்.

நான் முதன்முதலில் அடையார் புற்றுநோய் நிறுவனத்தை பார்வையிட்ட போது, . அதன் தனித்துவமான தன்மையை என்னால் உடனடியாக உணர முடிந்தது. சாதாரண பின்னணியில் இருந்து வந்த பல நோயாளிகள் அங்கு இருந்தனர்; மருத்துவ ஊழியர்கள், அதிக நேரம் வேலை செய்தாலும், அதிநவீன தொழில்நுட்பத்தில் திறமையானவர்கள் என்றாலும் நோயாளிகளிடம் அனுதாபம் கொண்டவர்களாக இருந்தனர்; பராமரிப்பு வசதிகள் எளிமையாகவும் போதுமானதாகவும் இருந்தது. கிராமப்புற நோயாளிகளுடன் உறவினர்கள் விசாலமான மைதானத்தில் குழுமியிருக்க, ஒவ்வொருவராக அழைக்கப்படுகிறார்கள். நீண்ட வரிசைகள் இருந்த்தாலும், அனைத்து நோயாளிகளுக்கும் அதே நாளில் பரிசோதனைப் பணி தொடங்கப்படுகிறது..

வேலை. வருமான அடிப்படையிலான வேறுபாடுகளின்படி கட்டணம் செலுத்தும் முறை இருக்கிறது. என்றாலும். மருத்துவ சிகிச்சையில் நோயாளிகளுக்குள் வேறுபாடு இல்லாதது: எந்த விதத்திளாவது உயிரைக் காப்பாற்றுவதற்கான முன்னுரிமை, கொடுக்கப்படுவது; முக்கிய சிகிச்சைக்கான மேம்பட்ட தொழில்நுட்பம் : ஒட்டுமொத்தமாக ஒரு அரசு மருத்துவமனை போன்ற உணர்வும் கொடுக்கவில்லை.தனியார் மருத்துவமனையில் உள்ளது போன்றும் தோன்றவில்லை.. ஒரு தன்னாரவுள்ள தொண்டுள்ளத்துடன் , அங்குள்ள ஒவ்வொரு ஊழியரும் செயல்படுவது தெரிந்தது.

அந்த உணர்வு தான், என்னையும் ஈர்த்து, அங்கு தனியே அமைந்திருந்த குழந்தைகள் பிரிவுக்கு வார இறுதியில் சென்று, கதை படித்துக் காட்டவும், பாடம் சொல்லிக் கொடுக்கவும் செல்ல வைத்தது. அப்படி சென்ற வகையில் கொடுத்தது தான் தலைமுடி தானம். அது குறித்து என் பதிவு[1]

.1954 இந்தியா எப்படி இருந்தது என்று நமக்கு தெரிந்திருக்கும். .-பெரும் வறுமை, கொடிய தொற்று நோய்கள், அண்டை நாடுகளுடனான பிராந்திய பதட்டங்கள், கல்வியறிவின்மை மற்றும் அப்போது தான் கிடைத்திருந்த ஒரு புதிய சுதந்திரம் ஆகியவற்றை அடக்கியிருந்தது.

அந்த சமயம், டாக்டர் சாந்தா அம்மா, அடையார் புற்றுநோய் நிலையத்தில் மருத்துவராக சேர்ந்த போது அங்கு இருந்தது அவரோடு சேர்த்து இரண்டு மருத்துவர்கள் தான்.12 படுக்கைகள் மட்டுமே..

ஆரம்ப காலத்திலிருந்தே அடையார் புற்றுநோய் நிறுவனம், "கர்ம நோய்"என்றும் இதற்கு "மரணம் மட்டுமே தீர்வு" என்பதை போக்கி, புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம் என்று மக்களிடையே விழிப்புணர்வு கொண்டு வருவதிலும் முனைப்பு காட்டியது. பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் குறித்த விரிவான பதிவுகள் பராமரிக்கப்பட்டன; திரும்ப சிகிச்சைக்கு வராத கிராமப்புற நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்களை அனுப்பி வரவழைத்த சம்பவங்களும் உண்டு !!

..அந்த நிறுவனத்தை தொடங்கியது டாக்டர் முத்துலட்சமி ஆயிற்றே…அவரின் வீச்சு இவரை தொற்றாதோ!!

1964 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த தேசிய புற்றுநோய் மாநாட்டு அமர்வில் டாக்டர் சாந்தா அம்மா (முன் வரிசை, வலது மூலையில்), உலகம் முழுவதிலுமிருந்து இந்த துறையில் அறியப்பட்ட பெயர்களில் கலந்து கொண்டார். மாநாட்டின் இடமாக ஒரு மாணவர்களின் வகுப்பறை அந்தக் காலத்தின் கருத்தியல் உணர்வை எடுத்துக்காட்டுகிறது

டாக்டர் சாந்தா அம்மாவே சொல்வது போல " "தனது நோயாளிகளில் 60% நோயாளிகளுக்கு இலவசமாக அல்லது அதிக மானிய விலையில் சிகிச்சை அளிக்கும் புற்றுநோய் நிறுவனத்தின்" தலைவராக, டாக்டர் சாந்தா அம்மா ஆன போது புற்றுநோய் ஒரு மோசமான விலையுயர்ந்த நோயாக இருந்தது,

1961 ஆம் ஆண்டு டாக்டர் சாந்தா அம்மாவும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் நேருவை அழைத்து வந்தபோது, குணப்படுத்தப்பட்ட நோயாளிகள் வரிசையில் நின்று அவரை வரவேற்றனர்.

அவர் வாழ்நாள் சாதனைகள்

  • இந்தியாவில் மலிவு விலையில் புற்றுநோயை சிகிச்சையைத் தொடங்கினார்.
  • இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு மலிவு, சான்றுகள் சார்ந்த புற்றுநோய் சிகிச்சையின் முதல் முயற்சிகளில் ஒன்றைத் தொடங்கிய பெருமை டாக்டர் சாந்தா அம்மாவுக்கு உண்டு. இந்த குழுக்களுக்கு நிலையான கவனிப்புடன் சிகிச்சையளிப்பதற்கான அவரது முயற்சிகள் இன்றுவரை தொடர்கின்றன.
  • புற்றுநோயியல் நிபுணரான அவர் பலவற்றில் முதல்வராக இருந்தார் -
    • முதல் குழந்தை புற்றுநோயியல் கிளினிக்கைத் தொடங்கினார்,
    • முதலில் இந்தியாவில் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்தை நிறுவினார்,
    • முதலில் புற்றுநோயியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
    • இந்தியாவில் முதல் பரம்பரை புற்றுநோய் கிளினிக் திறக்கப்படுவதை மேற்பார்வையிட்டார். -
    • இந்தியாவின் முதல் பெரிய புற்றுநோய் கணக்கெடுப்புகளில் ஒன்றை நடத்தியது.
    • புற்றுநோயியல் நிபுணராக இருந்ததோடு மட்டுமல்லாமல், கூடுதலாக, டாக்டர் சாந்தா ஒரு ஆராய்ச்சியாளராகவும் இருந்தார். வாய்வழி புற்றுநோய்க்கான சிகிச்சையில் கதிர்வீச்சு மற்றும் ப்ளியோமைசின் (ஒரு கீமோ மருந்து) ஆகியவற்றின் விளைவுகளை ஒப்பிட்டு, இந்தியாவில் முதல் சேர்க்கை கீமோதெரபி சோதனைகளில் ஒன்றை அவர் நடத்தினார்.
    • அவரது பிற்கால வாழ்க்கையில், அவரது ஆராய்ச்சி பெரும்பாலும் இந்தியாவில் புற்றுநோய் தொற்றுநோயியல் மீது …வயிற்று புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகள் முதல் குழந்தை பருவ புற்றுநோய்கள் வரையிலான ஆய்வுகள், இந்திய ஆண்களில் வாய்வழி மற்றும் ஓசோஃபேஜியல் புற்றுநோய்களின் அபாயத்துடன் தொடர்புடைய புகையிலை மெல்லும் ஆபத்துகள் குறித்த உறுதியான அறிக்கை வரை கவனம் செலுத்தியது - .
    • இப்போது இன்றியமையாததாகக் கருதப்படும். புற்றுநோய் சிகிச்சையில் மிக முக்கியமான கருவியாக மரபணு விவரக்குறிப்பைப் பயன்படுத்தி புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்தார்.

அவர் வகித்த பதவிகள்

  • இந்திய புற்றுநோயியல் சங்கத்தின் (1988-1990) தலைவராக பணியாற்றினார்
  • 2005 வரை WHO ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார்.
  • ஒரு தேசிய மருத்துவ அறிவியல் அகாடமி (இந்தியா) சக உறுப்பினராகவும் இருந்தார்.

அவர் பெற்ற பட்டங்கள்

  • புற்றுநோய் சிகிச்சை வக்காலத்து மற்றும் ஆராய்ச்சியில் அவர் பணியாற்றியதற்காக, பத்மஸ்ரீ, பத்மா உட்பட பல விருதுகளைப் பெற்றார்.
  • 2006 இல் பூஷன்
  • 2016 இல் பத்ம விபூஷன் மற்றும் ரமோன் மாக்சேசே விருது.

சி.வி. ராமன் முதல் சுப்ரமண்யன் சந்திரசேகர் வரை யுள்ள ஒரு வலுவான கல்வி வம்சாவளியை கொண்ட அவர் குடும்பம் தான் டாக்டர் சாந்தா அம்மாவை மருத்துவ புற்றுநோயியல் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி என்று பெரிதும் அறியப்படாத துறையில் நுழையத தூண்டி இருக்கும் . என்று நினைக்கிறேன்.

இன்றைய மருத்துவர்களின் கவனிப்பு குறித்து கேட்டபோது, டாக்டர் அம்மா கூறியது "நான் இது குறித்து பேச தயங்குகிறேன், ஏனென்றால் நான் அதைப் பற்றி மகிழ்ச்சியடையவில்லை. இப்போது நோயாளி _-மருத்துவர் உறவு இல்லை. பச்சாத்தாபம் இல்லை. இரக்கம் இல்லை. அவர்கள் நோயாளிகளை ஒரு நுகர்வோர் பொருள் போலவே நடத்துகிறார்கள் ... தங்கள் குடும்பத்திற்கு நேரம் தேவை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆம், குடும்ப நேரம் கட்டாயமாகும். ஆனால் நான் சொல்கிறேன், 24 மணி நேரத்தில், நீங்கள் நேரத்தை உருவாக்க முடியும், நீங்கள் எப்போதும் நேரத்தைக் காணலாம். ”

"உங்கள் கைகளின் அதிர்வு அவர்களுக்கு செல்ல வேண்டும். நீங்கள் அவர்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்…" என்று மருத்துவர்களை பார்த்து அவர் சொல்லும் போது தான், நம்மிடம் தொலைந்து போன "குடும்ப மருத்துவரின்" முக்கியத்துவம் புரிகிறது.

புற்றுநோய் நோயாளிகள் குறித்து அவர் சொன்ன வார்த்தைகள் சத்தியமானவை "இறக்கும் போது, ​​மக்கள் எதையும் விரும்புவதில்லை. அங்குள்ள ஒருவர் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தான் அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வளவு நோய்வாய்ப்படாத போது, ​​அதற்காக மெதுவாக அவர்களை தயார் செய்ய வேண்டும். நம்பிக்கை இல்லாதபோதும், அவற்றைத் தக்கவைக்க நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். இது ஒரு கடினமான விஷயம்"

அம்மாவின் கனிவு ததும்பு கவனிப்பே, நோயாளிகளை குணப்படுத்த முக்கிய காரணி. அவர் கோவிலுக்கு போனதில்லை. .நேரம் இல்லை என்பது மட்டுமல்ல.. தன் இருப்பிடத்தையே கோயிலாக்கி கொண்டதால்…

பொதுவாக எல்லாத் தாய்மாரிடமும் ஒரு குறையை பார்க்கலாம்…ஒளி வீசும் மெழுகுவர்த்திக்கு கீழே இருக்கும் இருட்டு போல….தன் குழந்தைக்கு மட்டும் தனிப் பிரியம் காட்டுவாள். .

அவளே தெய்வ நிலைக்கு வைக்கப்படும் போது, ..

அந்த இருள் கூட அறியாத இந்த தெய்வத்தை..இழந்த அந்த கோயில்….!!

படித்தமைக்கு நன்றி.

ஸ்ரீஜா.