1. ஆள் பாதி ஆடை பாதி என்பார்களே.அதே தான் ஒரு இராணுவ வீரரின் உடை நேர்த்தியே அவர் மீது மரியாதையை ஏற்படுத்தும்.
2 உளவியல் பாடம் சொல்வது என்னவென்றால் ஒருவரை முதலிKல் பார்க்கும் போது, அவர அணிந்திருக்கும் காலணியில் தான் கவனம் போகுமாம். எந்த இராணுவ வீரரையும் ஷூ சாக்ஸ் இல்லாமல் பார்க்க முடியாது.
3. அவர் விடுமுறைக் காலத்தில் கூட சோம்பேறியாக வெறுமனே உட்கார்ந்து இருப்பதை பார்க்க முடியாது.எதேனும் ஒரு வேலையை செய்துக் கொண்டே இருப்பர்.
4. அவர்களுடைய ஹேர் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஓட்ட வெட்டிய முடி, ஒரு கண்ணியத்தைக் கொடுக்கும்.
5. உணவு பிரியர்கள்.அதே சமயம் கிடைப்பதைக் கொண்டு, உண்டு தன் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ளுபவர்கள்.
6. ஒழுங்கு என்றால் இலக்கணம் அவர்கள் தான். எந்த சலுகையும் எதிர்பார்ப்பதில்லை.சொலவதை மட்டுமே செய்பவர்கள்
7. அஞ்சா நெஞ்சினர்.பணியில் இருந்தாலும் விடுமுறையில் இருந்தாலும் அவர்கள் கடமை வீரர்கள்.
8. பணத்தை அதிகம் செலவழிக்க தெரியாதவர்கள். செலவழிப்பதையும் நேர்த்தியாக செலவழிப்பவர்கள்.
9. அவர்கள் மனம் எப்போதும் ஆக்டிவ மோட். தான். மோசமான சூழ்நிலையிலும் சரியாக சிந்திப்பவர்கள்.
10. ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் இல்லாமல் ஒரு நாடு இருக்கலாம்.ஆனால் இவர்கள் இல்லாமல் நாடு இல்லை.ஏன் அவர் குடும்பத்திலேயே அவர் இடத்தை வேறு ஒருவர நிரப்ப முடியாது.
இராணுவ வீரர் ஒவவொருவரும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் தான்.
ஆனால் நேரில் அவர்களை பார்க்கும்போது இப்படித்தானா நன்றியைக் காட்டுவது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக