யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீநி றைந்தாய்;தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-
பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-
பொறியை விஞ்சி நின்றாய்
இன்ப மாகி விட்டாய்-காளி!-
என்னு ளேபு குந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-
பின்பு நின்னை யல்லால்-காளி!-
பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய்-காளி!-
ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-
தொல்லை போக்கிவிட்டாய்
காளி ஸ்தோத்திரம்
யாதுமாகி நின்றாய்-காளி!-
எங்கும் நீநி றைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-
தீது நன்மையெல்லாம்-நின்தன்-
செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர்-வாழும்-
பொய்மை வாழ்க்கை யெல்லாம் ஆதிசக்தி, தாயே!-என் மீதருள் புரிந்து காப்பாய்.
எந்த நாளும் நின்மேல்-தாயே!
இசைகள் பாடி வாழ்வேன்;
கந்த னைப்ப யந்தாய்,-தாயே!
கந்த னைப்ப யந்தாய்,-தாயே!
கருணை வெள்ள மானாய்!
மந்த மாரு தத்தில்-வானில்-
மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும் அங்குன்-
சிந்தை யெங்கு செல்லும் அங்குன்-
செம்மை தோன்று மன்றே
கர்ம் யோக மொன்றே-உலகில்-
காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும்-இங்கே-
தர்ம நீதி சிறிதும்-இங்கே-
தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம்-நின்தன்-
மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-
செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-
தேசு கூட வேண்டும்.
என்த னுள்ள வெளியில்-ஞானத்-
திரவி யேற வேண்டும்;
குன்ற மொத்த தோளும்-மேருக்-
கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும்-நீயெந்-
நாளு மீதல் வேண்டும்;
ஒன்றை விட்டு மற்றோர்-துயரில்-
ஒன்றை விட்டு மற்றோர்-துயரில்-
உழலும் நெஞ்சம் வேண்டா.
வான கத்தி னொளியைக்-கண்டே-
மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன்-ஆகி-
யானெ தற்கும் அஞ்சேன்-ஆகி-
எந்த நாளும் வாழ்வேன்;
ஞான மொத்த தம்மா!-உவமை-
நானு ரைக்கொ ணாதாம்!
வான கத்தி னொளியின்-அழகை-
வாழ்த்து மாறி யாதோ?
ஞாயி றென்ற கோளம்-தருமோர்-
நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை-எவரே-
தேய மீதோர் உவமை-எவரே-
தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா!-அழகாம்-
மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத் தால்-ஆங்கே-
நேயமோ டுரைத் தால்-ஆங்கே-
நெஞ்சி ளக்க மெய்தும்.
காளி மீது நெஞ்சம்-என்றும்-
கலந்து நிற்க வேண்டும்;
வேளை யொத்த விறலும், பாரில்-
வேளை யொத்த விறலும், பாரில்-
வேந்த ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும்-என்றும்-
இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும்-அன்னாய்!
வாழி யீதல் வேண்டும்-அன்னாய்!
வாழ்க நின்தன் அருளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக