1.மத்தவங்க டான்ஸ் ஆடுறதைப் பார்க்கும்போது நமக்கேன் அத்தனை உற்சாகம் வருது தெரியுமா?
நாமே ஆடுறதுபோல நம்ம தசைகளும் முறுக்கிக்கொள்ளும். அதனால தான்.
2. ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமா பெண்கள் கண்கள் சிமிட்டுவார்கள்.(அதை தான் இவங்க கண்ணடிக்கிறாங்கன்னு தப்பா நினைகிராங்களோ)
3.மக்கள் ராத்திரியிலே அதிகமா அழக் காரணம் , தூக்கம் வராததனால், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது.
4.ராட்டினத்தினலே ஏறப் பயமாயிருந்தாலும், நாம போறது ஏன் தெரியுமா?
நாம பயப்படுற விஷயத்தை செய்யும் போதுதான் நமக்கு உண்மையான சந்தோஷம் ஏற்படுதாம்.
5.கிண்டல், கேலியை புரிஞ்சவங்களாலே தான் மத்தவங்க மனசையும் படிக்க முடியும்.
6. நம்ம உடம்பு பலவீனமா இருக்கும் நேரம் விடியற்காலை 3–4 போது தான். அதனால தான் அந்த நேரம், நிறைய பேரின் மரணமும் நடக்குது.
7. மத்தவங்க நம்மை பாக்கிறாங்கனாதான் நிறைய பேர் ஒழுங்கா இருக்காங்க.(இதை ட்ராபிக் போலிசே சொல்லுவார் !!)
8. தன்னம்பிக்கை குறைவா இருகிறவங்க தான் அடுத்தவங்களை அவமானப்படுத்துவாங்க.
9. கற்பனை திறன் உள்ளவங்க எப்போவும் அமைதியாத்தான் இருப்பாங்க. அவங்க ஒய்வுன்னாக்கூட படிப்பு சம்பந்தப்பட்ட விளையாட்டு தான் விளையாடுவாங்க.
10. நிறைய பேர் பழையப் பாட்டை விரும்புறதுக்குக் காரணம். அதனோட தொடர்புள்ள தன்னோட பழைய நினைவுகளால தான்
11.தனக்கு பிடிச்சவஙகளுக்குனா மெசேஜ் வேகமா செய்வோம்.
12. உன் கிட்ட ஒரு கேள்வி கேக்கணும்ன்னு சொன்னவுடனே, 98% பேர், தான் சமீபத்திலே பண்ணின எல்லாக் கெட்டதையும் நினைப்பாங்க
13. சராசரியா ஒரு விஷயம் பழக்கமா மாற 66 நாள் ஆகுதாம்.
14. பொய் சொல்லும்போது தன்னையே அறியாம, இடது பக்கம் பார்க்க வைக்கும்
15 தொலைஞ்சு போன பர்சுல ஒரு குழந்தை போட்டோ இருந்தா, திரும்ப அது கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருக்காம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக