எனக்கு போன வாரம் திடீர் என்று காசி அல்வா மீது ஆசை வந்தது. அதுவும் உடனே வேண்டும் போல தோன்றியது…
கல்யாணம் ஆன புதுசா என்ன…அல்வாவும் மல்லிப்பூவும் வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல..😀
அப்பவே இதை செய்யாதவரு இப்ப..போயி..
அப்ப அல்வா உடனே சாப்பிட என்ன வழி?
வீட்டில் செய்ய முடியாது.அதற்கான பொருட்கள் இல்லை.
காசி அல்வா என்ற உடனே கற்பகாம்பாள் மெஸ்ஸும் மனதுக்குள் வந்து விட்டது..🤣அங்கே தான் நல்லா இருக்கும்..😃
யாரை அனுப்பி வாங்கி வர சொல்வது? அங்கு தான் swiggy செல்லுபடி ஆகாதே…😀
அடுத்து, வேறென்ன…நான் தான் போக வேண்டும்…
ஹும்மம்..கபாலியை பார்த்தும் நாளாகி விட்டது..
அப்புறம் மென்ன..போன சோம வாரம் மாலை நடை திறந்தவுடன், திவ்யமாய் கற்பகாம்பாளையும் அவள் நாதனையும் தரிசனம் செய்துவிட்டு, அப்படியே ராசி, அம்பிகா, கிரியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு😆, மெஸ்சுக்குள் நுழைந்து, காசி அல்வாவையும், காஃபியையும் கபளீகரம் செய்து விட்டு😀..
இதை எதுக்கு சொல்றேன்னா..
நம்ம மனசு இருக்கே.
நாம நேசிக்கிற அல்லது விருப்படுறது எதுவானாலும் அதை அடைவது எப்படின்னு உடனே கணக்கு(☺️) போட ஆரம்பிச்சி, அதை செயல்படுத்த போயிடும்…
அப்படியும் கிடைக்காம போனா..
.
.
"கிட்டாதாயின் வெட்டென மற" தான்.
கஷ்டம் தான்..அதை மறக்க நினைக்கும்போது ஏற்படும் மன உளைச்சல் தாங்க முடியாது தான்.
ஆனால் ஒரு விஷயம் தெரியுமா..நமக்கு சேர வேண்டிய பொருள் என்றால், நாம் எடுக்கும் முயற்சியில் அது நம்மை வந்து அடைந்து விடும். இந்த பிரபஞ்ச இயக்கமே அப்படி தான்.
… வரலைனா, "அது நமக்கானது இல்லை..நமக்கென்று இதை விட சிறப்பானது😂 வேறொன்று நம்மை வந்து அடைய உள்ளது" என்பது தான் உண்மை..
ஒரு மாதம் முன்பு ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..தன் நிறைவேறாத காதலை பற்றியும், சமீபத்தில் அந்த காதலியை சந்தித்தது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்…
"உங்களுக்கு அவரை திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லையேன்னு இப்ப வருத்தமா இருக்கா?"ன்னு அவர்ட்ட கேட்டேன்.
"அய்யோ.. எண் மனைவி மாதிரி ஒரு பெண் கிடைத்தது என் அதிர்ஷ்டம்..என் காதலியின் இன்றைய நிலை பார்த்து அந்த நினைப்பு உறுதி தான் ஆச்சு"
அது தாங்க.. கடவுள் நாம விரும்புற எல்லாத்தையும் நமக்கு குடுத்துடறதில்லை. நமக்கு வேண்டியதை தான் கொடுக்கிறார்..
ஸ்ரீஜாக்கு மட்டும் எப்படி ஆசைப்பட்ட அல்வா உடனே கிடைக்குதுன்னு கேட்கக்கூடாது..அப்பா பொண்ணுக்கு இது கூட செய்யமாட்டாரா என்ன…😀
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக