ஜோதிடம் என்றாலே கட்டுக்கதை என்று நான் நினைத்த காலமும் உண்டு..ஆனால் வாழ்வில் நடந்த நிறைய புதிர்கள், தடாலடி திருப்புமுனைகள், சோகங்கள்,தொடர்ந்து விழுந்த மரண அடிகள், ஏன் எனக்கு மட்டும்? எற கேள்வியோடு என்னை தேட வைத்தது..
பக்தி மார்க்கத்தில் நுழைந்த நான், கர்ம மார்க்கத்தில் காலடி வைத்து, ஞான மார்க்கத்தின் அடியை பின்தொடர ஆரம்பித்த போது தான், ஜோதி என்னை உற்று நோக்க வைத்தது..
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் இருக்கும்
என்பதற்கேற்ப, வானத்தை ஆராயும் விஞ்ஞானிகள் கூட இந்த ஜோதிட சாஸ்திரத்தை அறிந்து வைத்திருந்தனர்.என்பதை
கண்டேன். .
நம் ஆர்யபட்டா, பாஸ்கரா ஆகியோர் கணித்த வானியல் கணக்கு பொய்கவில்லை என்பதையும், ஜோதிடமும் ஒரு அறிவியல் என்பதையும் என் தேடலின் மூலம் உணர்ந்து. அதனை ஆராய ஆரம்பித்துள்ளேன்.
இன்றைய நவீன காலத்திற்கு, நம் வேத காலத்து ஜோதிடத்தை சற்று கீழாக தான் தெரியும். காரணம் நவீன காலத்து கணக்கீடுகள்..
ஆனாலும், என்றுமே நாடி பொய் சொன்னதேயில்லை..அது மருத்துவம் என்றாலும் சரி..ஜாதகம் என்றாலும் சரி..
தவறு, அதை கணிப்பவரிடம் இருந்து வருகிறது..
ஊழி காலத்தில், ஓலைச்சுவடிகள் நாலா பக்கமும் சிதறிப்
போன போது, அதில் இருந்த இணைப்பு கன்னிகளும் கழண்று போனது..ஜோதிடம் குறித்து நான் பல இடங்களிலும் தேடி அலைந்து சேகரித்து தெரிந்து கொண்டபோது, அதில் கிடைத்த இந்த இணைப்பு கன்னியை கண்டு அதன் மூலம் வேத
கால நாடி ஜோதிடத்தை பற்றியும், அதன் துல்லியமான கணிப்பு
முறைகளையும், நான் அறிந்து கொண்டவற்றை ஒரு
காகத்தை போல, எல்லோருக்கும் பகிர தோன்றியது.
என் தேடல் பசி தீரும் வரையில் எனக்கு கிட்டும்
பொக்கிஷத்தை இங்கு பதிவிடலாம் என்று முனைதுள்ளேன். இதன் மூலமாவது அன்பர்கள் இத
மகத்துவத்தை உணர்ந்து, பொய்யான ஜோதிடர்களின் பொய்யுரைப்புகளின் பின்னால் சென்று
பணத்தை வாரி இறைத்து, மன சோர்வு அடைவதை தடுக்கும் எண்ணமே இதன் அடிப்படை. இந்த பதிவுகளின் மூலமாக, யாரேனும்
ஒருவருக்காவது இந்த வேத கால நாடி ஜோதிட முறையில் நம்பிக்கை ஏற்பட வைத்தால் அதுவே
எனக்கு கிடைத்த வெற்றி என எண்ணுகிறேன். இந்த தொடரில்,. முடிந்த வரையில், நான் சேகரித்த, அறிந்தவற்றை தொகுத்துக் கொடுக்க முயன்று உள்ளேன்.
நன்றி.
ஸ்ரீஜா சுப்ரமணியன்.
தொடர்புடைய பதிவுகள்
https://sankatamthavirkumsattam.blogspot.com/2021/07/blog-post_20.html
https://shrijha.blogspot.com/2021/07/1.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக