சனி, 31 ஜூலை, 2021

ஜோதிடத்தின் ஜோதி. 07 ..சந்திரன் இல்லை என்றால் என்ன நடக்கும்?

 பூமிக்கு அருகில் இருக்கும், அதை சுற்றி வரும் சந்திரன் இல்லை என்றால் என்ன நடக்கும்?

ஒன்றும் நடக்காது!!

உண்மை தான்... 

பூமியில் உயிர்கள் இருக்காது..

பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு, சூரியனை வலம் வரும்போது, சூரியனின் ஒளியில் இருந்து மறையும் போது ஏற்படும் இருளை போக்குவது சந்திரன் தானே..

தான் சூரியனிடம் பெற்ற ஒளியை பூமிக்கு கொடுக்கிறது.அதைக் கொண்டு தான் பூமி, தான் மீண்டும் சூரியனின் ஒளிப்பாதைக்கு வரும் வரையில், கிட்டத்தட்ட 12 மணி நேரம், , உயிர்களின் இயக்கம் தொடர்கிறது..

ஒரு இரவில் சில மணித்துளிகள் கரண்ட் போனாலே நம்மால் சமாளிக்க முடியாமல் தினறுகிறோம்.அப்படியிருக்க, சந்திரன் இல்லையேல்..அனைத்து உயிர் இயக்கமும் அப்படி அப்படியே நின்று போய் நிலைகுலைந்து விடும்.

இது அறிவியல் பூர்வமாக சொல்லக்கூடியது..

இன்னொரு விதத்திலும் பாருங்கள்..நம் மனதை முழுமையாக ஆள்வது இந்த பவுர்ணமி சந்திரன் தானே!!

மொட்டை மாடியில் நானும் சந்திரனும் தனித்திருக்க, அந்த ஏகாந்தமான நிமிடங்கள்..இதோ என்னோடு கொஞ்சிக் கொண்டிருந்ததை படம் பிடித்தது

சந்திரனை பார்த்துக்கொண்டிருக்கும் ,போது  தான் , அம்மாவின் ஞாபகமும் சேர்ந்து வந்து விடுகிறது..

இப்போது போல மாடி வீடு அப்போது இல்லை. வீட்டின் நடுவில் பெரிய முற்றம் உண்டு.அம்மா அதன் ஒரு மூலையில் பீர்க்கஙகாய், புடலஙகாய் கொடி பந்தலும் போட்டிருப்பார். வீட்டில் எப்போதும் கோழிகளும் அதன் குஞ்சுகளும் ஓடிக் கொண்டு திரியும்.

காலையில் எழுந்தவுடன், மலர்ந்து கிடக்கும் அந்த மஞ்சள் பூக்களை பறிக்கும் போது, கோழிக்குஞ்சுகள் அதை கொத்த வர, அதை துரத்த என்று காலையின் ஆரம்பமே ஆனந்தமா இருக்கும்….😆

அதுவே கோடைக்காலமா இருந்தா, சாயந்திரமே முற்றத்தில் தண்ணீர் தெளித்து விட்டு வைத்து விடுவோம்..ராத்திரி தூக்கம் அந்த முற்றத்தில் தான்..அப்போதெல்லாம் அக்கம்பக்கத்தில் பெரிய மச்சு வீடுகள் இல்லை.இருந்தாலும் யாரும் எட்டிப்பார்க்கும் பழக்கமும் கிடையாது.. தெருவில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் எல்லாம் ரொம்ப நெருக்கமும் கூட..எந்த வித்தியாசமும் தெரியாது..

அந்த முற்றத்தில் பாய், ஜமுக்கலாம் விரித்துக்கொண்டு, அம்மாவுக்கு பக்கத்தில் படுத்துக்கொள்ள ஒரு போட்டியே நடக்கும்.. எப்படியோ,  அம்மா எல்லோரும் தனக்கு பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்..😂

அம்மாவை போலவே அம்மா சொல்லும் கதைகளும் ரொம்ப சுவாரசியமா இருக்கும்...மல்லாக்க படுத்துக்கொண்டு அந்த வானத்தையம், சந்திரனையும் பார்த்துக்கொண்டே, கதையை கேட்டுக்கொண்டு..எப்போது தூங்கிப்போவோம் என்றே தெரியாது!!

அந்த நாட்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது..இப்போதும் நிலா இருக்கிறது. இந்த மொட்டை மாடி இருக்கிறது. ஆனால் கதை கேட்க தான் பிள்ளைகளுக்கு ஆர்வமில்லை!! அவர்கள் படிக்கும் க்ரீக் மிதாலஜி கதைகளுடன் அவை ஓடடவில்லையாம்!☺️

அட.. நமக்கு மட்டுமா குறை இருக்கும்..நிலவுக்கும் கூட உண்டு தான்..என்ன தான் புதன் கிரகத்தை தன் மகனாக பிரியம் காட்டினாலும், புதன் சந்திரனை எதிரியாக தான் நினைக்கிறது என்கிறது புராணம் !!

அத்தோடு மட்டும் விட்டதா..தன் பிறப்பில் ஏற்பட்ட பழியின் காரணமாக குருவின் மீது கோபம் கொண்டு,  தானே கலைகளை கற்றுக்கொண்டதாம்….

இருக்காதா..புதன் நாராயணனின் அம்சம் ஆச்சே!!

இதை ஜோதிடமும் ஆமோதிக்கும் விதமா, புதனின் ஆட்சிக்குட்பட்ட கன்னி ராசிக்கு குரு வரும்போது நீச்சம் அடைகிறார்! சந்திரனின்புதன் கிரகம் தனது பகை ராசியான கடகத்தில் நின்று இருந்தால், நரம்பு தளர்வு, பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரலாம்.

 புதன் நீச்ச ராசியான மீனத்தில் இருந்தால், வாயுத் தொல்லையால் கை கால் பிடிப்பு இருக்கும். ஞாபக சக்தி குறையும். தலை உச்சி பகுதியில் வலி இருக்கும்.

 புதன் பகை கிரகமான சந்திரனுடன் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபருக்கு திக்கு வாய் ஏற்பட வாய்ப்புண்டு. காலநிலைக்கு ஏற்றவாறு தொற்று நோய்கள் வரலாம். போதை வஸ்துகளாலும் நோய்கள் வரக்கூடும்.

 புதன் பகை கிரகமான சந்திரனின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் உடலில் கெட்ட நீர் சேரும். எந்த நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பதால், புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல நடந்துகொள்வார். அடிக்கடி தலைவலி வரும்.

மேலே சொன்ன குறைபாடுகளை உடையவர்கள் ஜாதகத்தை பார்க்கும்போது ஒத்துப்போகிறது!!

ஜோதிடம் ஒரு அறிவியல் என்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!!

இவர்கள் பிரச்சினைக்கு நாம் ஒவ்வொருவருமே சாட்சி..இல்லையா?

 பின்னே.சந்திரன் ஆளும் நம் மனசு ஒரு பக்கமும், புதனின் ஆளுகைக்கு உட்பட்ட புத்தி இன்னோரு புறமும் பியத்துக்கொண்டு போய், நம்மை சமயத்தில் தலையை பிய்த்துக்கொண்டு உட்கார வைப்பதில்லையா!!

என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஊருக்கே குளுமை கொடுக்கும் சந்திரனுக்கும் கவலை உண்டு தான் போலும்!!

சந்திரனுக்கு 27 மனைவிகள் உள்ளனர். என்றும் அதில் ரோகினியின் மீது தான் அவருக்கு பிரியமும் அதிகமாம்!

வானவியல் ஆராய்ச்சியும் அதைத்தானே நிரூபிக்கிறது…27 நட்சத்திரங்கள் புடை சூழ இருக்கும் சந்திரன், ரோகிணி நட்சத்திரத்தில் தான் தன் பூரன அழகை ..பொலிவை காட்டுகிறது!!

இதற்கு சாட்சி அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை பார்த்துக்கொள்ளுங்கள்!!

இதோ நம் மனம் கவர்ந்த சந்திரனின் மனம் கவர்ந்த தேவதை!!

ஆனாலும் சந்திரனை என்னால் ஒரு ஆணாக நினைத்து கூட பார்க்கமுடியலை..😁

அது என்னுடைய சிறு வயதிலிருந்து கூட வரும் தோழி…நிலா நிலா ஓடிவான்னு நான் பேச பழகிய காலத்திலுருந்து என் கூட ஓடி வரும் தோழி!!

மகிழ்ச்சியை வெளிப்படுத்த மட்டுமல்ல…என் சோகத்தையும் பகிர்ந்து கொண்டது..

எத்தனையோ காலம் காலமாய் சோகத்தை வெளிப்படுத்தும் பெண்களுக்கு அந்த சந்திரன் தான் ஆறுதலை கொடுத்திருக்கிறது…

பாரி மகள்கள் , தந்தையின் சோகத்தை நிலவிடம் தானே சொன்னர்!!

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்

எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்

வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!

இப்படி பெண்களின் வாழ்வின் ஏற்றத் தாழ்விற்கு மட்டும் துணை நிற்கவில்லை சந்திரன்.தமிழர்களின் வாழ்வின் அங்கமாகவே ஆனதே!!

ஒருவர் பிறந்த நேரத்தில் சந்திரன் நின்ற கட்டமே அவரின் ராசியாகி, வாழ்வை தீர்மானிக்கிறது..

தமிழ் மாதங்கள் அதை கொண்டே !!

அதன் மறையும் அமாவாசையும் உச்சமான பவுர்ணமியும் நம் வாழ்வோடு மட்டுமா கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்தது

பெளர்ணமி தினங்களில் கோயில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்படுவதும், அன்னதானம் நடைபெறுவதும் வழக்கம்.இல்லையா?

அதுவும் இந்த சித்ரா பவுர்ணமியில், திருவண்ணாமலையில் நடக்கும் விஷேஷத்தை கேட்கவே வேண்டாம்!

சாபம் பெற்ற சந்திரனின் துயர் போக்க தன் தலையில் சூடி, அதை காத்த "சந்திரசேகரன்" ஆயிற்றே!!

ஆமாம்..சந்திரனை முதன் முதலில் தொட்டது ஆர்ம்ஸ்ட்ராங் என்று தான் நாம் நினைத்திருந்தோம்….

வைரமுத்து தான் அதில் ஒரு சந்தேகத்தை கிளப்பி விட்டார்!!




https://youtu.be/Q2xcq

வியாழன், 29 ஜூலை, 2021

ஜோதிடத்தின் ஜோதி. 06.குருவின் பலன் என்றால் வியாழன் கோளின் அதிர்வலையா அல்ல குரு பகவானின் ஆசிர்வாதமா?

 இரண்டு குருவும் வெவ்வேறு..

ஒருவர் தட்ஷிணாமூர்த்தி என்னும் குரு பகவான்.மற்றொருவர் பிரபஞ்சத்தில் சூரியனை மையமாக கொண்டு பூமியின் வெளி வட்டபாதையில் சுற்றும் கிரகம்..


இவருக்கு மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு எனன?

பஞ்சபூதங்களும் நம் உடம்பில் ஐக்கியம் எந்த நம் மகான்கள், ஆகாயத்தை குருவாக காட்டினர்..இந்த பிரபஞ்சம் என்னும் வெளியில் மறைந்திருக்கும் கல்வி, கேள்வி, ஞானத்தை, நம் தலையில் இருக்கும் மூளையே கிரகிப்பதால், அந்த ஞானங்களுக்கு தலைவரான தேவ குரு எனப்படும் வியாழனுக்கும் நம் வாழ்விற்கும் தொடர்பை உறுதிப்படுத்தினர்!

குரு பார்க்க கோடி நன்மை" என்பது இவரை தான்…

அப்படி அவர் பார்வையில் மட்டும் என்ன விசேஷம்?

குரு மட்டுமே மற்ற கிரகங்களை விட சூரியனின் ஒளியை பெற்று இருமடங்காக பிரதிபலிக்கக் கூடியவர்..

ஜோதிடம் என்பதே ஒளியை பற்றியது..அதிக ஒளி கொண்ட கிரகத்தின் பார்வை பட்டால்??

ஒருவர் வாழ்வுக்கு என்ன தேவை?

நல்ல மனைவி/கணவன், தனம், புத்திரர்கள்..இதையெல்லாம் அருளக் கூடியவர் இவரை "தனகாரகன்", " புத்திரகாரகன்" என்பர்.அதனால் தான் இவர் இணைந்து மற்ற கிரகத்துடன் இருப்பதை விட, இவர் பார்வையை அந்த ராசி கட்டமோ அல்லது மற்ற கிரகமோ பெறுவது விசேஷமாக பார்க்கப்படுகிறது..அவர் நீச்சமாக இருக்கும் போதும், அவர் பார்வை விழுந்தால், இருக்கும் கிரகத்திலேயே கொடிய பாபியாகிய சனியும் சுபத்துவம் பெறுவார்!

அது மட்டுமா..இருக்கும் ஒன்பது கிரகங்களையும் சுபத்துவம் பெற்றவை, அசுபத்துவம் கொண்டவை என்று வருசைப்படுத்தினால், சுபகிரகங்களின் தலைவர் இவரே!

இந்த பிரபஞ்ச நாயகன் சூரியனே ஒரு அரை பாபி தானே!!

அதனால் தான் அவர் "குரு பகவான்" எனப்படுகிறார்!!

ஒன்று சொல்லவா..குரு ஒரு பிராமணர் என்பதால் அவர் தனித்து ஒரு ராசி கட்டத்தில் இருப்பது மேன்மை தராது..

ஒற்றை பிராமணன் எதிரில் வந்தால்…ஒரு சொல்வடையே உண்டே!!

ஏன் அப்படி சொல்கிறார்கள்?

குரு தானே இயங்க மாட்டார்..மற்றவரை இயங்க மட்டுமே வைப்பார்!!

அதுவும் வளர்பிறை சந்திரனுடன் அவர் சேரும்போது, விசேஷ பலன் கொடுப்பார்!

அதனால் தான் ஓவ்வொரு வருடமும் அடுத்த ராசிக்கு பயணமாகும் குருவை எல்லோரும் ஆரவாரமாக வரவேற்கிறார்கள்!!

இன்னொரு குரு எனப்படும் "தெட்ஷிணாமூர்த்தி" தென் திசையை நோக்கி அமர்ந்து சின் முத்திரை காட்டி அமர்ந்து இருப்பவர்!!

கயிலையில் தனியே அமர்ந்து தவத்தில் ஈடுபட்டிருந்த சிவபெருமானை சனகாதி முனிவர்கள் அணுகி, தங்களுக்கு ஞானத்தை உபதேசிக்க வேண்டினர்களாம். ஆனால் அவரோ மவுனமாக. சின்முத்திரை காட்டி அவர்களுக்கு போதித்தார் என்பர்..சாத்திரங்கள், வீணை, யோகம் மற்றும் ஞானம் ஆகியவற்றை உபதேசிக்கின்ற தட்சிணாமூர்த்தி வடிவமாக சிவபெருமான் வணங்கப்படுகிறார்

அமைதியாக புன்னகை தவழும் முகத்தோடு அருள்பாலிக்கும் இந்த தட்சிணாமூர்த்தியின் அழகும், அவரது இடது தோளின் பின்புறம், பரிவோடு தோளைப் பற்றியவாறும் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பது போலவும் அமைந்துள்ள பார்வதி தேவியின் அழகிய திருவடிவையம் சுருட்டபப்பளளியில் காணலாம்!!

இவரை வணங்குவதால் கல்வி, கேள்வி, ஞானம் கிடைக்கும்!

நம் வாழ்க்கையில் ஏற்றம் பெற, குருவின் அருளாசி கண்டிப்பாக தேவை..

நமக்கு வழிகாட்டும் குருவாக, சக மனிதன்/மஹான் ஒருவரை ஏற்று, அவர் வழி நடப்பது நல்லது என்பதால் யாரை குருவாக தேர்ந்தெடுப்பது? என்ற கேள்வி, நிறைய பேருக்கு குழப்பத்தை கொடுக்கும்?

இது போன்ற ஒரு சந்தேகத்தை, ஒரு ஞானியிடம் அவருடைய சீடர்கள் கேட்டனர்.

"குருவே, உங்களுடைய குரு யார்?'

.நான் யாரிடமிருந்து எல்லாம் ஏதாவது பாடம் கற்றுக் கொண்டேனோ, அவர்கள் அனைவரும் என் குரு ஆவார்கள். ஏன், ஒரு கழுதைகூட என் குருதான்'

சீடர்களுக்குப் புரியவில்லை, விளக்கம் கேட்டனர்.

குரு சொன்னார் - 'கழுதை காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டைகளைச் சுமந்து செல்கிறோமே என்று வருத்தப்படுவதில்லை. மாலையில் சுத்தமான துணிகளைச் சுமந்து வருவதைப் பற்றி மகிழ்ச்சியும் கொள்வதில்லை. ஏழையின் துணிகளைச் சுமந்தாலும் சரி, மகாராஜாவின் துணிகளைச் சுமந்தாலும் சரி, ஒரே மனநிலைதான். அதைப் பார்த்துதான் இன்பம் வரும் பொழுது துள்ளிக் குதிக்காமலும் துன்பம் வரும்பொழுது துவண்டு போகாமலும் இருக்கும் ஞானத்தைக் கற்றுக் கொண்டேன்'," என்றார்..

அதுனால, பேரில். "ஆனந்தா"ன்னு வச்சுரூக்கிறவங்களை குருவாக ஏத்துக்கிட்டாலேயே வாழ்க்கையில் ஆனந்தம் வந்துடாது!!

செவ்வாய், 27 ஜூலை, 2021

ஜோதிடத்தின் ஜோதி 04...ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ராகு கேது தோஷம், பித்ரு தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இவையெல்லாம் இருந்தால் அப்பெண்ணுக்கு திருமணமே நடக்காது என்றும், அப்படியே ஆனாலும் திருமண வாழ்க்கை நிலைக்காது என்கிறார்களே, அது உண்மையா?

 ஓட்டக்கூத்தனின் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்….

இந்த சொல்வடையை கேட்டுரூப்பீங்க... இது தான் இந்த வினாவை படிக்கும்போது தோன்றியது.   

அடேங்கப்பா.......ஒரு பெண்ணு`க்கு கல்யாணம் ஆகணும்ன்னா, தோஷம் என்ற பேரில் இருக்கும் இத்தனை தடைகளை தாண்டி வரணும்!!

ஒரு ஜாதகத்திலே  மொத்தமே பன்னிரண்டு கட்டம் தான் இருக்கு. அதில் இரண்டாம் பாவம் எனும் குடும்ப ஸ்தானம், நான்காம் பாவம் எனும் பெண்ணின் ஒழுக்கம் குறித்தது, ஏழாம் பாவம் எனும் திருமண வாழ்க்கை, எட்டாம் பாவம் குறிக்கும் கணவனின் ஆயுள் ,ஒன்பதாம் பாவம் என்னும் முன்னோர் ஆசீர்வாதம், ஐந்தாம  பாவம் தரும் குழந்தை பாக்கியம் …கடைசியா இல்லற சுகம் கொடுக்கும் பன்னிரண்டாம் பாவம் .இவற்றில் உள்ள செவ்வாய், ராகு, கேது சனி இணைவு, பார்வை இதை மட்டுமே வைத்து தோஷம்னு ஒதுக்குவது என்பது ……..

என்னடாது சட்டத்தை பத்தி பேசிக்கொண்டிருந்தவள்  தோஷத்தை பற்றி பேச வந்திருககாலேன்னு நீங்க முனுமுனுக்கிறது கேக்குது...'தோஷம்' ன்னா 'குற்றம்' ன்னு தானே அர்த்தம்...அப்ப நான் வராம வேறு யாரு வறது?!!

ஓட்டக்கூத்தனின் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்…ன்னு சொல்லும் கதை தான் ஞாபகத்துக்கு வருது.!!

ஒரு பெண்ணிற்கு திருமணத்திற்கு வரன் தேட ஜாதக க்கட்டை எடுக்கும்போது தான் இந்த செவ்வாய் தோஷம் பெரிதாக பேசப்படுது.

இதில் பெரும்பான்மையானவை தோஷமே கிடையாதுன்னு தான் நம் வேத கால ஜோதிடமும், பெரியவர்களும் சொல்லியுள்ளனர்..  ஆனாலும் நம் ஜோதிடர்கள் இருக்கிறாங்களே...

ஒரு விதத்தில் இந்த தொழில் முறை ஜோதிடர்கள் நிறைய பேர், வேலையில் இருந்து ஓய்வு பெற்றவுடன், இந்த சான்றிழ் படிப்பு படித்துவிட்டு ஜோதிடரானவர்களாக இருக்கிறார்கள்.. இவர்களின் வயதை பார்த்துவிட்டு ஜோதிடத்தில் அவர்கள் அனுபவம் உள்ளவர்களாக நினைத்து ஏமாந்து போகும் நபர்கள் தான் அதிகம் என்று தான் ஆதித்ய குருஜி அவர்களும் விளாசியிருக்கிறார்!!

 ஒரு விதத்தில் இதையே தான் சட்டப்படிப்பிலும் பெரும்பாலான அரசு அலுவலர்கள் கையாள்கிறார்கள்.  பணிக்காலத்திலேயே  தபாலிலும் மாலை நேர வகுப்பிலும் சட்டத்தை படித்து விட்டு, ஓய்வு பெற்றவுடன், வக்கீலாக ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர்.   

அதுவும் அவர்கள் துறையில் நடக்கும் ஓட்டை உடைசல் எல்லாம் ஏற்கெனவே அத்துபடி.. 

அந்த டிப்ளோமா ஜோதிடர்கள் போல தான், மக்களும், இவர்களின் நரைத்த தலையை பார்த்துவிட்டு, ஏதோ சட்டத்தையே இவர்கள் கரைத்து குடித்துவிட்டது போல நினைத்து  ஏமாந்து போகிறார்கள்..

இப்போது அது போன்ற மாலை நேர சட்ட கல்வி இல்லையென்றாலும்  திருப்பதி இருக்கிறதாமே!!\ நம்பி போபவர்களை  மொட்டை அடிக்காமல் இருந்தால் சரி தான்!!

பெண்ணின் திருமணத்திற்கு பெரிய முட்டுக்கட்டை என்று போடுவது 'செவ்வாய்' தோஷத்தை தான்!!


முருகன் தான் தமிழர்களின் முழு முதல் கடவுள் என்னும் நாம் தான் செவ்வாயை 'வெறும் வாய்'  ன்னு ஒதுக்கி தள்றவங்க!! இத்தனைக்கும் ஹிந்திக்காரர்கள் அந்த நாளை 'மங்கள் கார்கா"ன்னு பெருமையா தான் வைத்திருககிறார்கள்!!

லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டு ஆகிய பாவங்களில் செவ்வாய் அமர்ந்தால் அது செவ்வாய் தோஷமாம்.  அப்புறம்,  சுக்கிரனுக்கு இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டில் இருந்தாலும் செவ்வாய் லக்னத்தில் இருந்தாலும் தோஷமாம்..

செவ்வாய் ஒரு பாபக்கிரகம் என்பதால் அவர் இருக்கும் இடம் அவரது பார்வை படும் இடங்கள் பலவீனம் அடையும். என்ற கருத்தில் இந்த தோஷம் சொல்லப்பட்டது. ஆனாலும் ஜோதிடத்தில் விதிகளை  விட விதிவிலக்குகளைத்தான் அதிகம் கவனிக்க வேண்டும்..

மேலே சொன்ன பாவங்களில்  இருக்கும் செவ்வாய் சுப பார்வையோடு இருக்கிறாரா?  அந்த லக்னங்களுக்கு தீமை செய்பவரா? கெடுதல் செய்யும் அமைப்பில் இருக்கிறாரா? வலுவாக இருக்கிறாரா? எந்தெந்த கிரகத்துடன்  இணைந்திருக்கிறார்? சூட்சும வலு இருகிறதா?  கெடுதல் செய்வார் என்றால் எந்த வயதில் எப்போது செய்வார் ? அவருடைய தசை எப்போது வரும்..அத்தோது, கூடவே இருந்து திருமணத்தை கெடுககிறாரா? .இதையெல்லாம் பார்த்துவிட்டே தோஷம் இருக்கிறதா என்று கணிக்க வேண்டும். 

அந்த விதிவிலக்குகளை இங்கே பாருங்க...

 ஆட்சி, உச்சம் பெற்ற செவ்வாய் குருவுடனோ, சந்திரனுடனோ இணைந்து அல்லது அவர்களின் பார்வையில் இருந்தாலோ அல்லது வேறு வகைகளில் சுபத்துவமோ அல்லது சூட்சும வலுவோ அடைந்திருந்தால் மட்டுமே தோஷமில்லை என்று துல்லியமாகச் சொல்லப்பட வேண்டும்.

2.   குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றோ செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

3.   சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாமில் இருந்தால் தோஷம் இல்லை.

4.   சுக்கிரனுக்கு நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திரங்களில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.

5.   மேற்கண்ட வீடுகளில் செவ்வாய், சந்திரனுடனோ, புதனுடனோ அல்லது இருவரும் சேர்ந்து இணைந்திருந்தாலோ தோஷம் இல்லை.

6.   ராகு-கேதுக்களுடன் செவ்வாய் நெருக்கமாக இணைந்து பலவீனம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

7.   மேஷம், விருச்சிகம், கடகம், சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை

8.   சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

9.   செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை

10. அஸ்தமன செவ்வாய்க்கு தோஷம் இல்லை.

11. செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் இல்லை

அசுப கிரகங்கள் என்ற சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது தேய்பிறைச் சந்திரன் இவைகளில் சனி மட்டும தான் முழுமையான பாபக் கிரகம்.  

சூரியன் அரைப் பாபர்.  ராகு,கேதுக்கள் முழுப் பாபர்கள் என்றாலும் தான் இருக்கும் வீட்டின் அதிபதி, தன்னோடு இணையும் மற்றும் பார்க்கும் கிரகங்களைப் போலவும் செயல்படுவார்கள் .பவுர்ணமிக்குப் பிறகு உருப்பெறும் தேய்பிறைச் சந்திரன் படிப்படியாக தனது சுபத் தன்மையை இழந்து  அமாவாசையன்று முழுப் பாபராவார். சனி மட்டும் தான் , ஆதிபத்திய சுபராகவும், லக்னாதிபதியாகவும் இருக்கும்போது கூட, ஸ்தான பலம் மட்டும் பெற்று சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெறாமால் ஆட்சி, உச்சம் அடைந்தாலும் கெடுபலன்களையே செய்வார்.  அந்த ஜாதகருக்கு தாமத திருமணம் அல்லது திருமணமே ஆகாத நிலை உண்டாகும். 

லக்னாதிபதியாகவோ ஆதிபத்தியச் சுபராகவோ இருந்தாலும் செவ்வாய் இரண்டு, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் ஆட்சியாகவோ உச்சமாகவோ இருந்தால் கெடுபலன்கள்தான். இது செவ்வாய் தோஷம்தான் என்கிறார் குருஜி.. இதில் சனி சேர்ந்தால கேட்கவே வேண்டாம்.   செவ்வாய் சுபத் தன்மையோ சூட்சும வலுவோ பெற்றிருந்தால் மட்டுமே இந்த பலன் மாறும். 

சரி இதுபோன்ற அமைப்புடையவர்களுக்கு எப்போது தான் திருமணம் நடக்கும்?

பெண்ணாக இருந்தால் முப்பது வயதிற்கு அருகிலும், ஆணாக இருந்தால் முப்பத்தி ஐந்து வயதிற்கு அருகிலும் திருமணம் நடக்கும்.தாமதமாக திருமணமானாலும் நல்ல வாழ்க்கையே அமையும்.

இது ஒரு விதத்தில் நல்லது தான்..தேவையில்லாமல் நீதிமன்றத்திற்கு அலைவது நேராது!! கெட்டதிலும் ஒரு நன்மை!!

அதனால், செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் இருக்கிறது என்பதாலேயே திருமணம் நடக்காது என்றில்லை. முறையான இறை வழிபாடுகள் மூலம், திருமணத்தை காப்பாற்றிக் கொள்ளலாம்.

திங்கள், 26 ஜூலை, 2021

ஜோதிடத்தின் ஜோதி 03 ....காலம் என்பதை எப்படி புரிந்து கொள்வது?


காலம் ...

தன முன் நடந்ததை, நடந்துக கொண்டிருப்பதை, ஒரு சாட்சி பாவமாக மட்டும்  அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது.  

 எண்ணிபபார்க்கவே இயலாத ஆச்சரியங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் பிரம்பஞ்சத்தின் ரகசியம் அறிந்தது...

முடிவேயில்லாத இந்த காலம மற்றும்  பிரபஞ்சத்திற்கும் அதே போன்ற முடிவேயில்லாத இந்த எண்களுக்கும் தான் எத்தனை பொருத்தம்.!! 

ஒன்றுக்குள் ஒன்று  பின்னிப் பிணைந்து இவைகள் ஆடும் கண்ணா மூச்சி தான் எத்தனை எத்தனை!!

இந்த காலத்தை மட்டுமா கணக்கிட்டனர் நம் ரிஷிகள்... கணிதத்தையும் தானே...

கணிதத்தின் மூலம்,  ஆரம்பம் எனப்படும் ' ௦' என்பதை மட்டும் இந்தியா கண்டுபிடிக்கவில்லை.   இந்த '௦ ' க்கும் தாண்டி -1, -2, -3  என்றும, அந்த பக்கம் 1, 2.,3 .... போய்க்கொண்டே இருந்து கடைசியில் இந்த எண்ணிலடங்காததை 'முடிவிலி' என்ற வார்த்தை கொண்டு விளக்கவில்லையா..?.

அதையே தானே இன்று வானவியளர்களும், இந்த பிரபஞ்சம் முடிவேயில்லாத பல கோடி பால் வெளிகளை கொண்டுள்ளது என்று சொல்லவில்லை?

இந்த முடிவேயில்லாதது தான் பிரம்மம் என்னும்  இறைவன் என்கின்றனர் வேத ரிஷிகள்.

ஈர்ப்பு சத்தியின் வீச்சைக் கொண்டு இந்த பிரபஞ்ஜத்தில்  கிரகங்கள்  ஆளுமை செய்வதை கணித்தவர்கள் அதை கொண்டே காலத்தை பிரித்தனர்.




அதன்படி ஹோரை எனப்படுவது இரண்டரை நாழிகை என்றும், (ஹோரை  என்பது 'Hour" என்பதை ஒத்து இல்லை? 

60 விகாடிகாக்கள் =.. 1 காட்டிகா 

 2 1/2 நாழிகை  =  1 மணி நேரம் = 1 நாழிகை -24  நிமிடம் என்றும் கணக்கிட்டனர்.   

இந்த ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒவ்வொரு கிரகம் தன ஆட்சியை செலுத்துவதையும் கணக்கிட்டு பகலும் இரவும் கொண்ட ஒரு நாளை இந்த மணித்துளிகள் கொண்டஇந்த ஹோரை  என்ற ஒவ்வொரு மணி நேரமாக  கணக்கிடப்பட்டு, ஈர்ப்பு சக்தியின் நாயகனான சூரியனின் பெயரிலேயே முதல் நாள் காயிற்று கிழமை ஆ னது.  

முன்னர் தான்பூமியை சுற்றி தான் அனைத்து கிரகங்களும் வலம் வருகின்றன என்று நினைத்தோம்..ஆனால் சூரியனை மையமாக வைத்து,    தான் அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன என்று பின்னர்     விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்..

ஆனாலும் ஜோதிடத்தில்சூரியன் தான் சுற்றி வருவதாக உள்ளது என்பதால் அதன் கணக்கு சரியில்லை என்பார்கள்ஆனால் உண்மை நிலையென்னவேகமாக ஓடும் வண்டியின்  உள்ளே உட்கார்ந்திருக்கும் நபருக்கு வெளியே காணும் காட்சிகள் எப்படியிருக்கும்?   தான் அமர்ந்திருக்கும்வண்டி தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று   அவருக்கு தெரியும்..ஆனால் அவர் காண்பது என்னவோவெளியில்   தெரியும் மரங்களும் கட்டிடங்களும்அனைத்துமே நகர்கிறது  போல..  அந்த அடிப்படையில் தான் இதையும் பார்க்கவேண்டும்..சூரியன் சுற்றுவதாக காட்டும் இடத்தில் பூமியை வைத்து பார்க்க வேண்டும் 


சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான உட்சுற்றுக் கிரகங்களான சந்திரன், புதன், சுக்கிரன் ஒருபுறமும். வெளிச் சுற்றுக் கிரகங்களான செவ்வாய், குரு, சனி ஒருபுறமும் அமைந்திருக்கும்  இருப்பை கவனியுங்கள்..  


பூமியை/சூரியநினை   சுற்றி வரும் கோள்களின் நேரத்தை கணக்கிட்டால்

சந்திரன் ...27 நாட்கள்

 புதன்= 88 நாட்கள்

சுக்கிரன் =225  நாட்கள்

பூமி =3\65 நாட்கள் 

செவ்வாய் 11/2 வருடங்கள்

வியாழன் 13 வருடங்கள்

சனி 30 வருடங்கள்.

இதை கொண்டு வரிசையாக ஒரு நாளின் நேரத்தை சுக்கிர ஹோரை, புதன் ஹோரை, சந்திரன், சனி, குரு, செவ்வாய் என வரிசைப்படுத்தினால், மறுநாள் ஆதவன் உதிக்கும் போது சந்திர ஹோரை உதயமாவதைக் கண்டு அன்று திங்கட்கிழமை ஆனது. அதே போல கணக்கிட்டு வரும்போது காலை சூரிய உஷயதின்போது வரும் ஹோரை நண்பகல் ஒரு மணிக்கும் பின்னர் இரவு எட்டு மணிக்கும் நள்ளிரவு 3  மணிக்கும் வருவதை கண்டனர். 


அதேபோல திங்கட்கிழமை அன்று சூரியன் உதிக்கும்போது, சந்திர ஹோரை துவங்கியதால், இரண்டாம் நாள் திங்கட் கிழமையாகி,  சனி, குரு, செவ்வாய் ஹோரைகள் தொடர, மறு நாள் சூ ரிய உதயத்தின் போது செவ்வாய் ஹோரை ஆரம்பித்ததால் அது செவ்வாய்கிழமை ஆனது. இப்படியே புதன் வியாழன், வெள்ளி, சனிக்கிழமை என்று நம் வாரம அமைந்தது.

அதுபோலவே சனிக்கிழமையில் ஹோரை வரிசை துவங்கி மறு நாள் ஞாயிற்றுகிழமை சூரிய உதயத்தின்போது சூரிய ஹோரை என்று, ஒரு வளையம் போன்று ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து, காலம் என்றாகி, நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்ர அதிசயத்தை பார்த்தீர்களா?


அதே போல இந்த கிழமைகளின் வரிசையைப் பாருங்களேன்...., 

ஒன்று நமது பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் உள்ள  உட்சுற்றுக் கிரகத்தின் கிழமையாகவும் அடுத்தது  நமக்கும் சனிக்கும் நடுவிலான  வெளிசுற்றுக் கிரகத்தின் கிழமையாகயும் வரும். அதாவது, ஞாயிறை அடுத்த திங்களின் நாயகன் சந்திரன் நமக்கும் சூரியனுக்கும் நடுவே உள்ள உட்சுற்று கிரகம். அடுத்த செவ்வாய் நமக்கு அடுத்தபுறம் உள்ளது. புதன் நமக்கு உட்புறம் இருக்கும். குரு, செவ்வாய்க்கு அடுத்த வெளிப்புறக் கோள். அடுத்த சுக்கிரன் சூரியன் அருகில் உள்ள உள்சுற்று கிரகம். சனி வெகு தொலைவில் உள்ள வெளிச்சுற்று கிரகம்.

என்ன ஒரு கணிப்பு!!

இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசியிலும் கிரகங்கள் தங்கியிருக்கும் காலத்தையும் கணக்கிட்டனர் 

 சூரியன்  ..ஒரு மாதம்

 சந்திரன். ..2 ¼  நாட்கள் 

 செவ்வாய் …1 ½ மாதங்கள் 

 புதன்…. 1 மாதம் 

 குரு….1 வருடம் 

 சானி. …2 ½ ஆண்டுகள் 

 ராகு கேது …1 ஆண்டுகள் 


  

2.  நாம் இயற்கையை வழிபாடு செய்தவர்கள்..பஞ்சபூதங்களையும் கடவுளாக  நாம்.  சூரியன்வருணன் என்று விழா எடுத்துக் வழிப்பட்டவர்கள் நாம்.. 

நமக்கு சூரியன் தான் பிரதானம்..அவனின் இரண்டு விதமான பயணங்கள், வடக்கு மற்றும் தெற்கு நோக்கியது  

அயனங்கள்  எனப்பட்டன. 


 உத்தராயணம் மற்றும் தட்சிணாயணம்..ஒவ்வொன்றும்  ஆறு மாதங்கள் காலம். 

 சூரியன் மகர ராசியில் நுழையும்போதுஉத்தராயணம் தொடங்குகிறது . அவர் கடகத்தில் நுழையம்போதுஉத்திராயனம் முடிந்து   தக்ஷாயணம் தொடங்கும் ,மீண்டும் அவர் மகரத்தில் நுழையும் போதுதட்சிணாயணம் முடிந்து   உத்தராயணம் தொடங்குகிறது. 

 

அதே போல காலங்களையும் ஆறாக பிரித்து, 12 மாதங்களையும் பருவ நிலைக்கேற்ப பிரித்துஅதை 12 ராசிகளில் அடக்கினர் நம் முன்னோர் .. 

 1. வசந்த ரூத்து …மேஷம்  மற்றும் ரிஷபம் – ஏப்ரல், மே ஜூன் 

 2. கிருஷ்ம ரூத்து – மிதுனம்,  கடகம் – ஜூன் , ஜூலை மற்றும் ஆகஸ்ட். 

 3. வருஷ ரூத்து – சிம்மம்கன்னி -  ஆகஸ்ட்,செப்டம்பர் அக்டோபர். 

 4.  ஷரதா ரூத்து – துலாம், விருச்சிகம் _ ஆக்டோபர்நவம்பர், டிசம்பர். 

 5. ஹேமந்தா ரூத்து …தனுசுமகரம் -டிசம்பர் , ஜனவரிபிப்ரவரி 

 6. சசி-ரூத்து – கும்பம்,  மீனம் - பிப்ரவரி,மார்ச்  ஏப்ரல். 

 

இந்த 12 ராசிகளுக்கும் உரிய தமிழ் மாதங்கள் மற்றும் ஆங்கில மாதங்கள் 

          `                     

சித்திரை

ஏப்ரல்-மே

 

மேஷம் 

வைகாசி

             மே-ஜூன்  

ரிஷபம்

ஆனி

 

ஜூன் ஜூலை 

மிதுனம்

ஆடி

 

ஜூலை ஆகஸ்ட் 

கடகம்

ஆவணி

ஆகஸ்ட் செப்டம்பர் 

சிம்மம்

புரட்டாசி

செப்டம்பர்அக்டோபர் 

கன்னி

ஐப்பசி

அக்டோபர் நவம்பர் 

துலாம்

கார்த்திகை

 

நவம்பர்-டிசம்பர் 

விருச்சிகம் 

 

 

 மார்கழி 

 

டிசம்பர் - ஜனவரி 

தனுசு

தை

 

 ஜனவரி பிப்ரவரி 

 

மகரம் 

 

 மாசி 

 பிப்ரவரி-மார்ச் 

 

 

 

கும்பம்

பங்குனி

மார்ச்-ஏப்ரல்  

 மீனம் 

 

    

 

அந்த மாதங்களையும்  வாரங்களாக

1.        பானு வாரம்

2.       ஸோம வாரம்

3.       மங்கல வாரம்

4.       சௌமிய வாரம்

5.       குரு வாரம்

6.       சுக்கிர வாரம்

7.       சனி வாரம்

இந்த ராசி வெளி 360°  சுற்றளவு கொண்டது 12 ராசிக்குமாக ஒவ்வொன்றும் 30° கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது.. 

1.     மேஷம்  Aries 

 2.  ரிஷபம். Taurus 

 3. மிதுனம்..Jemini! 

 4. கடகம்…Cancer 

  5. சிம்மம்..Leo 

 6. கன்னி…Virgo 

 7.  துலாம்..Libra 

 8. விருச்சிகம்…Scorpio 

 9. தனுசு…Saggitarius 

 10.மகரம்… Capricorn 

 11. கும்பம்…Aquarius 

 12.  மீனம்…Pisces 

  

ராசியை 12 ஆகப் பிரிக்கும் வரைபடம்அவை இருக்கும் கா அளவோடு..(இது தோராயமானதுஒவ்வொரு அட்சரேகை பொறுத்து மாறக்கூடியது) 

. 

   12 

மீனம் 

330°_360° 

4.15 கடிகை 

          I 

மேஷம் 0°_30° 

4.15 கடிகை 

      2 

 ரிஷபம் 

30°_60° 

4.45 கடிகை 

   3 

மிதுனம் 

  60°_90° 

5.15 கடிகை 

      11 

கும்பம் 

  300°_330° 

4.45 கடிகை 

 

      4 

கடகம் 

  90°_120° 

5.30 கடிகை 

      10 

மகரம் 

270°_300° 

5.15 கடிகை 

 

     5 

சிம்மம் 

  120°_150° 

5.15 கடிகை 

          9 

தனுசு 

  240°_270° 

5.30 கடிகை 

      8 

விருச்சிகம் 

  210°_240° 

5.15 கடிகை 

       7 

துலாம் 

  180°_210° 

5.00 கடிகை 

   6 

  கன்னி 

 150°_180° 

5.00 கடிகை 

 

 அதைப்போல சந்திரனின் வயதைப் பொறுத்து 15 வகையாக திதிகள் உண்டு. 

திதிகள் 

பிரதமை  

துவதியை   

திரிதியை  

பஞ்சமி  

சஷ்டி  

சப்தமி  

அஷ்டமி  

நவமி  

தசமி  

ஏகாதசி 

 துவாதசி  

திரயோதசி  

சதுர்த்தசி  

அமாவாசை  

பவுர்ணமி 

 

அறுபது ஆண்டுகளின் சுழற்சி 

பிரபவ 

விபவ 

சுக்ல 

ப்ரமோத 

பிரஜாபதி 

அங்கிராச 

ஸ்ரீமுகா 

பாவ  

யுவா 

தத்ரூ 

ஈஸ்வர 

 பாஹு- 

தன்யா 

  பிரமதி 

  விக்ரம 

  விருஷா 

 சித்ரபானு  

 சுபானு 

 தரனா 

 பார்த்திவா 

 வியாயா 

சர்வஜித் 

சர்வதாரி  

விரோதி 

விக்ருதி 

காரா 

நந்தனா 

விஜயா 

ஜெயா 

மன்மதா 

துர்முகா 

ஹெவிலம்பி 

 விளாம்பி 

 விகாரி 

 சர்வரி 

 பிளேயா 

 சுபகிருத் 

 சோபகிருத் 

 க்ரோலி 

 விஸ்வ வாசு 

 பரபவ 

 பிளாவங்கா 

 கீலகா 

சவுமியா 

 சாதரனா 

 விரோடோட்கிருத் 

 பரிதவி 

 பிரமாடி 

 ஆனந்தா 

 ராட்சசன் 

 அனலா 

 பிங்கலா 

 கலாயுக்தி 

 சித்தார்தி 

 ரவ்தரி 

 துர்மதி 

 டண்டுப்பி 

 ருதிரோட்கரி 

 ரக்தக்ஷ 

 க்ரோதானா 

 அக்க்ஷயா. 

 

அதே போல.  தாமச குணம் கொண்டவை  அஸ்வினி, மகம் முலம் , ஆருத்ரா(திருவாதிரை சுவாதி, சதாபிஷா (சதயம்)     மிருகசீரிடம்சித்தாதனிஷ்டா  பூசம்அனுராதா,    உத்திரட்டாதி  நட்சத்திரங்களும், 

  ராஜசிக் குணம் கொண்ட   கிருத்திகை உத்தரம் உத்தராடம்,  ரோகிணி, ஹஸ்தம்திருவோணம்,பரணி, பூரம்புணர்பூசம் 

சாத்வீக குணம் கொண்ட  புனர்வாசு, விசாகம்பூரட்டாதி,, ஆயில்யம்கேட்டைரேவதி  என்ற இந்த 27  நட்சத்திரங்களும்  4 பாதங்களாக பிரிக்கப்பட்டு, 108ம் 12 இராசிகளுக்குள் அடக்கப்பட்டன. . 

இத்தோடு மனிதனின் ஆயுட் காலத்தை 120 வருடங்களாக கணககிட்ட பராசர மகரிஷி, அந்த காலத்தில் இந்த ஒன்பது கிரகங்களும் ஆட்சி செய்யும் காலத்தை தசா காலமாக பிரித்து, அவற்றிற்குள்  இந்த கிரகங்களின் ஆட்சியை புத்திகளாக பிரித்து அதிலும் இன்னுமும் ஒன்பதாக பிரித்து.......இப்படியே நாள் ,நாழிகை வரையும் கணக்கிட்டுள்ளார்.

இந்த தசாகாலங்களை எப்படி கணக்கிட்டார், மனிதனின் ஆயட் காலம்  120 வருடங்களாக எப்படி கணக்கிட்டார்  என்பது இதுவரை அறியப்படவில்லை. 

பிரம்மத்தோடு ஐக்கியமாகும் மகாரிஷிகளுக்கு  மட்டுமே தெரிந்த தேவரகசியம் இது !!