செவ்வாய், 28 டிசம்பர், 2021

கோடியில் ஒருவர் தானா கோடீஸ்வரி…..2


இந்த பகுதியை ஆரம்பிக்கலாமா என்று கருத்து கேட்டதற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்து மடல் அனுப்பியிருந்தனர். அதிலும் நிறைய பேர் பெண்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி!!

பெரும் தன்வந்தர்களின் பட்டியலை பார்க்கும்போது, அதில் அத்தி பூத்தார் போல தான் ஓரிரண்டு பெண்களின் பெயர்கள் இருக்கும்….அது ஒரு சதவீதம் கூட இல்லை என்பது வருந்தத்தக்க செய்தி…இத்தனைக்கும் பெண் தான் அந்த குடும்பத்தின் மதி மந்திரி….நிதி மந்திரியும் கூட என்னும் நிலையில் …

இதற்கு முதல் காரணம் பெண்கள் தங்களை பொருளார ரீதியாக உயர்த்திக் கொள்ள முன்வராததும் கூட. .. வேலைக்கு போகும் பெண்ணோ, இல்லத்தரசியோ ….(வேலைக்கு போனால் அவள் இல்லத்திற்கு அரசி இல்லையா என்ன??!!) தன குடும்பத்திற்கு வேண்டியதை செய்வதில் தான் அவள் கவனம் இருக்கும்… என் குடும்பம் தான் எனக்கு சொத்து இதில் தனியே ஒரு சொத்து எதற்கு என்ற நிலைபாடை கொண்ட பெண்களே பெரும்பான்மை. இங்கே விதிவிலக்குகளை விட்டுவிடுவோம்……

நான் பொருளாதார ரீதியான பாதுகாப்பு என்று சொன்னதும் நிறைய பேர் பணம், நகை சேமிப்பை மட்டுமே நினைப்பார்கள்.. ஆனால் செல்வம் என்றும் குறிப்பிடும் போது முதலிடத்தை பிடிப்பது உடல் நலமே….

"Health is the Wealth " என்று சும்மாவா சொன்னார்கள்? அந்த வகையில் உடல் நலத்தை பெரிதும் கவனித்து சீர் படுத்திகொண்டு, அதனால் அந்த குடும்பத்திற்கு எந்த பொருளாதார நெருக்கடியும் கொடுக்காமல் இருப்பவரும் கோடீஸ்வரி தான்!!.

இந்த வகையில் கோடீஸ்வரர் ஆகும் தகுதியை பெறுவதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து கொள்வது தான். "வரு முன் காத்தல்" என்பது இது தான்…

இந்த கோவிட் மற்றும் ஒமிக்ரான் பயமுறுத்தல்களும், நீண்டுக கொண்டே போகும் மருத்துவ செலவுகளும், நம்மை ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மீதான கவனம் திரும்ப ஆரம்பித்துள்ளது சிறப்பு. ஆனாலும், இன்னமும் தங்கள் ஆயுளுக்கு பாலிசி எடுப்பது குறித்து நிறைய மனமாற்றம வர வேண்டியுள்ளது…

ஆயுள் காப்பீடு என்றாலே 'Money Back" பாலிசியை தான் நிறைய பேர் தரவு செய்கிறார்கள்…ஆனால் ஆயுள் காப்பிட்டிற்கு சிறந்தது எண்டோவ்மென்ட் மற்றும் டெர்ம் பாலிசிகளே…ஒவ்வொரு வருடமும் நம் வயதிற்கேற்ற ப்ரீமியம் செலுத்தி வர, முழு ஆயுளும் என்று சொல்ல முடியாது…தற்போது எண்பது வயது வரை காப்பீடு கிடைக்குமாறு வயதை கூட்டியுள்ளார்கள். எவ்வளவு சிறிய வயதில் செருகிரோமோ அந்த அளவிற்கு ப்ரீமியம் குறைவாக இருக்கும். ஆனால் பாலிசி காலத்திற்கு பின்னர் ஒருவர் இறந்தால் எந்த முதிர்வு தொகையும் கிடையாது.

"அது எப்படி….பணம் கட்டி , அத்தனை வருடங்கள் கழித்து ஒரு முதிர்வு தொகையும் கிடைக்காது என்றால் அது எப்படி சரியாகும்?' என்று சிலர் எதிர்க் கேள்வி கேட்பார்கள்..

என்னைப் பொறுத்த வரையில் ஆயுள் காப்பீடு செய்வதையும் , முதிர்வு தொகை பெறுவதையோ அல்லது இன்வெஸ்மென்டையும் சேர்த்து குழப்பிக கொள்ள கூடாது என்பேன். ஆயுள் காப்பீடு செய்ய வேண்டும் என்றால் அது குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது சிறந்தது…

நாம் மோட்டார் வாகனத்திற்கு ஒவ்வொரு வருடமும் காப்பீடு செய்கிறோமே,, எதிர்பாராத விபத்து நடந்தால், அதற்குரிய இழப்பீடு கிடைக்க தானே?? அந்த வருடம் விபத்து ஏதும் நடக்கவில்லையெனில் நிம்மதி பெருமூச்சு விடுவோமே தவிர, கட்டிய ப்ரீமியம் வீணாகி போனதே என்று கவலைப் படுவோமா? கட்டிய பாலிசி ப்ரீமியத்திற்காக, விபத்து நடக்க வேண்டும், என்று ஆசைப்படுவோமா? அது போலத் தான் இது?

பாலிசி காலம் வரையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், ன்லையற்று தவிக்கும் அந்த குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பு நிதி ரூபத்தில்….அது எவ்வளவு பெரிய தேவையாக அப்போது இருக்கும் என்று வார்த்தையால் சொல்ல முடியாது….என்ன தான் பிரியத்திற்குரியவர் என்றாலும், அவர் இழப்பு தாங்க முடியாது, அதை பணத்தால் நிரப்ப முடியாது என்றாலும், வண்டி ஓட வேண்டுமே?

அதுவும் நம் ஆயுள் எப்போது முடியும் என்பது பரம்பொருளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் . ஜோதிட ரத்னா எனப்பட்ட பார்த்தசாரதி அவர்கள் கூட, தன ஆயுள் குறித்து தான் கணித்தது தவறாகிவிடக்கூடாது என்பதற்காக தற்கொலை செய்துக் கொள்ளவில்லையா?

ஜாதகத்தில் ஆயுளை குறிக்கும் எட்டாம் பாவமும், அதன் அதிபதியும், ஆயுள் காரகன் எனப்படும் சனியும் எந்த அளவிற்கு சுபத்துவமாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அற்ப ஆயுளா, மத்திய ஆயுளா அல்லது தீர்க்க ஆயுளா என்று சொல்ல முடியும்….

மனிதனின் ஆயுத காலம் 120 வருடங்கள் என்று சொல்லியுள்ளதற்கேற்ப ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ற பிரீமியமும் இருக்கும் என்பது உண்மை தான்.

ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் கவனிக்க தவறுவது அதற்கு எதிரில் உள்ள இந்த பாலிசியை தான். ..இந்த டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் குறித்த் நான் ஆராயும் போது தான் கண்ணில் பட்டது இது…

எல் ஐ. சி.யின் டெக் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி .

(.இது ப்ரோமொஷனால் பதிவு கிடையாது. இருப்பதிலேயே சிறந்த பாலிசி என்பதால் இதை நம் சகோதரிகளுக்கு தெரிவிக்க எண்ணி இந்த பதிவு)

இதில் உள்ள சிறப்புகள்

  1. மற்ற டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் எல்.ஐ.சி கொடுத்தாலும், இது மட்டுமே ஆண் லைனில் பெறக் கூடியது…இதனால் கிடைக்கும் வசதி…ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் நமக்கு திருப்பி விடப்படுகிறது…
  2. ஆனாலும் இதன் குறைந்த பட்ச பாலிசி தொகை ஐம்பது லட்சம் ரூபாய் . அதற்க்கு குறைவாக தான் பாலிசி வேண்டும் என்றால் எல் ஐ. சி ஏஜெண்டிடமே போய் பாலிசி எடுக்கலாம். ஜீவன் அமாக் உள்ளதே….ஆனால் ஒரு நிமிடம்…நீங்கள் எடுக்க போகும் 25 இலட்ச ரூபாய் பாலிசி( அது தான் குறைந்த பட்ச பாலிசி அதில்) தொகையுடன் சற்று 20% …30% மட்டுமே இதில் ப்ரீமியம் கூடுதலாக இருக்கும். ஆனால் பாலிசி தொகை அப்படியே டபுள் மடங்கு..
  3. பெண்களுக்கு சிறப்பு சலுகை உண்டு.( அவர்களுக்கு தான் பெரும்பாலும் ஆயுளை குறைக்க கூடிய கெட்ட பழக்கம் இருக்காதே!!)
  4. எந்த வித லாப நோக்கும் இல்லாமல் ஆயுள் காப்பீடு மட்டுமே கருத்தில் கொண்ட பாலிசி…உதாரணத்திற்கு ஐம்பது வயது உள்ள ஒருவர் காப்பீடு செய்தால் அவர் கட்ட வேண்டியது வருடத்திற்கு சுமார் 20,000/- ரூபாய்க்குள் மட்டுமே…ஒட்டு மொத்தமாக நாம் கட்டும் பணத்தோடு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நம் குடும்பத்திற்கு கிடைக்கும் பணத்தை…கிட்டவே நெருங்க முடியாது…கிட்டத்தட்ட பத்து மடங்கு!!
  5. ஆனால் இந்த பாலிசிக்கு நாம் வலைத்தளத்தில் தான் வினப்பிக்க வேண்டும். இந்த லிங்க்கில் போய் மேலும் விவரங்களை பெறலாம்….

https://digisales.licindia.in/eSales/liconline/setprop

இந்த பாலிசியை எடுத்து வைத்து கொண்டால்…நீங்களும் கோடீஸ்வரி தான்……!!

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்…இறந்தாலும் ஆயிரம் பொன்" என்ற பழமொழியை நமக்கே உதாரணமாக்கி கொள்ளலாம்….அதற்காக நம் உருவத்தையும் அது போலவே ஆக்கிக் கொள்ளகூடாது!!

ஆனால் இதில் ஒரு அசௌகரியமும் உண்டு தான் ………………அதை நான் சொல் மாட்டேன்..!!

"நீ கூட இருந்தாலே நான் கோடீஸ்வரி/கோடீஸ்வரன் தான் ." என்று சொல்லும் குடும்பம் இருக்கும் போது …….எல்லாம் சுகமே…..

இருந்தாலும்….சட்டு புட்டென்று பாலிசை எடுத்து விடுங்க…வரும் புத்தாண்டு காலாண்டு வாக்கில் இன்சூரன்ஸ் ப்ரீமியம் அதிகரிக்க இருக்கிறது……….

மீண்டும் இன்னொரு பதிவில் வேறொரு தகவலுடன் சந்திப்போம்.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான காரணத்தை ஜாதக ரீதியாக விளக்க முடியுமா?

 என் பள்ளிக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த நபராக இருந்தவர பிரதமர் இராஜீவ காந்தி. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியிருந்த நேரத்தில், அதை எதிர்த்து, அவருக்கு நான் எழுதிய கடிதத்திற்கு, அவர் பதில் கொடுத்திருந்தார்.பக்கத்து வீட்டில் தீ பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? என்று கேள்வியெழுப்பி, அதை நியாயப்படுத்தியிருந்தார்.என் பள்ளியில், அந்த கடிதம் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது!!

அவருக்கு நேர்ந்த துர் மரணம் சொல்லமுடியா வேதனையை கொடுத்தது. உலகமெல்லாம் சுற்றியவர் முடிவு, தமிழ்நாட்டில், அதுவும் சென்னைக்கு அருகில் வேறு..

அந்த கோர படுகொலையில் சிக்குண்ட போலிஸாரின் புகைப்படங்கள் காஞ்சீபுரம் காவல் துறை தலைவர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதை பார்த்துள்ளேன்.

இப்படி ஒரு வெடி விபத்தில் உடல் சிதறி கோரமாக மரணம் நேரும் என்பதை அவர் ஜாதகம் தான் காட்டியுள்ளதே..

சிம்ம லக்கினம், சிம்ம இராசியும் கூட.

லக்கினத்தில் சுக்கிரன், குரு, சந்திரன் என்று லக்கினம் அதிக சுபத்துவமாக உள்ளது. அதனாலேயே அரசனுக்கொப்பான வாழ்க்கையைத் தான், அவர் பிறந்ததிலிருந்து வாழ்ந்துள்ளார்.

லக்கினத்தில் உள்ள குருவை சூரியன் அஸ்தங்கம் செய்து, அதன் சுப பலனை அவரே எடுத்துக் கொள்கிறார் என்பதால ஜாதகப்படி அதிக சுபத்துவம் பெற்ற கிரகம் சூரியனே..சூரியன் அதி வலுத்து இருக்கும் ஜாதகர் தலைமை தாங்கும் பதவியை பெறுவார் என்ற வேத ஜோதிட அடிப்படை விதியை யொட்டி, இராஜீவ் காந்தி, யாரும்… ஏன் அவரே எதிர்பார்க்காத தருணத்தில், மக்களின் தலைவராக, பாரத பிரதமராக பதவி ஏற்றார்.

எல்லோர் வாழ்விலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் இராகு தசை தான் அப்போது அவருக்கு நடந்துக் கொண்டிருந்தது. இராகு அவர் ஜாதகத்தில் 12.ம் பாவத்தில் மறைந்துள்ளார். பாவ கிரகங்கள் 3, 6,8,12ல் மறைவது நல்லது என்றாலும், 3, 11ம் பாவத்தில் மறையும் கிரகங்கள் அந்த லக்கினத்தோடு நட்பு நிலையில் இருக்கும் பாவத்தில் இருக்கும் என்பதால் நல்லதையே செய்யும்.. இராகுவுக்கு பிடித்த பாவமான கடகத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த 12ல் இருக்கும் இராகு அவரை உச்சத்தில் தூக்கி வைத்ததோடு அல்லாமல் அவர் மரணத்திற்கும் காரணமாக ஆனார். .உத்தர காலாம்ருதத்தில் மகாகவி காளிதாசர் 12-மிட ராகு ராஜயோகத்தைத் தந்து மாரகத்தையும் தருவார் என்று ஒரு சுலோகத்தில் சொல்லியிருக்கிறார்.

சிம்ம லக்கினத்தின் மாரகாதிபதி 2குடைய புதன். அதன்படியே 1991ல் அவர் இறக்கும் போது அவருக்கு இராகு தசை, புதன் புத்தி நடந்துக்கொண்டிருந்தது.

"இராகுவை போல கொடுப்பாரும் இல்லை.கெடுப்பாரும் இல்லை" என்பது தெரிகிறதா?

சுபத்துவமில்லாத பாபத்துவமான சனியின் மூன்றாம் பார்வை லக்கினத்தின் மீதும் லக்கினாதிபதி மீதும் உள்ளது. சனி ஆயுள்காரகன் அல்லவா? அதனாலேயே அவரின் பாபத்துவமான பார்வையால் இராஜிவின் ஆயுள் கெட்டு, இளம் வயதான 41 வயதிலேயே அவர் மரணமடைய வேண்டியிருந்தது.

ஒருவரின் மரணம் எப்படி நடக்கும் என்று காட்டுவது எட்டாம் பாவம்.இங்கு பாவத்துமான செவவாய் அதை பார்க்கிறார்.செவ்வாயின் தொடர்பு கொண்டதாலேயே அதன் மோசமான காரகத்துவமான வெடி விபத்தால் உடல் சிதறி, இராஜீவ் கொல்லப்பட்டார்.

மனம் அதிக வலியால் கனமாக இருப்பது போல உணரும்போது அழுகை வராது.முழு அமைதி தான் நிலவும்.

அப்படித்தான் நானும் அந்த செய்தி கேட்டபோது உணர்ந்தேன்..



அசைவ உணவுகள் மூர்க்க குணத்தின் அடிப்படையா?

 என. செல்லக்குட்டி பையன் படு சமர்த்து. கலப்பினம் என்றாலும் தன் டாஷண்ட் அப்பாவின் மூர்க்கத்தனம் அதிகம் இருக்கும்

அவன் குட்டியாக இருந்ததிலிருந்து சைவ சாப்பாடு தான்..தயிர் சாதம் என்றால் ரொம்ப இஷ்டம்..அவனுக்கு இரண்டு வயதான போது, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள், அசைவம் கொடுக்காமல், அவன் இயற்கை உணவுப் பழக்கத்தை கெடுக்கிறேன் என்றார்கள்.அதனால் இரண்டு விதமாகவும் உணவு கொடுக்கப்பட்டது.

இதில் தெரிந்த வித்யாசம் என்னவென்றால், சைவ உணவு உண்டால் அமைதியாக இருக்கும் அவன், அதுவே அசைவம் என்றால் படுமூர்க்கமாகிவிடுவான்.கிட்டவே நெருங்க முடியாத அளவிற்கு அவன் உறுமல் இருக்கும்.

அசைவ உணவு உள்ளே இருக்கும் மிருக உணர்வை தூண்டுகிறது என்பது தான் உண்மை.

இது விலங்கிற்கு தானே பொருந்தும்.மனிதனுக்கில்லையே? என்கிறீர்களா?

மனிதனே ஒரு சமூக விலங்கு தானே?!! மிருகத் தன்மையும் , மனிதத்தன்மையும் கலந்த கலவை தானே நாம்? இதில் எது அதிகமாக வெளிப்படுகிறதோ, அதை கொண்டு அவன் குணம் தெரியும்.

அந்த குணத்தை மாற்றுவதில், அவன் உண்ணும் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு.இதை மறுக்க முடியாது.

க்ஷத்திரிய அரசர்கள் சைவ உணவு உண்டு, போர்க்களம் புகுந்ததாய் வரலாறு உண்டா?

வீரத்திற்கு அசைவம் என்றால், விவேகத்திற்கு சைவம்!!

சைவ உணவு, உடலின் தினவை குறைத்து, மூளைத்திறனை கூட்டும்.

அப்படியானால் அசைவம் உண்பவர்கள் புத்தி மந்தம் என்று சொல்லமுடியுமா? எனக் கேட்கலாம்.

அசைவ உணவு உண்ட பின் ஏற்படும் கிறுகிறுப்பு சொல்லுமே பதிலை.அப்போது எதையும் யோசித்து செய்யக்கூடிய நிலையில் இருப்போமா?

அதனால் தான், சுகபோகத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் ஏழாம் பொருத்தம் என்றார்கள்!! சுக்கிரன் உச்சமானால் அங்கு புதன் நீச்சமடைவது அதனாலேயே!!

அதே சமயம், அசைவ உணவு, மூர்க்க குணத்தின் அடிப்படையாகாது..அதன் தூண்டுகோலாக இருக்கும்.

வெள்ளி, 26 நவம்பர், 2021

கோடியில் ஒருவர் தானா கோடீஸ்வரி??

 கோடியில் ஒருவர் தானா கோடீஸ்வரி??

நண்பர்களுக்கு வணக்கம்.

நான் கல்லூரியில் படிக்கும் போது அங்கே சாதரணமாக ஒரு ஜோக் சொல்லப்படுவதை கேட்டிருக்கிறேன். "ஒரு ஆண் கோடீஸ்வரன் ஆகவேண்டும் என்றால் கஷ்டப்பட்டு உழைக்கணும்.ஆனால் ஒரு பெண் கோடீஸ்வரி ஆகவேண்டும் என்றால்….?

ஒரு கோடீஸ்வரனை திருமணம் செய்துக்கொண்டால் போதும்"" என்று..

இந்த மனப்பான்மை இன்றைய நாள் வரையில் நிறைய பேருக்கு இருப்பதை பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் நான் பார்த்த தொலைகாட்சி நிகழ்வில் , பெண்கள் தங்களுக்குள் உள்ள ஷாப்பிங் செய்யும் ஆர்வத்தை பற்றி மிக ஆர்வமாக விளக்கிக் கொண்டிருன்தனர். ஒருவர் பல விதமான ஹேர் கிளிப்புகள் வைத்திருப்பதாக பெருமையடித் தபோது, இன்னொருவர் இன்னொரு வித பொருளை தான் வாங்கி குவித்துக் கொண்டிருபதை சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் …

தேவையேயில்லாமல் இவர்கள் வாங்கும் சுதந்திரத்தை இவர்கள் கணவர்கள் கொடுத்திருகிறார்கள் என்பது தெரிகிறது.!!

பழைய பாடல் ஒன்று கேட்டிருப்பீர்கள்…'சேர்த்த பணத்தை சிக்கனமா செலவு செய்து பக்குவமா அம்மா கையிலே கொடுத்து போடு சின்னககண்ணு. அவங்க ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு '

அதே போல மனைவி தான் மதிமந்திரி என்றதும் இதற்குத்தான்…

ஆனால் பெண்களின் சேமிப்பு பழக்கம் எல்லாம் என்னானது??

சில நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் வந்த ஒரு சர்வே முடிவை பற்றி நீங்கள் படித்திருக்கலாம்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS) ஐந்தாவது பதிப்பு, இந்தியாவில் மக்கள்தொகை மாற்றத்திற்கான அறிகுறிகளை உறுதிப்படுத்தியுள்ளது . 1992 இல் NFHS தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, பெண்களின் விகிதம் ஆண்களை விட அதிகமாக உள்ளது. அதாவது 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முன் கடந்த 2015-16ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,000 ஆண்களுக்கு 991 பெண்கள் இருந்தனர்.

இது வேறு விதத்தில் சில பிரச்சினைகளை கொண்டு வந்தாலும், பெண்கள் அதிக அளவில் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய தேவையை உருவாக்கி உள்ளது.

விழிப்புணர்வு என்றவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பற்றி தான் சொல்லவருகிறேன் என்று நினைப்பவர்கள் நிற்க. தலைப்பு அது இல்லையே….

பெண்களுக்கு இருக்கவேண்டிய பொருளாதார நிர்வாகம் …

நான் செய்த ஒரு தவறை சொல்கிறேன்.

என்னுடைய நெடுநாளைய ஆசையாக டூர் போகும்போது புகைப்படம் எடுக்கவென்று ஒரு காமிரா ஆசைஆசையாக வாங்கினேன். அது இருக்கும் ஒரு இந்து வருடம் முன்னாள்…யோஷிகா மாடல்.. அப்போது அதன் விலை இருபதாயிரம் சொச்சம்…. எனக்கு தெரிந்து அதை நாலைந்து முறை தான் உபயோகித்திருப்பேன்.. இப்போது வீட்டின் ஒரு பீரோவின் உள்ளே கிடக்கிறது. இப்போது யோசித்து பார்க்கும்போது, சராசரியாக ஒரு முறை உபயோகமாக போட்டோ எடுக்க கிட்டத்தட்ட ரூபாய் ஐந்தாயிரம் செலவளித்திருக்கிறேன் .. அதற்கு பதிலாக ஒரு காமிராவை நான் வாடகைக்கு எடுத்திருந்தால் கூட இவ்வளவு ஆகியிருக்காது அத்தோடு செலவாக டீவீக்கு பக்கத்தில் பல ஆயிரங்களை முழுங்கிவிட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறது விசிடி.

இப்போதெல்லாம் செலவழிப்பதில் ஒரு நிதானம் வந்திருக்கிறது. நீங்கள் சொல்லலாம்.. ஏதோ ஆசைக்கு கூட வாங்காமல், எதற்கு தான் சம்பாதிப்பது என்று?"

என் ஓரகத்தியும் இப்படி தான்…. கொரானா முதல் அலை வருவதற்கு முன்னால், உலகம் அழியப்போகிறது என்று ஒரு வதந்தி கிளம்பியதே நினைவிருக்கிறதா>>> "நாமே இருக்கப்போகறோமோ இல்லையோ இதில் மாடுகளை வைத்துககொண்டு என்ன செய்வது" என்று, அதை விற்றுவிட்டு "ஆசை தீர அனுபவிக்கப்போகிறேன்" என்று பட்டுப்புடவைகள் வாங்கினார். கொரானா வந்தது..பட்டுப்புடவைகளை பீரோவில் வைத்துவிட்டு ரசம் சாதம் சாபிட்டுக் கொண்டிருக்கிரார்கள்!!

இது போன்ற அளவுக்கு அதிகமான, தேவையேயில்லாத பொருட்களை வாங்க அவர்களை தூண்டுவது எது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அதில் சம்பந்தப்பட்ட பெரும்பான்மையோர் சொன்ன காரணம்…எப்போதெல்லாம் சோகமாக, மனது சரியில்லாமல் இருக்கிறதோ அப்போது ஷாப்பிங் செய்யக் கிளம்பி விடுவோம்" என்றது…

இப்படி ஷாப்பிங் செய்துவிட்டு வரும்போது தங்கள் மனது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக சொன்னார்கள்..…

அதாவது அவர்களுக்கு முதலில் ஏற்படுவது வருத்தம் அதை தொடர்ந்து செய்வது ஷாப்பிங்.. அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி….

மகிழ்ச்சியை அடைவதற்காக ஷாப்பிங் செய்கிறார்கள்.. வருத்தத்தை மாற்றி சந்தோஷமாக இருக்க நினைப்பது தான் அவர்கள் நோக்கம். அதை ஷாப்பிங் செய்து நிறைவேற்றுவதை விட சற்று மாற்றி வேறு சில செயல்களை செய்யலாம்.

எனக்கு மனது சரியில்லை என்றால், படிக்க ஆரம்பித்துவிடுவேன்…சரியாக இருந்தாலும் படிப்பது தான்…இல்லையென்றால் வெகு தூர பயணம் என் வண்டியில் போகப் பிடிக்கும்…

மனதை சந்தோஷ நிலைக்கு மாற்ற ஷாப்பிங் தவிர்த்த அவரவரர் பிடித்த விஷயத்தை செய்துப் பார்க்கலாம். இது போல செய்வதால் தேவையில்லாமல் வாங்கிக குவிக்கும் பழக்கம் மாற ஆரம்பிக்கும்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால்.

இது போன்ற தேவையில்லாத ஹோட்டல் செலவுகள், ஷாப்பிங் செலவுகளை குறைத்து அந்த பணத்தை, கடுகு டப்பாவில் போட்டு வைக்க வேண்டாம்…… சரியான விதத்தில் முதலீடு செய்தாலே தேவையான சமயத்தில் அது கைகொடுக்கும்.

அதுவும் இந்த கொரானா காலத்தில், ஒவ்வொருவரின் பொருளாதார பங்களிப்பும் ஒரு குடும்பத்துக்கு தேவை. என்னை பொறுத்தவரை பெண்களும் ஏதாவது வேலைக்கோ அல்லது ஒரு தொழிலை தொடங்கியோ நடத்துவது முக்கியம் என்பேன். வீட்டிலிருந்தே செய்யக்கூடிய ஏராளமான தொழில்கள் இப்போது உள்ளது.

அப்படி செய்யும்போது, தேவையில்லாமல் செலவழிக்கும் பழக்கம் வருமா என்ன? ஏனென்றால் ஒவ்வொரு காசும் நம்முடைய கடின உழைப்பில் கிடைத்ததாயிற்றே!! இன்னொன்று அதற்கெல்லாம் எது நேரம்?!!

இப்படி பார்த்து பார்த்து சேமிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதில் ் தான் சூட்சமமே இருக்கிறது….

பின்னே…கோடீஸ்வரியாவது என்பது சாதரணமானதா?

அதை தெரிந்துககொள்ளும் ஆர்வம் யாருக்கெல்லாம் i இருக்கிறதோ அவர்களுக்கு வருமான வரியை குறைக்கும் விதத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட் டுவது பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்…

சனி, 20 நவம்பர், 2021

ஜோதிடத்தின் ஜோதி 30 இறுதி பகுதி... கணவனும் மனைவியும் எப்போதும் ஏன் எதிர்த்தன்மையுடன் இருக்கின்றனர்?

 Men are from Mars, Women are from Venus".

"ஆண்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள்.பெண்கள் சுக்கிர கிரகத்தில் இருந்து வந்தவர்கள்" என்றொரு கூற்று உண்டு..

செவ்வாய் கிரகத்தின் காரகத்துவம் என்று ஆண்களின் முக்கிய குணங்களான வேகம், வீரம் போன்றவற்றை சொல்லும் போது, சுக்கிரன், பெண்கள் அழகுணர்ச்சி, கலைகளில் காட்டும் ஈடுபாட்டை காரகத்துவமாக கொண்டது.

இத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் செவ்வாய் குரு அணியிலும் அதன் எதிர் அணியின் தலைவராக சுக்கிரன் இருந்தாலும் இரண்டும் பகைத்தன்மை கொண்டவை அல்ல. இரண்டும் சம தன்மையானது..அது தான் ஆண் பெண் உறவுக்கும் சொல்லப்படுகிறது!!

.ஆனாலும் ஒரே தாயின் வயிற்றில் பிரந்தவர் எண்றாலும் ஒரு பெண்ணின் மனதை ஆணால் உணர முடியாதது ஏன்?

மூளையின் வலது புறம் தான் கலைகளுக்கு தேவையான கற்பனை வளத்தை கொடுக்கிறது. என்றால் அதன் இடது புறம், எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மையை கொடுக்கிறது.

ஆனாலும் பாருங்களேன்..அங்கேயே ஒரு மாறுபட்ட தன்மையை மூளையின் வலது பக்க செயல்பாட்டை இடது கை தான் செயல்படுத்துகிறது. வலது கையின் செயல்பாடு, இடது மூளையின் கட்டுப்பாட்டில்..இதுவே எதிர் தன்மை தானே?

ஒளியினால் உயிர் வாழும் இந்த பிரபஞ்சத்தின் நாயகனாக இருக்கும் சூரியனும் அதன் ஒளியை பெற்று பிரதிபலிக்கும் சந்திரன் அம்மையப்பன் எனப்படுகின்றனர்.

அதாவது இந்த உலகத்தின் தலைவனான சூரியனின் தலைவி சந்திரன்…அவர்களின் வழியாகவே, , கணவன் மனைவிக்கு இடையே உள்ள தாத்பர்யம் சொல்லப்படுகிறது.

சித்திரை மாதத்தில், .சூரியன் மேஷ ராசியில் உச்சமடையம் போது, அதன் அடுத்த ராசியான ரிஷபத்தில் தான்,அதாவது அடுத்து வரும் தமிழ் மாதமான வைகாசியில் தான், சூரியனின் ஒளியை பெற்று பிரதிபலிக்கும் சந்திரன் உச்சமடையும். அதாவது தனி ஒளியுடன் பிரகாசமாக இருக்கும்.

கணவனும் மனைவியும் ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி இருக்கவேண்டும் என்கிறது?!!

நிறைய வீடுகளில், இப்போதெல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பொது அறையை ஒட்டியே, அவர்களுக்கு தனித்தனியறையம் உள்ளது!!

ஆனால் புதிதாக திருமணமானவர்களும் திருமணம் செய்ய இருப்பவர்களும், தன் வாழ்க்கைத்துணையான மனைவி தன்னை சார்ந்தே இருக்கவேண்டும், தன்னிடம் மட்டுமே வெகு நெருக்கமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கும் ஒரு வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகிறார்கள்கள் அம்மையப்பர்.

அடூத்தடுத்த இராசியில் உச்சமான ஒளியை வெளிப்படுத்தும் சூரியனும் சந்திரனும்., ஒரே இராசியில் ஒன்று சேரும் போது இருளான “அமாவாசை”யாகிறது..

“நெருக்கம் அதிகமானால் புழுக்கம் அதிகமாகும்” என்று சொல்வதில்லையா? அது இதைத்தான்!!

ஆத்மகாரகன் என்னும் சூரியனிடம் ஆழ்மனோகாரகனான சந்திரன் சரணடையும் அந்த தருணத்தை, ஆண்மீகத்தில் சிறப்பாக சொல்லப்படுகிறது!!

.இல்லறம் சிறக்காதபோது மனம் ஆன்மீகத்தை தேடுகிரது இதனால் தான் போலும்!

அதனால் தான் தம்பதிகள் ஒன்றிணைவது என்றாலும், அவர்களுக்குள் சற்று இடைவெளியும் வேண்டும் என்கிறார்கள்.

சூரியன் உச்சமடையம் இராசிக்கு அடுத்துள்ள இராசியில் சந்திரன் உச்சமடைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அங்கு சூரியனின் கிருத்திகை நட்சத்திரக்கூட்டம் மட்டுமல்ல சந்திரனின் சொந்த நட்சத்திரக் கூட்டமான ரோஹிணியில் தான் நிற்கும் என்பதால்…

.எவ்வளவு பாசமான கணவனின் சொந்தங்கள் உடன் இருந்தாலும், பிறந்த வீட்டு உறவும் உடன் இருக்கும்போது பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேது!! மாதாகாரனாகிய சந்திரனும் இதை தான் உணர்த்துகிறது!!

உச்சத்தை போலவே சூரியன் துலாத்தில் நீச்சம் அடையும்போது, அடுத்த இராசியான விருச்சிகத்தில் சந்திரன் நீசம் அடைவதும் இதன் அடிப்படையிலேயே!!

அதே போல, ,சூரியனை விட்டு எவ்வளவு தூரம் சந்திரன் விலகி இருக்கிரதோ அந்தளவிற்கு அதன் ஒளி பிரதிபலிக்கும் தன்மையும் அதிகம் இருக்கிறது. சூரியனுக்கு நேர் எதிரில் அதாவது ஏழாம். பாவத்தில் சந்திரன் இருக்கும் போது ஒளி வீசும் முழு நிலவான “பவுர்ணமி”யாகிறது.

அதாவது சூரியனுக்கு எதிரில் இருப்பதால் அது “எதிரி”அல்ல .அதன் ஒளியை முழுதாக பெற்று பிரதிபலிக்கத் தான்...

இதை தான் தம்பதிகளாக இருப்பவர் உணர்ந்துக்கொள்ள வேண்டியது..ஏனெனில், ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் ஜாதகரை குறிக்கும் என்றால், அதற்கு நேர் எதிரே உள்ள ஏழாம் பாவம் அவர் வாழ்கைத் துணையை குறிக்கிறது.

என்ன சொன்னாலும் முழுதாக உள்வாங்கிக்கொள்ள கொள்வதில்லை என் மனைவி என்று ஆண்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

அந்த பவுர்ணமி சந்திரனே சூரியனுக்கு நேரெதிராக நின்று சூரியனின் ஒளியை உள் வாங்கினாலும் வெளிப்படுத்துவதென்னவோ சூரியனின் பாதி அளவை தானாம்!!..இதை நான் சொல்லவில்லை. மகா புருதர் காளிதாசர் தனது “உத்தர கலா மருதம்”என்னும் நூலில் கிரகங்களின் ஒளி அளவை பதிவு செய்துள்ளார்.அதில் சூரியனுடையது 30 என்றவர் சந்திரனுக்கு ஒளி அளவு 16 என்றதிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம்!!

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஜோதிடத்தில், ஒவ்வொரு லக்கினத்திற்கும் வாழ்க்கை துணையை குறிக்கும் ஏழாம் பாவம், லக்கினத்திற்கு பகையான கிரகத்தின் ஆட்சிக்கு உட்பட்டது! அதனால் தான் கணவன்/மனைவி எதிர் தன்மையுடன் இருப்பதும் நடக்கிறது.

இருந்தாலும், களத்திரகாரகனான சுக்கிரன் இருவரிடத்திலும் உள்ள ஈர்ப்புத் தன்மையை ஏற்படுத்தி, காமத்தீயை அணைக்காமல் இருவருக்கும் இடையே உள்ளே நெருக்கத்தை கூட்டி உறவை வளர்க்கிறார்..

இதைத் தான், கிரகங்களின் உறவுக்கு ஒளியம் அவற்றிற்கு இடையே உள்ள தூரம் மட்டுமல்லாமல் அவற்றிற்கு இடையே உள்ள ஈர்ப்புவிசை சுட்டிக்காட்டுகிறது. .

கிழக்கில் உள்ள சூரியன் சிம்மத்தில் ஆட்சியாகவும் மூலத்திரிகோணமாகவும் இருக்கும் போது, வட மேற்கில் உள்ள சந்திரன் கடகத்தில் ஆட்சியாகவும் மூலத்திரிகோணமாகவும் இருப்பது இப்படித் தான்!!,

ஆனால் இந்த ஈர்ப்பை ஏற்படுத்தும் சுக்கிரன் நீச்சமாக இருந்தாலோ, பாவக்கிரகங்களுடன் சேர்ந்தாலோ, இந்த காதல் உணர்வே அற்றுப் போய் விடும்.

இந்த ஏழாம் பாவத்தில் சுக்கிறனுடன் சனியும் இராகுவும் சேர்ந்தால் மனைவி கணவனை விடுத்து வேற்று ஆணுடன் நாட்டம் கொள்வதும், .அதுவே நீச்ச சுக்கிரன், சனி, செவ்வாய், இராகுவோடு சேரும் போது, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தன்மையை கொடுப்பதுமாய் இருக்கும். ஒரு பெண்ணை கதறக் கதற பாலியல் ரீதியான துன்பத்துக்கு ஆளாக்குபவனின் ஜாதகத்தில் இந்த அமைப்பே இருக்கும்.அதில் தான் அவனுக்கு காமக்கிளர்ச்சியே உண்டாகும்..மனைவியிடம் அளவுக்கு மீறிய காமக்களியாட்டடம் கொள்வதும் இது போன்ற அமைப்பினால் தான்.

ஆனால் குருவின் பார்வை இதை அப்படியே மாற்றிவிடும்..

அது போலவே, சுக்கிரன் சுபத்துவமாக தனித்திருக்கும் போது, அவன் பெண்களுக்கு பிரியமானவனாய் அவன் அருகாமைமை பாதுகாப்பாய் பெண்கள் உணரும் விதமாய் இருப்பான்..

பெண் தன் கணவனிடம் எதிர்பார்ப்பதே இதைத் தானே…காதலுடன் கூடிய காமத்தை தரும் கணவனுக்கு என்றுமே அவள் சரணாகதி தான்..அவன் அவளுடைய ஆத்மாவாக இருக்கும் போது, இவள் அவனுடைய ஆழ்மனதாகிறாள்!!

இதைத் தான் ஜோதிடம் நமக்கு வாழ்க்கை தத்துவமாக உணர்த்துகிறது!