வெள்ளி, 12 நவம்பர், 2021

புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய பெண் ஆபத்தானவள் என்று சொல்லப்படுவது சரியா?

 

இந்த புத்தகம் எழுதியது ஸ்டீபன் போல்ல்மன். புத்தகம் படிக்கும் பெண்களை பற்றிய வரலாற்றை சித்தரிக்கும் புத்தகம் இது.

பல நூற்றாண்டுகளாக,பெண்களிடம் எப்படி படிப்பறிவு, எதிர்ப்புகளுக்கிடையில் வளர்ந்து வந்தது என்று இந்த புத்தகத்தின் முன்னுரை, விளக்குகின்றது.

சிலர் அது பெண்களுக்கு நன்மை செய்வதாக பார்க்கும்போது மற்றவர்கள் பெண்களின் நடத்தை மற்றும் சமூக ஒழுங்கிலும் இறக்கம் ஏறப்பட்டதன் காரணமாக இதை பார்த்தனர்.

புத்தகம் படிப்பது என்பதே ஆழமான, தனிப்பட்ட ஒரு செயலாகும். அறிவை வளர்ப்பதோடல்லாமல், தனிப்பட்ட சந்தோஷத்தை அது ஏற்படுத்துகிறது. படிப்பவருக்கும் புத்தகத்திற்கும் இடையே ஒரு பிணைப்பை அது ஏற்படுத்தும். அவள மட்டுமே நுழையக்கூடிய ஒரு கற்பனை உலகம்.

படிப்பது என்பது அறிவை புத்திசாலித்தனத்தை வளர்க்கத்தான் . ஒருவர் புத்திசாலியாக மாறுவதே அதிகம் படிக்கும்போதுதான். அதுவும் அந்த மற்றொரு உலகிற்கு போகும்போது தான், அதனால் தான் வெளியிடங்களுக்கு செல்ல அதிக கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்ட அந்த காலத்தில் பெண்கள் அதிகம் நாவல்கள் படித்தனர். புத்தகம் படிப்பதில் அவள நாட்டம் கொண்டது அப்போதுதான்.

இப்படியும் கூட சொல்லலாம். கட்டுப்பாடுகளுக்கு எதிராக தன எதிர்ப்பை தெரிவிக்க அவள புத்தகம் படிப்பதன் மூலம், மற்றொரு உலகத்தை தனக்காக சிருஷ்டி செய்து கொண்டாள் என்று .

அது. பிடிக்குமா ஆணுக்கு? …….அதுதான் படிக்கும் பெண்களை ஆபத்தானவர்களாக பார்க்க வைப்பது.

ஏனென்றால், தன்னுடைய மனதில் கற்பனையாக ஒரு உலகத்தை உருவாக்கும் ஒரு பெண் அதனை நனவாக்க நினைப்பாள். பிறகு அதற்கு முயலுவாள். எவ்வளவு பெரிய ஆபத்து…..

இன்றும் பல நாடுகளில் பெண் கல்வி எப்படி ஒதுக்கப்படுகின்றது என்று நாம் கண்கூடாக பார்க்கிறோமே? வளர்ச்சியடையாத நாடுகளில் மட்டுமல்ல. வளர்ந்த நாடுகளிலும் பல இடங்களில் இன்றும் இந்த கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏன் ….. மனமுதிர்ச்சியுடன், ஒரு பெண் பேசினாலோ அல்லது எழுதினாலோ, அவர்கள் எதிர்கொள்ளுகின்ற எதிர்ப்புகளை தான் நாம் பார்க்கிறோமே?

இந்த புத்தகம் படிக்கும் போது மட்டுமல்ல, இந்த கேள்வி கேட்டதன் மூலமும் நாம் தெரிந்து கொள்ளலாம், பெண்கள் புத்தகம் படிப்பது என்பது எதிர்ப்பிற்குரிய விஷயம் என்று எண்ணுகின்ற மனிதர்களுக்கு இடையில் தான் நாமும் வாழந்துக் கொண்டிருகிறோம் என்று.