ஞாயிறு, 25 ஜூலை, 2021

ஜோதிடத்தின் ஜோதி] 02............ விதி என்றால் என்ன? நடப்பது எல்லாம் நம் விதிப்படித்தான் நடக்கும் என்றால் எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அதுதானே நடக்கும். நம்மால் நடக்க போவதை தடுக்க அல்லது மாற்ற முடியுமா?

 விதி என்றால் என்ன? நடப்பது எல்லாம் நம் விதிப்படித்தான் நடக்கும் என்றால் எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அதுதானே நடக்கும். நம்மால் நடக்க போவதை தடுக்க அல்லது மாற்ற முடியுமா?

எனக்கு ஒரு விபத்து நடக்க இருந்ததை தவிர்க்க நினைத்தும் நடந்ததை நான் குறிப்பிட்டு எழுதியிருதபோது, ஒருவர் கேட்டார். “அது தான் ஏற்கெனவே விதித்திருந்தது என்றீர்களே... பின்னர் ஏன் அதை மாற்ற முயல  வேண்டும்?” என்று.

 

இதே போன்ற ஒரு கேள்வியை இஸ்லாமியர்களின்  மதிப்பு வாய்ந்தவரும், முஹம்மது நபி பெருமானாரின் மருமகனாரும் ஆகிய அலி ரசூல்  அவர்களிடம் கேட்டபோது, அவர் கேட்டவரை நோக்கி அவருடைய கால் ஒன்றை தூக்க சொன்னார்.  அவரும் தன வலது காலை தூக்கினார். அந்த காலை   மடித்துகொண்டே, இப்போது அந்த இன்னொரு காலால் ஊன்றி நில்லுங்கள்"   என்றார்.  கேள்வி கேட்டவரால் சிறிது நேரத்திற்கு மேல் அவ்வாறு நிற்க முடியவில்லை.


அவர் சொன்னார், “இதுவே நான் இடத்து காலை தூக்கி மடித்துக்கொண்டு நிற்பதானால் இன்னும் சிறிது நேரம் கூட நின்றிருப்பேன்” என்றார்.


“அப்படியானால், நான் முதலில் சொன்னபோதே இடது காலை தூககியிருப்பது தானே?’ என்றார் அலி ரசூலுல்லாஹ் அவர்கள்.

 

" அது சரி. நான் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்றார் அவர்.


“நான் முதலில் ஒரு காலை தூக்குங்கள் என்று  சொன்னபோது உங்களுக்கு இரண்டு வித தேர்வுகள் இருந்தன.. வலது காலையோ அல்லது இடது காலையோ நீங்கள் தூக்கலாம்.  ஆனால் எப்போது நீங்கள் அதில் ஒன்றை தேர்வு செய்து விட்டீர்களோ, பின்னர் அதை தொடர்ந்து விதிக்கபட்டபடி நடக்கிறது. வாழ்க்கையிலும் அப்படித்தான். பிரபஞ்சம் தன்னிடம் உள்ள எல்லாவற்றிலும் தேர்வு செய்யும்  பொறுப்பை உங்களிடம் விட்டுவிடுகிறது. அங்கு தான் உங்கள் "மதி " இயங்குகிறந்து. பின்னர் நடப்பவை அனைத்தும்  உங்கள் தேர்வில் அடிப்படையில் தான். எனவே நடப்பவை விதிப்படியே ஆனாலும், ஆரம்பம் உங்கள் மதிப்படி  தான்” என்றார்.


நம் பிறப்பின் பொது கணிக்கப்பட்ட கிரகங்களின் அமைப்பு கொண்ட ஜாதகத்தையும் கோச்சாரத்தில் நம் செயல்களையும் கொண்டே நம் வாழ்வு தீர்மாணிக்கப்படுகிறது. 

ஜோதிடம் அல்லது "ஜோதிஷம்" என்ற சொல்லுக்கு ஜோதியைஅதாவது "ஒளியைப் பற்றிச் சொல்லுவது" என்று பொருள். இன்னமும் நிறைய பேர் ஜோதிடம் என்பது ஒரு கட்டுககதை, மூட நம்பிக்கை என்ற எண்ணத்திலேயே உள்ளனர்.  உண்மையில் வேத காலத்திய நம் மகா ரிஷிகள் எழுதிய இந்த தெய்வீக சாஸ்திரத்தில் அறிவிற்கு எதிரான மூட நம்பிக்கைகள் கிடையவே  கிடையாது.  அதனால், ஜோதிடத்தை “அறிவின் ஒளியை பற்றி .” என்றும் சொல்லலாம்.

இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒரு நமுட்டு சிரிப்பு சிரிப்பதை என்னால் உணர முடிகிறது.  ஆனால் எப்போது இதை படிக்க ஆரம்பித்தீர்களோ அது கூட விதியின் பயனாய் ஆனது என்றே நான் சொல்ல முடியும். 

 

இந்த பிரபஞ்சத்தில் நடப்பது அனைத்தும் அட்சரம் பிசகாமல் ஏற்கெனவே விதித்த படியே தான் நடக்கிறது என்று சொல்வது தான் ஜோதிடம்.

 

உலகமே பொய் என்றும் மாயை என்பார்கள் சிலர். அதன் தாத்பர்யம் என்ன என்று ஒரு மகானை கேட்டார்கள்.  அதற்கு அவர் “உலகம் உண்மை என்பது தான் அதன் அர்த்தம்” என்றார்.  கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை.  அதற்கு ஒரு சமஸ்கிரித ஸ்லோகத்தை எடுத்து சொல்லி, “நம் அறிவீனத்தின் காரணமாக உலகமாக பார்த்தல் இது பொய்.  அதையே அறிவு மூலம் பிரம்மமாக பார்த்தால் அது சத்தியம்” என்றார் . 

 


அதையே தான் நம் முன்னோர்களும் சொல்கின்றனர். நம் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், இந்த பிறவி கர்மாக்களும் தான் நம் வாழ்வின் தொடர் ஓட்டத்தை தீர்மானிககின்றன. அந்த பயணத்தின் மீது ஒரு டார்ச் லைட் போல நாம் கடந்து வந்த பாதையையும் போகப போகும் பாதையையும் காட்டுவது ஜோதிடம் தான்.

 

விதியை மதியால் வெல்லலாம்  என்பர் ஆனால் என் அனுபவத்தில் நான் உணர்ந்த வரையில், அந்த காலக்கட்டத்தில், நம் மதியை அதாவது மனம், மற்றும் புத்தியை  கோச்சாரததில்,  அதாவது நடப்பில் அந்தந்த இராசிக் கட்டததினுள் நுழையும் கிரகங்களின் ஒளிவீச்சை பெறும் இந்த பூமி அதற்கேற்றார்போல வினை புரிவது  போல, அதன் துனுக்களில் ஒன்றான நாமும்  மாறுகிறோம்.  இதுவே உண்மை ...

 

இதை நிரூபிக்க பூமியின் அருகில் உள்ள சந்திரனின் ஒளியை  முழு உச்சமாக பவுர்னமி நாளில் பெறுகின்றபோதும்,  முற்றிலும் அதன் ஒளி பெற வழியின்றி இருக்கும் அமாவாசையின் போது, மனிதர்களின் மனதை எப்படி பாதிககின்றது என்பதை அனுபவபூர்வமாக நாம் உணர்ந்த உண்மை.

 

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தின் தந்தை எனப்படும் சூரியனை சுற்றி தான் அனைத்து கோள்களும் வலம் வருகின்றன.  அப்போது அவை பெறும் ஒளியை பூமியின்ஏனைய கிரகங்களின்  மீது பிரதிபலித்தும், அவற்றிடம் இருந்து அதன் ஒளியை பெற்றும் ஏற்பாடு இந்த ஒளி கலவையை மையமாகக்கொண்டே உயிர்கள் தோன்றின என்று அறிவியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளனர்.  

 

இதைத்தான் ஜோதிடமும் சொல்கிறது....மனிதன் உட்பட உலகில்
உள்ளஅனைத்து உயிர்களையும், அதன் செயல், சிந்தனையை
சூரியனும், அதன் ஒளியை பெறும் ஏனைய  கிரகங்கள் ,
நட்சத்திரங்களும் எந்த அளவிற்கு கட்டுபபடுத்துகின்றன,
இயக்குகின்றன என்பதே.

 
( இந்த ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி

புகைப்படத்தில் தெரிவது ரிஷப  விண்மீன்
தொகுப்பில் மிக இளம் நட்சத்திரம்).

 

அவைகளுக்கு அத்தனை சக்தியா....என்று வினவுபவர்களுக்கு அறிவியலே “இந்த பிரபஞ்சத்தை ஆளுவது ஒரு சக்தி தான் “ என்று ஒத்துக்கொள்ளும்போது அதையே நம் ஞானிகள் பிரம்மம் என்றும் கடவுள் என்றும் சொல்லி, நமக்கு அதை எளிமையாக புரிய வைக்கும் பொருட்டு,  அதற்கு மனித உருவமும் அவற்றிற்கிடையே மனிதர்போன்ற உறவுமுறையையும் கொடுத்தனர்.

 

இந்த பிரபஞ்சத்தில் இருந்து தனக்கு  இன்னமும்  தீர்க்க முடியாத கணித சூத்திரங்கள் கிடைக்க பெற்றது  என்று நம் கணித மேதை  இராமானுஜர் சொல்லவில்லையா? 


எதை குறித்து அல்லும் பகலும் சிந்திகிறோமோ அதுவாகமே மாரிபோகிறோம் என்கிறார்களே.  அதுவும் இதை ஒட்டியே.   நம் மனம் மூலம் வேண்டுவதையே நமக்கு கொடுக்கிறது இந்த பிரபன்சம், அதனாலேயே எண்ணுவது  அதையே 


"எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். "

இதற்கு நம் தமிழறிஞர் சாலமன் பைபையா எழுதியா தமிழ் உரையில் “ ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

 

அந்த எண்ணத்தை உறுதிப்படுத்த கூடிய மன வலிமையை தரும் மாதரூகாருகன் சந்திரனையும், அது ஒளியை பெறும் இந்த பிரபஞ்சத்தின் ஆதி நாயகனாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம் உடல் உறுதி அளிக்க கூடிய சூரியனையும் இந்த பிரபஞ்சத்தின் தாய் தந்தை என்று வரையறுத்தனர் நம் ரிஷிகள். தாய் தந்தைக்கு தானே, அவர்களின் பிள்ளைகளின்  உடல் மற்றும் உள்ள வலிமையில் அக்கறை இருக்கும்? 

 

பகலில் நமக்கு ஒளியை தரும் சூரியனையும், அதன் ஒளியை பெற்று, இருளில் இருந்து நமை காக்கும் சந்திரனையும் ஜோதிடத்தில் முதன்மை கிரகங்கள் என்று வைத்ததும் எவ்வளவு சரியானது. 


 அது மட்டுமா, சூரியன் உச்சத்த்தில் இருக்கும் சித்திரை மாதத்தை தான் மேஷம் என்னும் முதன்மை கட்டம் ஆக்கப்பட்டது. அதே போலவே மேகமூட்டத்துடன் இருக்கும் கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியை தான் விமரிசையாக கொண்டாடும் வழக்கும் தொன்று தொட்டு நமக்கு உள்ளது.  அன்று தான் சந்திரன் முழு ஒளி பொருந்தியதாக இருப்பதை கணக்கிட்டே இரண்டாவது இராசி கட்டமாக ரிஷபம் நம் மகா ரிஷிகளால் வைக்கப்பட்டுள்ளது.


 இப்படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு இராசிக்கட்டதில் நுழையும்போது, அது சூரியனிடம் இருந்து பெரும் ஒழி கேற்ப, வலு இல்ழக்கவோ, உச்சம் அடையவோ செய்கிறது. அதே போல தான் நுழையும் இராசி கட்டத்திற்கும் அதற்கும் உள்ள உறவுமுறை அதாவது நட்பு, பகை, சமம் நீச்சம்  போன்றவை கொண்டும், அது மற்ற கிரகங்களுடன் அங்கு இணையும் போதோ மற்ற இராசிகளையும் அதிலுல் கிரகங்களை பார்க்கும் பார்வையை கொண்டு தான் அனைத்தும் தீர்மானிக்கபடுகின்றன என்கிறது வேத ஜோதிடம்.


விளங்க முடியா ரகசியத்தை தன்னிடம் வைத்திருக்கும் பிரபஞ்சத்தை பற்றியும் அது நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாகத்தையும் உணர வைப்பது ஜோதிடமே..


போகும் பாதையில், பள்ளங்கள் வர இருக்கிறது என்று ஜோதிடம் உணர்த்தும்போது, நம் மதியால் செப்பனிட்டு கொள்ள லாம் தானே?


அதை கணிக்கும்போதும் ஜோதிடர்கள் தவறு செய்யலாம். ஆனால் ஜோதிடம் என்றுமே பொய்தததில்லை.