உறவுகள் மேம்படவும், உணர்வுகளை செம்மைப்படுத்தவும், அதற்கு அன்றாடம் பயில வேண்டிய கலை குறித்து அலசும் தளம் இது..
சனி, 30 ஏப்ரல், 2022
இந்திராகாந்தியின் படுகொலையை ஜாதக ரீதியாக விளக்க முடியுமா?
கடக லக்னம், மகர ராசி. லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் லக்னத்தைப் பார்த்து வலுப்படுத்துகிறார்
அதி விஷேஷமான மூன்று பரிவர்த்தனைகள் ..அதுவும் லக்கினாதிபதியும் அவர் பகை கிரகமான சந்திரனும் பரிவர்த்தனை. ஆகி, ஆட்சி பலத்தை அடைகின்றனர . வளர் பிறை சந்திரனின் ஒளியால் சனி சுபத்துவம் அடைகிறார்,
அடுத்து அரச பதவியை தரும் சிம்மமும் சிம்மாதிபதியும் சுபத்துவமாக இருக்க வேண்டும் என்பது விதி. அத்தோடு கூட இருவரும் பரிவர்தனையாகவும் ஆகியுள்ளனர். புத் ஆதித்ய யோகத்துடன் சிவராஜா யோகமும் சேர்ந்து அமைந்த சிறப்பான அமைப்பு. அதுவே அவரை நீண்ட பதினேழு வருட பிரதமர் பதவியை கொடுத்துள்ளது.
இவற்றிற்கு மகுடமாக லாபஸ்தானம் எனப்படும் பதினொன்றாம் பாவத்தின் அதிபதியான சுக்கிரன் குருவின் தனுசு ராசியிலும் க் தன காரகனான குரு, அந்த லாபஸ்தானத்தில் பரிவர்த்தனை ஆகி அமர , அவர் பிறப்பிலிருந்தே செல்வா செழிப்பில் திளைத்தவர்.
மொத்தத்தில் இருக்கும் ஒன்பது கிரகங்களில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை ஆகி, ஆட்சி பலத்தை பெற்றதும், ஆறாம் பாவத்தில் இராகு அமர்ந்ததும் , எதிரிகள் நெருங்கவே முடியாத பலத்துடன், அப்படியும் எதிர்த்தோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய வலிமையை கொடுத்தது.