செவ்வாய், 28 டிசம்பர், 2021

கோடியில் ஒருவர் தானா கோடீஸ்வரி…..2


இந்த பகுதியை ஆரம்பிக்கலாமா என்று கருத்து கேட்டதற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்து மடல் அனுப்பியிருந்தனர். அதிலும் நிறைய பேர் பெண்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி!!

பெரும் தன்வந்தர்களின் பட்டியலை பார்க்கும்போது, அதில் அத்தி பூத்தார் போல தான் ஓரிரண்டு பெண்களின் பெயர்கள் இருக்கும்….அது ஒரு சதவீதம் கூட இல்லை என்பது வருந்தத்தக்க செய்தி…இத்தனைக்கும் பெண் தான் அந்த குடும்பத்தின் மதி மந்திரி….நிதி மந்திரியும் கூட என்னும் நிலையில் …

இதற்கு முதல் காரணம் பெண்கள் தங்களை பொருளார ரீதியாக உயர்த்திக் கொள்ள முன்வராததும் கூட. .. வேலைக்கு போகும் பெண்ணோ, இல்லத்தரசியோ ….(வேலைக்கு போனால் அவள் இல்லத்திற்கு அரசி இல்லையா என்ன??!!) தன குடும்பத்திற்கு வேண்டியதை செய்வதில் தான் அவள் கவனம் இருக்கும்… என் குடும்பம் தான் எனக்கு சொத்து இதில் தனியே ஒரு சொத்து எதற்கு என்ற நிலைபாடை கொண்ட பெண்களே பெரும்பான்மை. இங்கே விதிவிலக்குகளை விட்டுவிடுவோம்……

நான் பொருளாதார ரீதியான பாதுகாப்பு என்று சொன்னதும் நிறைய பேர் பணம், நகை சேமிப்பை மட்டுமே நினைப்பார்கள்.. ஆனால் செல்வம் என்றும் குறிப்பிடும் போது முதலிடத்தை பிடிப்பது உடல் நலமே….

"Health is the Wealth " என்று சும்மாவா சொன்னார்கள்? அந்த வகையில் உடல் நலத்தை பெரிதும் கவனித்து சீர் படுத்திகொண்டு, அதனால் அந்த குடும்பத்திற்கு எந்த பொருளாதார நெருக்கடியும் கொடுக்காமல் இருப்பவரும் கோடீஸ்வரி தான்!!.

இந்த வகையில் கோடீஸ்வரர் ஆகும் தகுதியை பெறுவதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து கொள்வது தான். "வரு முன் காத்தல்" என்பது இது தான்…

இந்த கோவிட் மற்றும் ஒமிக்ரான் பயமுறுத்தல்களும், நீண்டுக கொண்டே போகும் மருத்துவ செலவுகளும், நம்மை ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மீதான கவனம் திரும்ப ஆரம்பித்துள்ளது சிறப்பு. ஆனாலும், இன்னமும் தங்கள் ஆயுளுக்கு பாலிசி எடுப்பது குறித்து நிறைய மனமாற்றம வர வேண்டியுள்ளது…

ஆயுள் காப்பீடு என்றாலே 'Money Back" பாலிசியை தான் நிறைய பேர் தரவு செய்கிறார்கள்…ஆனால் ஆயுள் காப்பிட்டிற்கு சிறந்தது எண்டோவ்மென்ட் மற்றும் டெர்ம் பாலிசிகளே…ஒவ்வொரு வருடமும் நம் வயதிற்கேற்ற ப்ரீமியம் செலுத்தி வர, முழு ஆயுளும் என்று சொல்ல முடியாது…தற்போது எண்பது வயது வரை காப்பீடு கிடைக்குமாறு வயதை கூட்டியுள்ளார்கள். எவ்வளவு சிறிய வயதில் செருகிரோமோ அந்த அளவிற்கு ப்ரீமியம் குறைவாக இருக்கும். ஆனால் பாலிசி காலத்திற்கு பின்னர் ஒருவர் இறந்தால் எந்த முதிர்வு தொகையும் கிடையாது.

"அது எப்படி….பணம் கட்டி , அத்தனை வருடங்கள் கழித்து ஒரு முதிர்வு தொகையும் கிடைக்காது என்றால் அது எப்படி சரியாகும்?' என்று சிலர் எதிர்க் கேள்வி கேட்பார்கள்..

என்னைப் பொறுத்த வரையில் ஆயுள் காப்பீடு செய்வதையும் , முதிர்வு தொகை பெறுவதையோ அல்லது இன்வெஸ்மென்டையும் சேர்த்து குழப்பிக கொள்ள கூடாது என்பேன். ஆயுள் காப்பீடு செய்ய வேண்டும் என்றால் அது குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது சிறந்தது…

நாம் மோட்டார் வாகனத்திற்கு ஒவ்வொரு வருடமும் காப்பீடு செய்கிறோமே,, எதிர்பாராத விபத்து நடந்தால், அதற்குரிய இழப்பீடு கிடைக்க தானே?? அந்த வருடம் விபத்து ஏதும் நடக்கவில்லையெனில் நிம்மதி பெருமூச்சு விடுவோமே தவிர, கட்டிய ப்ரீமியம் வீணாகி போனதே என்று கவலைப் படுவோமா? கட்டிய பாலிசி ப்ரீமியத்திற்காக, விபத்து நடக்க வேண்டும், என்று ஆசைப்படுவோமா? அது போலத் தான் இது?

பாலிசி காலம் வரையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், ன்லையற்று தவிக்கும் அந்த குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பு நிதி ரூபத்தில்….அது எவ்வளவு பெரிய தேவையாக அப்போது இருக்கும் என்று வார்த்தையால் சொல்ல முடியாது….என்ன தான் பிரியத்திற்குரியவர் என்றாலும், அவர் இழப்பு தாங்க முடியாது, அதை பணத்தால் நிரப்ப முடியாது என்றாலும், வண்டி ஓட வேண்டுமே?

அதுவும் நம் ஆயுள் எப்போது முடியும் என்பது பரம்பொருளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் . ஜோதிட ரத்னா எனப்பட்ட பார்த்தசாரதி அவர்கள் கூட, தன ஆயுள் குறித்து தான் கணித்தது தவறாகிவிடக்கூடாது என்பதற்காக தற்கொலை செய்துக் கொள்ளவில்லையா?

ஜாதகத்தில் ஆயுளை குறிக்கும் எட்டாம் பாவமும், அதன் அதிபதியும், ஆயுள் காரகன் எனப்படும் சனியும் எந்த அளவிற்கு சுபத்துவமாக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அற்ப ஆயுளா, மத்திய ஆயுளா அல்லது தீர்க்க ஆயுளா என்று சொல்ல முடியும்….

மனிதனின் ஆயுத காலம் 120 வருடங்கள் என்று சொல்லியுள்ளதற்கேற்ப ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ற பிரீமியமும் இருக்கும் என்பது உண்மை தான்.

ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் கவனிக்க தவறுவது அதற்கு எதிரில் உள்ள இந்த பாலிசியை தான். ..இந்த டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் குறித்த் நான் ஆராயும் போது தான் கண்ணில் பட்டது இது…

எல் ஐ. சி.யின் டெக் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி .

(.இது ப்ரோமொஷனால் பதிவு கிடையாது. இருப்பதிலேயே சிறந்த பாலிசி என்பதால் இதை நம் சகோதரிகளுக்கு தெரிவிக்க எண்ணி இந்த பதிவு)

இதில் உள்ள சிறப்புகள்

  1. மற்ற டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் எல்.ஐ.சி கொடுத்தாலும், இது மட்டுமே ஆண் லைனில் பெறக் கூடியது…இதனால் கிடைக்கும் வசதி…ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் நமக்கு திருப்பி விடப்படுகிறது…
  2. ஆனாலும் இதன் குறைந்த பட்ச பாலிசி தொகை ஐம்பது லட்சம் ரூபாய் . அதற்க்கு குறைவாக தான் பாலிசி வேண்டும் என்றால் எல் ஐ. சி ஏஜெண்டிடமே போய் பாலிசி எடுக்கலாம். ஜீவன் அமாக் உள்ளதே….ஆனால் ஒரு நிமிடம்…நீங்கள் எடுக்க போகும் 25 இலட்ச ரூபாய் பாலிசி( அது தான் குறைந்த பட்ச பாலிசி அதில்) தொகையுடன் சற்று 20% …30% மட்டுமே இதில் ப்ரீமியம் கூடுதலாக இருக்கும். ஆனால் பாலிசி தொகை அப்படியே டபுள் மடங்கு..
  3. பெண்களுக்கு சிறப்பு சலுகை உண்டு.( அவர்களுக்கு தான் பெரும்பாலும் ஆயுளை குறைக்க கூடிய கெட்ட பழக்கம் இருக்காதே!!)
  4. எந்த வித லாப நோக்கும் இல்லாமல் ஆயுள் காப்பீடு மட்டுமே கருத்தில் கொண்ட பாலிசி…உதாரணத்திற்கு ஐம்பது வயது உள்ள ஒருவர் காப்பீடு செய்தால் அவர் கட்ட வேண்டியது வருடத்திற்கு சுமார் 20,000/- ரூபாய்க்குள் மட்டுமே…ஒட்டு மொத்தமாக நாம் கட்டும் பணத்தோடு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நம் குடும்பத்திற்கு கிடைக்கும் பணத்தை…கிட்டவே நெருங்க முடியாது…கிட்டத்தட்ட பத்து மடங்கு!!
  5. ஆனால் இந்த பாலிசிக்கு நாம் வலைத்தளத்தில் தான் வினப்பிக்க வேண்டும். இந்த லிங்க்கில் போய் மேலும் விவரங்களை பெறலாம்….

https://digisales.licindia.in/eSales/liconline/setprop

இந்த பாலிசியை எடுத்து வைத்து கொண்டால்…நீங்களும் கோடீஸ்வரி தான்……!!

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்…இறந்தாலும் ஆயிரம் பொன்" என்ற பழமொழியை நமக்கே உதாரணமாக்கி கொள்ளலாம்….அதற்காக நம் உருவத்தையும் அது போலவே ஆக்கிக் கொள்ளகூடாது!!

ஆனால் இதில் ஒரு அசௌகரியமும் உண்டு தான் ………………அதை நான் சொல் மாட்டேன்..!!

"நீ கூட இருந்தாலே நான் கோடீஸ்வரி/கோடீஸ்வரன் தான் ." என்று சொல்லும் குடும்பம் இருக்கும் போது …….எல்லாம் சுகமே…..

இருந்தாலும்….சட்டு புட்டென்று பாலிசை எடுத்து விடுங்க…வரும் புத்தாண்டு காலாண்டு வாக்கில் இன்சூரன்ஸ் ப்ரீமியம் அதிகரிக்க இருக்கிறது……….

மீண்டும் இன்னொரு பதிவில் வேறொரு தகவலுடன் சந்திப்போம்.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான காரணத்தை ஜாதக ரீதியாக விளக்க முடியுமா?

 என் பள்ளிக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த நபராக இருந்தவர பிரதமர் இராஜீவ காந்தி. இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியிருந்த நேரத்தில், அதை எதிர்த்து, அவருக்கு நான் எழுதிய கடிதத்திற்கு, அவர் பதில் கொடுத்திருந்தார்.பக்கத்து வீட்டில் தீ பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? என்று கேள்வியெழுப்பி, அதை நியாயப்படுத்தியிருந்தார்.என் பள்ளியில், அந்த கடிதம் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது!!

அவருக்கு நேர்ந்த துர் மரணம் சொல்லமுடியா வேதனையை கொடுத்தது. உலகமெல்லாம் சுற்றியவர் முடிவு, தமிழ்நாட்டில், அதுவும் சென்னைக்கு அருகில் வேறு..

அந்த கோர படுகொலையில் சிக்குண்ட போலிஸாரின் புகைப்படங்கள் காஞ்சீபுரம் காவல் துறை தலைவர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதை பார்த்துள்ளேன்.

இப்படி ஒரு வெடி விபத்தில் உடல் சிதறி கோரமாக மரணம் நேரும் என்பதை அவர் ஜாதகம் தான் காட்டியுள்ளதே..

சிம்ம லக்கினம், சிம்ம இராசியும் கூட.

லக்கினத்தில் சுக்கிரன், குரு, சந்திரன் என்று லக்கினம் அதிக சுபத்துவமாக உள்ளது. அதனாலேயே அரசனுக்கொப்பான வாழ்க்கையைத் தான், அவர் பிறந்ததிலிருந்து வாழ்ந்துள்ளார்.

லக்கினத்தில் உள்ள குருவை சூரியன் அஸ்தங்கம் செய்து, அதன் சுப பலனை அவரே எடுத்துக் கொள்கிறார் என்பதால ஜாதகப்படி அதிக சுபத்துவம் பெற்ற கிரகம் சூரியனே..சூரியன் அதி வலுத்து இருக்கும் ஜாதகர் தலைமை தாங்கும் பதவியை பெறுவார் என்ற வேத ஜோதிட அடிப்படை விதியை யொட்டி, இராஜீவ் காந்தி, யாரும்… ஏன் அவரே எதிர்பார்க்காத தருணத்தில், மக்களின் தலைவராக, பாரத பிரதமராக பதவி ஏற்றார்.

எல்லோர் வாழ்விலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் இராகு தசை தான் அப்போது அவருக்கு நடந்துக் கொண்டிருந்தது. இராகு அவர் ஜாதகத்தில் 12.ம் பாவத்தில் மறைந்துள்ளார். பாவ கிரகங்கள் 3, 6,8,12ல் மறைவது நல்லது என்றாலும், 3, 11ம் பாவத்தில் மறையும் கிரகங்கள் அந்த லக்கினத்தோடு நட்பு நிலையில் இருக்கும் பாவத்தில் இருக்கும் என்பதால் நல்லதையே செய்யும்.. இராகுவுக்கு பிடித்த பாவமான கடகத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த 12ல் இருக்கும் இராகு அவரை உச்சத்தில் தூக்கி வைத்ததோடு அல்லாமல் அவர் மரணத்திற்கும் காரணமாக ஆனார். .உத்தர காலாம்ருதத்தில் மகாகவி காளிதாசர் 12-மிட ராகு ராஜயோகத்தைத் தந்து மாரகத்தையும் தருவார் என்று ஒரு சுலோகத்தில் சொல்லியிருக்கிறார்.

சிம்ம லக்கினத்தின் மாரகாதிபதி 2குடைய புதன். அதன்படியே 1991ல் அவர் இறக்கும் போது அவருக்கு இராகு தசை, புதன் புத்தி நடந்துக்கொண்டிருந்தது.

"இராகுவை போல கொடுப்பாரும் இல்லை.கெடுப்பாரும் இல்லை" என்பது தெரிகிறதா?

சுபத்துவமில்லாத பாபத்துவமான சனியின் மூன்றாம் பார்வை லக்கினத்தின் மீதும் லக்கினாதிபதி மீதும் உள்ளது. சனி ஆயுள்காரகன் அல்லவா? அதனாலேயே அவரின் பாபத்துவமான பார்வையால் இராஜிவின் ஆயுள் கெட்டு, இளம் வயதான 41 வயதிலேயே அவர் மரணமடைய வேண்டியிருந்தது.

ஒருவரின் மரணம் எப்படி நடக்கும் என்று காட்டுவது எட்டாம் பாவம்.இங்கு பாவத்துமான செவவாய் அதை பார்க்கிறார்.செவ்வாயின் தொடர்பு கொண்டதாலேயே அதன் மோசமான காரகத்துவமான வெடி விபத்தால் உடல் சிதறி, இராஜீவ் கொல்லப்பட்டார்.

மனம் அதிக வலியால் கனமாக இருப்பது போல உணரும்போது அழுகை வராது.முழு அமைதி தான் நிலவும்.

அப்படித்தான் நானும் அந்த செய்தி கேட்டபோது உணர்ந்தேன்..



அசைவ உணவுகள் மூர்க்க குணத்தின் அடிப்படையா?

 என. செல்லக்குட்டி பையன் படு சமர்த்து. கலப்பினம் என்றாலும் தன் டாஷண்ட் அப்பாவின் மூர்க்கத்தனம் அதிகம் இருக்கும்

அவன் குட்டியாக இருந்ததிலிருந்து சைவ சாப்பாடு தான்..தயிர் சாதம் என்றால் ரொம்ப இஷ்டம்..அவனுக்கு இரண்டு வயதான போது, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள், அசைவம் கொடுக்காமல், அவன் இயற்கை உணவுப் பழக்கத்தை கெடுக்கிறேன் என்றார்கள்.அதனால் இரண்டு விதமாகவும் உணவு கொடுக்கப்பட்டது.

இதில் தெரிந்த வித்யாசம் என்னவென்றால், சைவ உணவு உண்டால் அமைதியாக இருக்கும் அவன், அதுவே அசைவம் என்றால் படுமூர்க்கமாகிவிடுவான்.கிட்டவே நெருங்க முடியாத அளவிற்கு அவன் உறுமல் இருக்கும்.

அசைவ உணவு உள்ளே இருக்கும் மிருக உணர்வை தூண்டுகிறது என்பது தான் உண்மை.

இது விலங்கிற்கு தானே பொருந்தும்.மனிதனுக்கில்லையே? என்கிறீர்களா?

மனிதனே ஒரு சமூக விலங்கு தானே?!! மிருகத் தன்மையும் , மனிதத்தன்மையும் கலந்த கலவை தானே நாம்? இதில் எது அதிகமாக வெளிப்படுகிறதோ, அதை கொண்டு அவன் குணம் தெரியும்.

அந்த குணத்தை மாற்றுவதில், அவன் உண்ணும் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு.இதை மறுக்க முடியாது.

க்ஷத்திரிய அரசர்கள் சைவ உணவு உண்டு, போர்க்களம் புகுந்ததாய் வரலாறு உண்டா?

வீரத்திற்கு அசைவம் என்றால், விவேகத்திற்கு சைவம்!!

சைவ உணவு, உடலின் தினவை குறைத்து, மூளைத்திறனை கூட்டும்.

அப்படியானால் அசைவம் உண்பவர்கள் புத்தி மந்தம் என்று சொல்லமுடியுமா? எனக் கேட்கலாம்.

அசைவ உணவு உண்ட பின் ஏற்படும் கிறுகிறுப்பு சொல்லுமே பதிலை.அப்போது எதையும் யோசித்து செய்யக்கூடிய நிலையில் இருப்போமா?

அதனால் தான், சுகபோகத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் ஏழாம் பொருத்தம் என்றார்கள்!! சுக்கிரன் உச்சமானால் அங்கு புதன் நீச்சமடைவது அதனாலேயே!!

அதே சமயம், அசைவ உணவு, மூர்க்க குணத்தின் அடிப்படையாகாது..அதன் தூண்டுகோலாக இருக்கும்.