திங்கள், 30 ஆகஸ்ட், 2021

ஜோதிடத்தின் ஜோதி 17... நடிப்பு வகுப்பில் நீங்கள் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் என்ன?

 உலகமே ஒரு நாடக மேடைன்னு அதில் ஒவ்வொருவரும் பின்னி பெடலேடுத்து நடித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களை பார்த்து கற்றுக் கொண்டால் போதாதா?!! இதில் தனியாக நடிப்பு வகுப்பிற்கு போக வேண்டுமா?

சரி.. இன்னொரு மனிதரின் நடிப்பை பார்த்து கூட அதிசயப்பட வேண்டாம்....

இவரின் நடிப்புத் திறமையை பற்றி நீங்கள் அறிந்து கொண்டால்...அசந்து போவீர்கள்!!

ஏனென்றால் ஒருவரை அப்படி திறமையாக நடிக்க வைப்பவர் சாயா கிரகம் என்னும் இராகு ...

இராகுவின் ஆதிக்கம் இருப்பவரால் தான் சினிமா துறையில் பிரபல நடிகராக மின்ன முடியும்!! அந்த அளவிற்கு, நடிப்பிலேயே கில்லாடியாக இராகு பகவானை சொல்லக் காரணம் என்ன?

சொந்த வீடு இல்லாத ஒருவர், இன்னொருவரின் வீட்டிற்கு போனால், என்ன செய்வார்? பேசாமல் உட்கார்ந்து கொடுத்ததை எடுத்துக்கொண்டு  கிளம்புவார்!

ஆனால் இவர் ...அந்த வீட்டு உரிமையாளர் செய்ய வேண்டிய வேலையை தடுத்து, தானே வீட்டு உரிமையாளராக மாறி அந்த காரியங்களை எடுத்து செய்வார். 

வீட்டு உரிமையாளர் போல மட்டுமல்ல ..அதே சமயத்தில், அந்த வீட்டில் உள்ள மற்றவர்கள்   ( கிரகங்கள்} , அந்த வீட்டை பார்ப்பவர்கள், அத்தோடு விட்டாரா ..எந்த நட்சத்திரத்தில் உட்கார்ந்து உள்ளாரோ அதன் அதிபதி போலவும் இப்படி டைப் டைப் ஆக மாற யாரால் முடியும்? அத்தனையையும் சீரும் சிறப்புமாக செய்து முடிப்பார்...!!


அதனால் தான் சொல்கிறேன்... அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு தான் ஏராளம். உண்டு. 

ஆனால் லேசில் தன்னை பற்றிய தகவல்களை வெளியிட மாட்டார். மகா மூடுமந்திரமாக இருக்கும் அவர் செயல் பாடுகள். . சில நிலைகளில் அவருடைய செயல்பாடுகளை கணிப்பது என்பது கை தேர்ந்த ஜோதிடர்களையே தலையை சுற்ற வைக்கும் என்பார்கள் ..

ஒருவரை பற்றி ரகசியமாக துப்பு கொடுப்பவர்கள் அவரின் டிரைவர்கள் தானே...அது போல ஒரு கிரகத்தின் செயல்பாடுகளை அது இருக்கும் நட்சத்திர சாரம் கொண்டும் தீர்மானிப்பார்கள். ஆனால் இராகுவிடம் இந்த கதை செல்லுபடியாகாது!! அவருடைய சொந்த நட்சத்திிரததிலேயே அவர் உட்கார்ந்து இருந்தால், அவரைப்  பற்றி கணிப்பது என்பது ??

அப்படியும் அவரைப பற்றி அறிந்தவரையில் நான் தெரிந்து கொண்டவை.

  • அவர் ஒரு பச்சோந்தி. எந்த இடத்தில் இருக்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளர்பே, போலவே மாறி, தானே அவரை போலவே செயல்படுவார்.
  • தன்னை மிகவும் நெருங்கி (சுமார் எட்டு டிகிரிக்குள்) வருபவர் யாரானாலும், அதாவது எந்த கிரகமானாலும் , அவர்களை தன்னிடம் சரணடைய வைக்கும் தன்மை அவருக்கு உண்டு. அப்படி இல்லாமல், விலகி இருக்கும் கிரகத்தின் நிலையும் அதே தான்....பிறகென்ன, அவரை போலவே இவர் மாறி, அந்த கிரகத்தின் தன்மையை செயவார்...நன்றாக கவனியுங்கள்...நன்மையை அல்ல..தன்மையை.
  • இராகு சனியை போன்றவர என்று சொல்லும் காளிதாசர், அசுப தன்மையை பற்றி சொல்லும் போது, சனியை முழு பாபர் என்றாலும, இராகுவை முக்கால் பாபர் என்று தான் சொல்கிறார். ஏன் தெரியுமா? சனியால் நன்மையே செய்ய தெரியாது என்பதை விட அவர் பணம் கொடுப்பது என்றாலும் அவருடைய கெட்ட ஆதிபத்தியங்களின் மூலமாக அதாவது வெளியே சொல்ல கூச்சப்படக்கூடியவை மூலமாகவே தருவார். ஆனால் குப்பையில் இருந்தவரை கூட கோபுரத்தில் தூக்கி வைப்பவர் இராகு. அவர் ஒரு சுப கிரகத்தின் தொடர்பை பெறும்போது......இதிலிருந்து தெரிந்து கொள்வது, நல்லவர்களோடு இருக்கும்போது, நாமும் அவர்களை போலவே நல்லதே செய்வோம். தீயவர்களுடன் சேரும் போது.....??
  • ஆனாலும் அவரிடம் உள்ள தன்மை.......அவருடன் தொடர்பில் உள்ள சுபக் கிரகத்தின் நல்ல காரகத்தன்மையை அவர்கள் செய்ய விடாமல் கெடுத்துவிடுவார். , அதையே தன்னுடைய தசையில், தான் கொடுப்பது போல கொடுப்பார்.!! இதை நாம் நிறைய பேரிடம் பார்த்திருக்கிறோமே!!
  • சரி எல்லோருமே இராகுவை ஒத்துக்கொண்டு சரணடைந்தோ தன காரகத்துவம் அல்லது ஆதிபத்தியத்தை செய்ய விட்டுவிடுவார்களா என்ன? இவரைப் போலவே இன்னொரு பலசாலி, அதாவது இந்த வீட்டின் அதிபதி இவரை விட்டு விலகி, இருந்து சம வலுவுடன் இருந்தால் என்ன ஆகும்? வேறு என்ன" இன்னொரு ஹீரோ தன்னை விட முன்னுக்கு வருவதை யார் தான் விரும்புவார்..அவரையும் அந்த நல்ல காரகத்துவம் செய்ய விடாமல் தடுத்து, தானும் செய்யாமல் விடுவார்!!
  • நாம் அனைவரும் அஞ்சி நடுங்கும் கிரகம் என்றால் அது சனி தான். எந்த பரிகாரத்திற்கும் அவர் மயங்கி தன்னுடைய கெடுபலன்களை செய்யாமல் விடமாட்டார் என்பார்கள் அல்லவா? அவரே ராகுவிடம் சரணடையும் போது தன்னுடைய காரகத்துவங்களான வறுமை, தரித்திரம், கடன், நோய், உடல் ஊனம் போன்றவற்றைத் தர இயலாது...இப்போது சொல்லுங்கள் இராகு பாபரா?? ]];;
  • இந்த பிரம்பஞ்ச நாயகனான சூரியனுடன் இணைந்ததால அஸ்தங்கம் ஆகும் ஒரு கிரகம் கூட பரிவர்த்தனை அடைந்திருந்தால் தன் சுயபலத்தை பெறும் என்று மூல நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ராகுவிடம் இணைந்த கிரகங்களுக்கு அந்த விமோசனம் கூட கிடையாது. 
  • அது மட்டுமா ...அந்த சூரியனையும் கூட சில நிமிடங்கள் மறைத்து கிரகணம் ஏற்பட வைத்து சூரியனின் ஒளிக்கதிர் வெளிப்படாமல் மறைக்க கூடிய ஆற்றல் பெற்றவர். அது ஒன்றே சொல்லாதா இராகுவின் வீரியத்தை.!! சூப்பர் ஸ்டார் இல்லையா?!!
  • இராகுவின் நடிப்பாற்றல் எப்படியிருக்கும் என்றால், தான் ஏமாந்து போகிறோம் என்பதை கூட சந்தோஷமாக ஒருவரை செய்ய வைக்கும். ஆனால் சனி கெடுக்கும்போது, ஒருவர் அதை திட்டிக்கொண்டு தான் இருப்பார். கிரகங்களில் நடிகர் திலகம் என்ற பட்டம் கொடுக்கலாமா ??!!
  • இளம் பருவத்தில் காமத்தை தெரியப்படுத்தி,. ஒரு பெண்ணை காதல் என்ற பெயரில் கற்பிழக்கச் செய்வதும் இந்த ராகு, கேதுக்கள் தான். தனக்கு சரி அந்தஸ்து இல்லாத நபரை "பார்க்க பார்க்க பிடிக்க வைத்து " பெற்றோரை கூட விட்டுவிட்டு, அவன் பின்னால் செல்ல வைப்பதும் இராகு தான் ! காதல் கண் இல்லாதது இல்லை.. .காதல் இராகுவால் ஆனது!!
  • அப்புறம்,..வீட்டில் ஒருத்தருக்கு மேல. அவருடைய தசை நடக்கும்போது, நம்ம ஆட்சி தான் என்று விட்டுட மாட்டார். நல்லது செய்ய வேண்டிய ஜாதகருக்கு கூட, அவர் குடும்பத்தில் உள்ள இன்னொருவருக்கும் அதே தசை நடக்றது என்பதாலேயே ,கஷ்டங்களை கொடுப்பார். ஒரு உறைக்குள் ஒரு வாள் தான் இருக்கணும்!!
  • அதனால் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, மாபிள்ளையும் பெண்ணும் சந்தித்து கொள்கிறார்களோ இல்லையோ, இரண்டு பேரின் ஜாதகத்தில் இராகு தசை சந்திப்பு இருக்கக் கூடாது. திருமணப் பொருத்தம் பார்க்கும் போது எதிர்காலத்தில் இருவருக்கும் ராகுதசை சந்திப்பு இருக்கக் கூடாது என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும்.
  • அப்புறம் வீட்டுக்காரர் வேலைக்கு வெளியே போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்து வேலை  செய்கிறாரா... அதாவது வொர்க் பிரம் ஹோம் அதெல்லாம் இவரிடம் கூடாது. "காரஹோ பாவ நாஸ்தி” எனும் நிலையை எடுத்துச் செய்வது பெரும்பாலும் ராகு, கேதுக்கள் தான்.. எந்த கிரகம் தன்னுடைய சொந்த பாவத்திலேயே அமர்ந்து உள்ளதோ அதன் தொடர்பை பெற்றிருந்தால் , அவர்களின் புக்திகளில் கடுமையான பலன்கள் இருக்கும். நடிகரை ஃபாலோ பண்றோமோ இல்லையோ ..விதிகளை பண்ணனும்!
  • கெடுபலன் தரும் நிலையில் உள்ள ராகுவால் ஒருவருக்கு வெளியே சொல்ல முடியாத இனம் புரியாத மனக்கலக்கம் இருக்கும். மனம் ஒரு நிலையில் இருக்காது. ஒருவரைக் குறைந்த அளவு மனநோயாளியாகவும் மாற்றும்.  பின்னே...பாம்பு புகுந்த வீடு எப்படியிருக்கும்??
  • அன்னிய மதம் அல்லது இனத்தில் திருமணம் செய்து கொள்ள வைப்பதும் ராகு ,கேதுக்கள்தான். ஏழாமிடத்திலோ, ஏழுக்குடையவனுடனோ சம்பந்தப்படும் பாபத்துவ ராகு ஒருவருக்கு அன்னிய மத, குறிப்பாக இஸ்லாமிய வாழ்க்கைத் துணையையும், கேது கிறித்துவ வாழ்க்கைத் துணையையும் தருவார்கள். அப்படின்னா ஊரில் உள்ள கலப்பு திருமணம செய்தவர் எல்லாரும் இவரின் குடையின் கீழா!!
  • ஆனாலும் சுபத்துவமான இராகுன்னாலேயே "பிரமாண்டம் தான் ..
    நடிப்பாற்றல் யாருக்  கிட்டேயிருந்தெல்லாம் வெளிக்கொண்டு வருவாரு பாருங்க!!

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

ஜோதிடத்தின் ஜோதி 1 6 ...திருமண தடங்கல், திருமண தடை இந்த இரண்டும் ஒன்றா? இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

 நான் அறிந்த வரையில் தடங்கல் என்பது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்வை இடையில் நிறுத்துவது. அது பின்னர் தொடரவும் செய்யலாம். கீழே காண்பவை அது போன்ற ரகத்தில், செய்திகளில் வந்தவை.

பாதியில் நின்ற பந்தல் பணிகள் !! மணப்பெண் கிடைக்காததால் திருமணம் ரத்து !!

சேலை கட்ட மறுத்த பெண்..! பாதியில் நின்ற திருமணம்..!

திருமணத்தில் துப்பாக்கியால் சுட்ட மாப்பிள்ளை வீட்டார்...

மணமகளின் மாமா காயம்... பாதியில் நின்ற திருமணம்...

ஆனால் தடை என்பது, அந்த நிகழ்வே நடக்கவிடாமல் செய்வது.கீழே உள்ளது போல...

இப்போது புரிந்திருக்கும் இந்த வித்யாசம்...}}:: இன்னும் கொஞ்சம் விளக்கம் வேண்டுமானால் ...

திருமணத் தடங்கல் என்பது புனர்பூ தோஷம் உள்ளவருக்கு நிகழும வாய்ப்புகள் உண்டு. அதாவது நிச்சயித்த பெண் திருமணத்திற்கு மறுப்பது, ஏதோ காரணத்தினால், அந்த திருமணம் நடக்காமல் போவது, அல்லது அந்த மனப்பந்தலிலேயே வேறொரு பெண்ணை மணமுடிப்பது ஆகியவை இதில சேர்த்தி.

"புனர் பூ" என்று எதையெல்லாம் சொல்வர்?

ஒளி பொருந்திய சந்திரனும் இருள் கிரகமான சனியும் ஏதேனும் ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதால் ஏற்படுவது இது. சனியும் சந்திரனும் ஒரே இராசிக் கட்டத்தில் சேர்ந்து நின்றாலோ, அல்லது சம சப்தமாக பார்த்துக்] கொண்டாலோ, சந்திரன் வீட்டில் சனி அமர்ந்தும் சனியின் வீட்டில் சந்திரன் அமர்ந்தும் அல்லது சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, ஹஸ்தம் திருவோணம் ஆகிய ஏதேனும் ஒன்றில் சனி சாரம் வாங்கியிருந்தும் சனியின் நட்சத்திரங்களான அனுஷம், -பூசம், அனுஷம் உத்திரட்டாதி யில் ஏதேனும் ஒன்றில் சந்திரன் அமர்ந்தாலோ புனர்பூ ஏற்பட்டது என்பர்.

மற்ற கிரகங்கள் எல்லாம் ஒன்றுகொன்று தொடர்பு கொள்ளாமலா இருக்கின்றது..இவை தொடர்பு கொண்டால் மட்டும் என்ன? அது எப்படி திருமணத்திற்கு தடங்கல் ஏற்படுத்துகின்றது ??

சனியை பொதுவாக யாரும் விரும்புவதில்லை என்றாலும் அவனே ஆயுள்காரகன். மற்ற யோகங்கள் இருந்தும் ஆயுள் இல்லையென்று போனால், என்ன பயன்?

அதே சமயம் ஒருவர் வாழ்வின் ஏற்றத்தாழ்விற்கு அவரின் எண்ணங்களே காரணம். அதை ஆளும் மனோகாரகன எனப்படும் சந்திரன் தான்..இவை இரண்டையும் தொடர்பில் இருக்குமாறு ஆனால்?

இரண்டும் முரண்பாடுகளின் உச்சம்...ஒன்று இரண்டரை நாளில் ஒரு இராசியை கடந்து முப்பது நாளில் அனைத்து இராசிக் கட்டங்களை தாண்டி விடுவது. இன்னொன்று சனி, பெயருக்கேற்றது போல மந்தன்... மெதுவாக ஒரு இராசியில் இருந்து மாறவே இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்வது. மொத்தத்தையும் சுற்றி வர முப்பது வருடங்கள் எடுத்துக் கொள்கின்றது..

சூரியனை பித்ரு காரகன் எனபடுவது எல்லோருக்கும் தெரியும். சூரியன் அதே இடத்தில் தான் உள்ளார் என்றாலும் அவர் ஒளி இரவில் பூமிக்கு கிடைப்பதில்லை. அதனால் சனியை இரவு நேரத்தின் பித்ரு காரகன் என்றும் சொல்வர். அதே போலத் தான் பகலில் சந்திரன் தெரிவதில்லை. அதனால் சூரியனுக்கு அருகில் இருக்கும் சுக்கிரன் பகலின் மாத்ருகாருகன். எனப்படுகிறார்.

எனவே இருளின் காரகன் ஆன சனியும் மாத்ருகாரகனாகிய சந்திரனும் தொடர்பு கொள்ளும்போது, உடல் ஓய்வு எடுக்கும் நேரமான இரவில் தான். உடல் தான் ஓய்வு எடுக்கும்..ஆனால் உள்ளமோ?? உணர்ச்சிகள் கொந்தளிக்கும் நேரமான இரவில் இரண்டு ஆற்றல் மிக்க கிரகங்கள் இணைவது தான் "புனர்பூ" இதை பெரும்பாலும் தோஷம் எனப்படுகிறது.

ஆனால் , இது தோஷமா அல்லது யோகமா என்பதை அந்தந்த கிரகங்கள், சம்பந்தப்பட்ட ஜாதகத்தில் என்ன நிலையில் உள்ளன என்பதை பொறுத்து தான் சொல்லவேண்டும்.

குருஜி சொல்லுவது போல, ஜோதிடமே ஒளி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்த தொடர்பை தோஷம் என்கின்ற குற்றம் என்று சொல்பரும் உண்டு. பொதுவாக இரண்டு முரண்பட்ட தன்மை உள்ள கிரகங்களின் ஆளுகையில் உள்ள ஜாதகர் எண்ணத்தினால், , எடுக்கும் தடுமாற்றமான முடிவுகளால் அவர்களுடைய செயல்களில் நிலை இருக்காது இது அவர்கள் குணநலனை பாதிக்கும். . அதனால் இவர்களுக்கு திருமணம் நடப்பதில் தாமதம் ஏற்படும். அப்படியும் திருமணம் நடந்தால், . இரண்டு தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் குழம்பிய குட்டையில் என்ன நடக்கும்? விட்டுக்கொடுக்காமை, ஈகோ மோதல், போன்றவையால் இவர்கள் பிரிந்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பர்

ஆனால் இதை சற்று அறிவியல் பூர்வமாக நோக்கினால், , இந்த 'தோஷம்' எனப்படும் குற்றத்திற்கு ஒளி குறைபாட்டினால் ஏற்படும் நிலையே காரணம் என்பதை உணரலாம். .

ஒளி பொருந்திய சந்திரனின் ஒளி வீச்சை, அருகில் இருந்தோ, அல்லது நேருக்கு நேராக பார்த்தோ பெறுவதால் சனிக்கு பலம் கூடும்.. ஆனால் அதே சமயம் ஒரு பாப கிரகத்திற்கு தொடர்பில் இருந்து தன ஒளியை இழக்கும் சந்திரன் தான் பலத்தை இழப்பார். அதனால் இந்த தொடர்பினால் சனிக்கு தான் பலம் கூடும்.சந்திரனுக்கு குறையும்.

இந்த மாதிரி நிலையில், எந்த கிரகத்திற்கு இது நல்லது? என்பதைக் கொண்டு தான் இது ஜாதகனுக்கு தோஷமா அல்லது யோகமா என்று பார்க்க வேண்டும். குறிப்பாக மகரம், கும்ப லக்கினக் காரர்களுக்கு, லக்கினாதிபதியான சனி வலு பெறுவதும் அவர்கள் அவயோகரான சந்திரன் வலு குறைவதும் நல்லது தானே??.

அதே சமயம், கடக லக்கினகாரர்கலுக்கு லக்கினாதிபதியான சந்திரன் இந்த தொடர்பினால் வலு குறைவது தோஷம். அதாவது குற்றம்.. எனவே இந்த சனி சந்திர இணைவை எல்லோருக்கும் தோஷம் என்று சொல்லிவிட முடியாது.

சரி. நாம் சட்டத்தில் பார்ப்பது போல, விதி என்று ஒன்று ஒன்று இருந்தால் விதிவிலக்கும் இருக்கும் தானே...

அந்த வலு குறைந்த சந்திரனை , இயற்கை சுபரான குரு பார்த்தாலோ அல்லது இந்த நவக்கிரக நாயகனான சூரியன் இந்த சனி சூரியனுக்கு இடையில் நின்றாலோ அதாவது கடகத்தில் சனி இருக்க, மகரத்தில் சந்திரன் இருக்கும்போது, மேஷத்தில் உச்சத்தில் இருக்கும் சூரியன் இந்த தோஷத்தை நீக்கிவிடும்.

அதே போல, சந்திரன் வலு குறைந்தால் மனோபலம் குன்றும் இல்லையா" ஆனால், அதையே, வீரத்தையும், தைரியத்தையும் அருளும் செவ்வாயின் நான்கு, எட்டாம், பார்வை கிட்டினாலோ, இழந்த வலுவை சந்திரன் மீண்டும் பெறலர்

.இந்த மாதிரி அமைப்பில் உள்ள ஜாதகத்தில் 'புனர்பூ' தோஷம் இல்லை எனலாம்.

சில சமயம், திருமணத்தில் ஏற்படும் தடங்கல் என்பது தோஷமா அல்லது யோகமா என்று பார்க்க வேண்டும். நல்ல குணம் இல்லாத வரனை சரியாக விசா ரிக்காமல் நிச்சயம் வரை வந்து, பின்னர் உண்மை தெரிந்து எத்தனை திருமணம் நின்று விடுகின்றன? அதெல்லாம் அந்த வரனுக்கு யோகம் தானே ?!

பொதுவாக திருமணத்திற்கு தடையாக உள்ளது என்று செவ்வாய் தோஷத்தையும், பாவ கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய், ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் இராசியிலும், மற்றும் திருமணத்தை குறிக்கும் ஏழாம் பாவத்திலும், மாங்கல்யம் பற்றி சொல்லும் எட்டாம் பாவத்திலும், குடும்பத்தை பற்றி சொல்லும் இரண்டாம் பாவத்திலும் தொடர்பு கொள்வதால், திருமணத்திற்கு வரன் அமைவதில் தடை, தாமதம் ஏற்படும்.. ஆனால் அதுவே கொல்சாரத்தில் மாறும் நிலை ஏற்படும் பொது அந்த தடை விலகி, ஜாதகர்க்கு திருமணன் நடக்கலாம். ஆனாலும் சில கிரக இணைவு கொண்ட ஜாதகர்களை திருமணம் மூலமாக ஒன்றிணைக்க தடை உள்ளது. இந்த தடை மற்றும் தாமதம் என்பதும் ஒரு விதத்தில் நல்லது தான். ஜாதகருக்கு திருமண தடங்கல் மற்றும் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் மன முதிர்ச்சி, தடை நீங்கப் நடக்கும் திருமண பந்தத்தை நீடிக்க வைத்து,, மணமுறிவில் இருந்து காப்பாற்றுகிறது.

இதே போன்ற திருமணத் தடையை சட்டமும் ஏற்படுத்துகிறது.

இணையக்கூடாத இரத்த சம்பந்தம் உள்ளவர்கள்,மற்றும் ஏற்கெனவே திருமணம் நடந்து அந்த மனைவி அல்லது கணவன் உயிருடன் இருத்தல், போன்றவர்கள் திருமணம் செய்துக் கொள்ள தடை உள்ளது. மீறி திருமணம் செய்தாலும், அது சட்டத்தின் கண்களில் அப்படி ஒரு திருமணம் நடக்காத ஒன்றாகவே பார்க்கப் படுவதில்லை.

ஆனால் ஓ ன்று கவனியுங்கள். ஒரு மதத்தில் தடுக்கப்பட்ட உறவுமுறை, இன்னொரு மதத்தில், அங்கீகரிக்கபடுகிறது. உதாரணத்திற்கு, இஸ்லாம் மதத்தில் அக்காளின் மகளை மணக்க தடை உள்ளது. அதுவே தன அண்ணியின் தங்கை மகளை மணக்க தடை இல்லை. அதனால் நான் அடிக்கடி சொல்வது போல, சட்டங்களும் நீதியும் மாறக்கூடியது, இடத்திற்கு ஏற்றார் போல. ஆனால் தர்மம் என்று நிலைக்க கூடியது .

சனியை தர்ம கர்ம காரகன் என்பர். அதனால் அவரால் தடங்கல் ஏற்படுகிறது என்பது நல்லதுக்கு என்றே கொள்ள வேண்டும். சனிக்கிழமை என்றாலே சிலர் முகத்தை சுளிப்பார். ஆனால் தர்மகர்மவாதியானை சனியின் ஆதிக்கத்தில் தொடங்கும் எந்த காரியத்தையும் நன்றாகவே நடத்தி தருவான் என்பதாலேயே சிலர் அந்த நேரத்தில் தொடங்குவதும் உண்டு.

வாழ்வின் முக்கிய நிகழ்வான திருமண ஏற்பாட்டின்போது, இந்த தோஷம், தடை, தடங்கல் எல்லாம் ஏற்படும்போது என்ன செய்வது? எப்படி அதை நீக்க பெறுவது ?

தேவர்களின் பகல்பொழுது எனப்படும் உத்தராயண காலத்தின் ஆரம்பமான தை மாதத்தில் வரும் , பவுர்ணமி தினத்தில், சிவ அம்சமான சூரியன், சனியின் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் தன்னுடைய கடக ராசியில் சனியின் பூச நட்சத்திரத்தில் ஆட்சி பெற்று இருக்க சூரிய சந்திரர்கள் பூமியின் இருபுறமும் நேர்கோட்டில் இருக்க, அமைந்த தை பூச திருநாளில் , தேவர்களின் சேனாதிபதியும், செவ்வாயின் அதிபதியுமான முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது இந்த தோஷ நிவர்த்திக்கான நல்ல பலனை தரும்.

இந்த நன்னாளில் தான் சிவசக்தி ஐக்கியம் ஏற்பட்டதாகவும், இந்த பிரபஞ்சமே ஸ்ரிஷ்டிக்கப்பட்டு இயக்கம் தொடங்கியது என்றும், பூமியில் உயிர்கள் தோன்றக காரணமானபஞ்ச பூதங்களில் முதலில் தோன்றிய நீர், அடுத்தடுத்து நிலம், நெருப்பு, காற்று ஆகாயம் தோன்றியன என்பதாலேயே அந்த நாள் சிறப்பாக கொண்டப்படுகின்றது.

அது மட்டுமா ? எந்த மனக் கலக்கத்தின் காரணமாக சந்திரன் பங்கம் அடைகிறாரோ அதை சரி செய்யும் ஆற்றல் கொண்ட குரு, பூச நட்சத்திரத்தின் தேவதை. இந்த பூச நட்சத்திரத்தை புஷ்யம் என்றும் சொல்வார்கள். சமஸ்க்ரிதத்தில் புஷ்டி என்றால் பலம். சிறப்பு வாய்ந்த நட்சத்திரங்களில் ஒன்றான இதன் அதிபதியாக மட்டுமல்ல குரு, அறிவுக்கும் அதிபதி. இந்த தை பூசத் தினத்தில் இறைவன் நடராஜ கோலம் கொண்டு பதாஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதர் முனிவருக்கும் காட்சி தந்ததும வாயு பகவானும் வர்ண பக வானும் அக்னி தேவனும் இறைவனின் அதீத சக்தியை உணர்ந்ததும் , இயற்கையை கட்டுப் படுத்தும் ஆற்றல் இறைவனுக்கு உண்டு என்று உணர்ந்ததும அன்றே.

மேலும் 'தொட்டது துலங்கும் நாள்" அன்றே என்பதால் தான், அன்றைய தினம் திருமண பேச்சுகள் அன்று ஆரம்பிக்கும் வழக்கமும் உள்ளது.

"தை பூசத் திருநாளிலே மாமன் பெண் பார்க்க வந்தானடி " பாட்டு நினைவுக்கு வருகிறதா?"

ஜோதிடத்தின் ஜோதி 15...நீங்கள் எப்போது முதன் முறை உங்கள் பெற்றோரை விட்டுப் பிரிந்தீர்கள்?

 அது பள்ளிப்படிக்கும் காலம்..

வீட்டில் எல்லோரும் இரவில் ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக தூங்கி எழுந்து, நாங்கள் எல்லாம் பள்ளிக்கு ஓட, அப்பாவும் அம்மாவும் நடத்தும் தொழில் நிறுவனத்துக்கு செல்ல தயாராக என்று வீடே அமளியாக இருக்கும்.

அந்த சமயம் தான் 1983 ல் மகிழ்ச்சிக்கு மகுடம் போல வந்தது அக்காவின் திருமணம்..அக்கா வீட்டில் எல்லோருக்கும் மூத்தவள்.வீட்டில் நடக்கும் முதல் விசேஷம்.அம்மாவுக்கு பிடித்து போய் நிச்சயம் செய்த மாப்பிள்ளை..அப்பாவுக்கு பிடிக்கவில்லை எண்றாலும் மறுக்கவில்லை..

ஆனால் அந்த சம்பந்தத்தால் வீட்டில் நிம்மதி தான் போனது..அக்காவின் மாமனார் எப்போது வீட்டிற்குள் நுழைந்து, சத்தம் போடுவார் என்றே தெரியாது..அப்பாவிற்கு ஏகப்பட்ட மனஉளைச்சலோடு உடல்நலம் சீர்கேட ஆரம்பித்தது ..

கடை வாடகைக்கு விட்டது வழக்கில் போய் நின்றது..

எல்லாவிதத்திலும் தொல்லை.. மருத்துவமனையில் அட்மிட் ஆனால் நாங்கள் பயந்து போவோம் என்று அப்பா எங்களிடம் கூட சொல்லாமல் வெறும் வெளி நோயாளி சிகிச்சை மட்டுமே எடுத்திருக்கிறார். சரியான தூக்கம், ஆகாரம் நேரத்திற்கு எடுத்துக்கொள்ளாது விட்டது, அதிக பின்விளைவு கொண்ட மருந்துகளை கண்மூடித்தனமாக மருத்துவர் பரிந்துரை செய்து, அதை உண்டு அல்சர் ..குணப்படுத்த முடியாமல் சீரியசாக மருத்துவமனையில் 1985 டிசம்பரில் சேர்க்கப்பட்டு, 16 ந் தேதி இறந்தார்.

அது தான் நான் என் அப்பாவை பிரிந்த முதலும் கடைசியுமான தருணம்.

இப்போது ஜாதகத்தை கொண்டு கணக்கு போட்டு பார்க்கும்போது,  சனி சுக்கிரன் சேர்க்கை.. .தந்தைக்கு ஆபத்து..

முதலிலேயே கட்டியம் கூறிவிடுகிறது.

சரியாக சுக்கிர தசை ஆரம்பித்து ஜூலை 1983ல் சூரியன் புக்தி தொடங்கும்போது, அதற்கான மேலே சொன்ன ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கிறது..

அடுத்து 1984ல் ஜூலையில் தொடங்கிய சந்திர புக்தி, மார்ச் 1986ல் முடியும் போது தந்தை உடன் இல்லை…

இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த இரவில், மொட்டை மாடியில் வீசும் காற்று கூட சுகம் தரவில்லை..கண் முன்னர் தெரியும் சந்திரனை பார்க்கும்போது..

சரியாக சுக்கிரன் தசை, சந்திரன் புக்தியில், சுக்கிரன் அந்தரம் சந்திரன் சூட்சமத்தில், சரியாக பிராண அந்திரமாக சூரியன் இருந்த சில மணித்துளிகளில், டிசம்பர் 16ல் காலமானார்.

படம்..என் கைப்பேசி

கையறும் நிலையில் பாரியின் மகள் பாடிய பாட்டு தானே உடன் நினைவுக்கு வருகிறது!

"அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்,

எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;

இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்,

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

ஆண்டாண்டு அழுது புலம்பினாலும், மாண்டார் திரும்பி வரப்போவதில்லை தான்!!

என் தகப்பனை பறித்ததற்கு மாதாகாரனாகிய இந்த சந்திரனே துணை போயிற்றே என்று தோன்றினாலும், எல்லாமே இங்கு ஒரு நியதிப்படி தான் இயங்குகிறது..

சனி தன்னுடன் இணைந்திருந்த தன் நட்பு கிரகம் சுக்கிரனின் தசையில், சரியாக சூரியன் புக்தியில் தந்தையின் உடல் சீர்கேட வைத்து, அடுத்து வந்த சந்திர புக்தியில், தந்தைக்கு காரகத்துவமான சூரியனின் பிராண அந்திர காலத்தில் என் தகப்பனை பிரித்து விட்டார்..

"குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும்" என்றார்களே அது இது தானா!!

ஜோதிடம் எப்படியொரு சூட்சமமான ரகசியத்தை உள்ளடக்கியிருக்கிறது. ஜாதகத்தை ஒன்பது, அதற்குள் ஒன்பது, அதுற்குள்ளும் ஒன்பது என்று போய்க்கொண்டே இருக்கும் போது, இதுவரை நம் வாழ்வில் நடந்த எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு, அது அதன் காலத்தில், நமக்கு இயல்பாக நடப்பது போல நடந்தேறுகிறது.என்பதை உணர முடிகிறது..

"சுக்கிர தசை எல்லோருக்கும் கொட்டிக் கொடுக்கும் என்பார்களே, உனக்கு ஒன்றும் செய்யவில்லையா? என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது..

"சுக்கிரனை போல கொடுப்பவரும் இல்லை..சுக்கிரனை போல கெடுப்பாரும் இல்லை"ன்னு சொல்லக் கேள்வி என்று சொல்லமாட்டேன். .அனுபவத்தில் உணர்தே விட்டேன் என்றும் சொல்லலாம்.

எந்த சுக்கிர தசை தன் ஆரம்பித்த காலத்தில், என் அப்பாவை என்னிடம் இருந்து பிரித்ததோ, அதே தசை, தன் இறுதி நிலையில், ஞானத்தை கொடுக்கும் கேதுவின் புக்தியில், யாருக்காக பறித்ததோ அதே சனியின் பிராண அந்தரத்தில் என்னை நிலையாக உட்காரவைத்தது…

"சுக்கிரன் கெடுத்து கொடுப்பார்" என்பதும் இதுதானோ!

புதன், 25 ஆகஸ்ட், 2021

ஜோதிடத்தின் ஜோதி 14...அக்கா கடகம் ராசி தம்பி மகரம் ராசி அக்கா கணவர் மகரம் ராசி தம்பி மனைவி கடகம் ராசி, இப்படி ராசி திருமணம் செய்வதன் நன்மை தீமை ஜோதிடத்தில் என்ன கூற முடியும்?

 அக்கா தம்பி பாசத்தை பற்றி நிறைய சொல்லலாம்.ஆனால் அக்காவுக்கு திருமணம் ஆனவுடன் தம்பிக்கும் அக்காவிற்கும் இடையில் வந்து நிற்பார் அக்காள் கணவர்.!!

இல்லையெண்றாலும் தம்பிக்கு வாய்த்தவள், இரண்டு பேரையும் சேர விடமாட்டாள..☺️

ஆனால் இங்கே நிலைமையே தலைகீழ. ..அக்காவிற்கும் தம்பி மனைவிக்கும் ஒரே இராசி .

ஜாதகத்தில், லக்கினம் தான் முதன்மைஎனது..ஒருவரின் குணம் லக்கினத்தையும், அதன் அதிபதியை பொறுத்தே இருக்கும் என்றாலும், இரண்டு பாதிகள் என்று இலக்கினத்தையும் இராசியையும் சொல்லலாம்..அதனால் ஒரு பாதியான இராசியின் தன்மை கொண்டும் ஒருவர் குணம் அறியலாம்.

கடகத்தின் அதிபதி சந்திரன் என்றால் மகரத்தின் அதிபதி சனி. இரண்டுக்கும் ஜென்ம பகை.

அதுவும் சந்திரன் எவ்வளவு ஒளி பொருந்தியது..மற்ற கிரகங்களுக்கு கூட தன் ஒளியை பிரதிபலித்து சுபத்துவப்படுத்தக்கூடியது..அதை "மாதாகாரகன்" என்று தாய்க்கு ஈடாக சொல்வர். அப்பேர்ப்பட்ட சந்திரனையே மறைத்து விடக்கூடியது இருள் கிரகமாகிய சனி!!

ஒளியின் முன்னால் இருள் தொலையும் என்றாலும் ஆழமான இருட்டின் உள்ளே ஒளி அமிழ்ந்து போகும்..

அது மட்டுமா தன்னை சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வர சந்திரனுக்கு இரண்டேகால் நாட்கள் தான் ஆகும்..ஆனால் சனிக்கு ஒரு சுற்று முடிக்க 30 வருடங்கள்…எவ்ளோ மெ..து..வா..ய..

இரண்டு கிரகங்களின் காரகத்துவங்கள் முற்றிலும் முரணானது..

அதனால் தானோ என்னவோ எதிர் எதிர் நிலைகள் கொண்ட சந்திரனும் சனியும் ஜென்ம பகைவர்கள்!

இத்தனைக்கும் சனியை சூரியனின் பிள்ளை என்பர்..சனி சந்திரணுக்கு மட்டுமல்ல சூரியனுக்கும் ஜென்ம பகை..பெற்றோருக்கு ஆகாத பிள்ளை!!

இந்த ஏழாம் பொருத்தம் கொண்ட சனி சந்திரன். குணத்தை தன் இயல்பாக கொண்ட கணவன் மனைவி எப்படி பொருந்துவர்??

சனியின் இருள் காரகத்துவமும் ஒளி பொருந்திய சந்திரனும் சேர்ந்தால்..

பிளாக் அண்ட் ஒயிட் டிவி போல அல்லவா இருக்கும்..

மேலே உள்ளது ஒரு வித்தியாசமான ஜோடி. (ஒரு மாறுதலுக்கு)

வரனின் உத்யோகம், சம்பளம், சொத்து, அழகு, பிக்கல் பிடுங்கள் உள்ளதான்னு பத்து பொருத்தம் பார்ப்பவர்கள், இரண்டு பேரின் குணங்களும் ஒத்துப்போகுமானு பார்ப்பதில்லை..

திருமணமானால் சரியாகிவிடும் என்றோ, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும் என்பது தான் இருவருக்கும் சொல்லிக்கொடுக்கப்படுகிரது.

ஆனால் யார் முதலில் விட்டுக்கொடுப்பது என்ற ஈகோவினாவினாலேயே, சின்ன சின்ன விஷயங்களில் தொடங்கி "மன" முறிவு ஏற்பட்டு, நீதிமன்றத்தில் "மண" முறிவு கேட்கும் நிலைக்கு போகின்றணர் ..

2020 வருட புள்ளிவிவரப்படி, இந்தியாவில், நூற்றுக்கு ஒரு திருமணம் விவகாரத்தில் போய் முடிகிறதாம்..

அதுவும் இந்தியாவில், மும்பை தான் ஒரு நாளைக்கு சுமார் 25 விவாகரத்து மனுக்கள் நீதிமண்றத்தில் தாக்கல் செய்து முன்னணியில் இருக்கிரது..

"Happily Maried" என்பது போய் இப்போதெல்லாம் "happily divorced" என்று சிரித்துக்கொண்டே சொல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது!

ஜாதகப் பொருத்தம் பார்க்கும் சில ஜோசியர்கள்கள், வரனுக்கு இரண்டாம் திருமணம் செய்யும் தோஷம்(யோகம்) இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்துள்ளனர்!!

இப்படிப்பட்ட நிலையில், இந்த சந்திரணை இராசியதிபதியாக கொண்ட கடக இராசிக்காரர் ஆக அக்காவும் தம்பி மனைவியும் ஒத்து இருப்பதால் அதன் குணத்தை அப்படியே பிரதிபலித்து தாய் ஸ்தானத்தில் நின்று, குடும்பத்தை பிரிக்காமல் காப்பாற்றுவார்கள்.

ஆனால் இதற்கு நேரெதிர் குணம் கொண்ட சனியை அதிபதியாக கொண்ட மகர இராசிகாரர்களான அக்காவின் கணவரும் தம்பியும், தங்கள் மனைவியிடம் பிளவுபட்டு நிற்பார்கள்…

பாவம் அவர்கள் எனன செய்வார்கள். அவர்களை "ஆட்டிவைத்தால், யாரொருவர் ஆடாதாரோ கண்ணா.."!!

சனி என்ன செய்யும்?

.நமக்கு ஆகாததை செய்யும்.கடன், நோய், வம்பு, வழக்கு என்று நமக்கு ஏதெல்லாம் வேண்டாம் என்று மறுக்கிறோமோ, அதை "இந்தா புடி" என்று வம்படியாய் கொடுப்பவர்..

நல்லவனை கூட எதிர்த்து நிற்கலாம்..ஒரு பாபத்துவம் கொண்டவனை எதிர்க்க எல்லோரும் பயப்படுவர்.

பாம்பிலேயே கொடிய நஞ்சு கொண்டதற்கு நல்ல பாம்பு என்பார்களே அதுபோல முழு பாபரான சனிக்கு "ஈஸ்வர பட்டம்" கூட..!!

ஆனால் இல்லத்தரசிகள் ஒத்த குணம் கொண்டு இருப்பதால், அவர்களின் பருப்பு வேகாது 😁 ..வீட்டில் மனவருத்தங்கள் அவ்வப்போது வந்தாலும், நீங்கி விடும்..

ஆனாலும் இவர்களை ஆளும் சந்திரன் மட்டும் என்ன சுபத்துவமானதா.? அப்படியும் சொல்ல முடியாது. பவுர்ணமியை நோக்கி போகும் சந்திரன் சுபத்துவம் கொண்டவன் என்றால், அதுவே தேய்பிறையாக அமாவாசை நெருங்கும்போதும், அமாவாசையன்றும் அசுபர்..

அதனால் ஆண்கள் இருவரும், பெண்கள் இருவரையும் பார்த்து ஹேண்டில் செய்ய வேண்டும்🤣

அப்படியானால் இரண்டு பக்கமும் பிரச்சினையாகவே இருக்குமா?

பொதுவாக சனி சந்திரன் இணைவு நல்லது அல்ல தான்…

இது போன்ற சனி_ சந்திர சேர்க்கையை "புனர்பூ தோஷம்" என்கிறார்கள்..

ஆனாலும் அந்த தோஷம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், கீழே சொன்ன வழிமுறைகள் கடைப்பிடித்தால் ஆகாது!!

  • சந்திரன் பிரகாசமாய் பவுர்ணமி நோக்கி போய்க் கொண்டு இருந்தால்…

புரியலையா..

மனைவிமார்கள் முகம் பிரகாசமாய் இருக்குமாறு செய்தல் 🤣

  • நல்ல இடைவெளி விட்டு இருக்கவும்.அதாவது 15 டிகிரீயாவது..ஆமாங்க சோசியல் டிஸ்டன்ஸ் தான்.. மனசுக்கும் நல்லது..உடம்புக்கும்.🤣.
  • அடிக்கடி சுபத்துவம் கொண்ட சுக்கிரன், குருவின் பார்வை படுவது போல இருக்கவும்..வேறு யார் இரண்டு.. இல்லை, மூன்று தரப்பு அப்பா அம்மாக்கள் தான்!!!

ஆனாலும் சனி போன்ற இருள் கிரகத்திற்கு ஒளி பொருந்திய சந்திரன் அருகிலோ பார்வையிலோ இருந்தால், அதன் ஒளியை இது பெற்று, வலு அடைகிறது..

அப்போது சனிக்கு இந்த இணைவு "யோகம்" தானே..

அதனால் தான் "மதி போல மனைவி"ன்னு சொல்றாங்க..

மதியிலாச்சோ..😀😃

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

ஜோதிடத்தின் ஜோதி 13 ...நீங்கள் எப்போதாவது உங்களை ஓர் கதாநாயகன் போன்று நினைத்துள்ளீர்களா?

 நாம் எல்லோரும் கதாநாயகர்கள் தானே !!

"உலகமே ஒரு நாடக மேடை..அதில் நாம் அனைவரும் நடிகர்கள் தானே. அதை கொண்டு நான் சொல்கிறேன்" என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.  

அதுவும் வெள்ளித்திரையில் நாம்  காண்பவர்கள்,   கதாநாயகர்களாக நடிப்பவர்கள்..

ஆனால் நாம் யாரும் நடிப்பதில்லை.. ஆனாலும்  நாம் ஒவ்வொருவரும்  கதாநாயகர்கள்/கதாநாயகிகள் தான் ..

என்ன சொல்கிறேன் என்று குழப்பமாக இருக்கிறதா??

மறந்து விட்டீர்களா என்ன ?..

நாமெல்லாம் பிறக்கும் முன்னரே நம் தாயின் கருப்பையில் நுழைய நடந்த அந்த ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்து வந்தவர்கள் தானே...

ஒரே அச்சில் ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால், நம்முடைய தோற்றம் மட்டுமல்லாமல், நிறம், குணம், சுவை அனைத்தும் ஒன்றாய் ஒருவர் கூட இருக்க முடியாது...நம்முடைய கைரேகையை போல வேறு ஒருவருக்கு இருக்க வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பில்லை}::

அது மட்டுமா ...

நாம் பிறக்கும் சமயம், விண்வெளியில் அந்த தருணத்தில் இருந்த கோள்கள் நட்சத்திரங்கள் அதே நிலையில் மீண்டும் வர பலலாயிரக்கனக்கான் கோடி வருடங்கள்  ஆகும் என்கின்றனர் வானவியலாளர்கள்.  

இருக்கும் தான்...

 நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போகும் பிரபஞ்சத்தின்  நாயகனான சூரியன் சுற்றும் வேகமோ மணிக்கு  8,28,000 கி. மீ தலைதெறிக்கும் வேகத்துடன் சுற்றிககொண்டிருக்கும்  சூரியனைய சுற்றி வந்து கொண்டிருக்கும் கோள்கலுள் நம் பூமி  ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட 1000 மைல், அதாவது சுமார் 1674 கி.மீ எனும் வேகத்தில் சுழல்கிறது. இது ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகம். பூமியோடு சேர்ந்து நாமும் மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று கொண்டுதான் இருக்கிறோம்.  

இந்த வேக சுழற்சியில் நேற்று இருந்த நிலையிலா இன்று அனைத்தும் இருக்கும்? 

 

ஒரு நாளையில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை லக்கினம் மாறுகிறது. சூரியனின் கிழக்கு திசையில் நாம் பிறக்கும் நேரத்தில் தோன்றும் இராசியே நம் லக்கினமாகிறது.  தான்  ஒரு இராசியிலிருந்து மாற இரண்டரை நாட்கள் எடுத்துக்கொள்ளும் சந்திரன் நாம் பிறக்கும் நேரத்தில் இருக்கும் நிலையே நம் இராசியாகிறது. . 

அப்படியோர் கூட்டணி பின்னர் அதே போல அமைய பல கோடி வருடங்கள் ஆகுமாம். அந்த கிரகங்களின் இணைவு, பார்வை ஆகியவற்றின் கூட்டுக்கலவையாக தான்  நம் தோற்றம், குணம், வாழ்வு எல்லாம் அமைகிறது.. 

இட்லியை சட்னியுடன் சேர்த்து சாபிட்டால் ஏற்படும் சுவை வேறு..சாம்பாருடன் சேர்க்கும் போது உள்ள சுவை வேறு.

என்னை போன்ற சிலர், சட்னியும் சாம்பாரும் சேர்த்து இட்லியுடன் சேருங்கள் என்போம். 

சிலருக்கு இட்லியுடன் கறிக்குழம்பு தான் சரியான இணை என்பர். 

இன்னும் சிலர்  குழந்தை மாதிரி. சர்க்கரையை தொட்டு சாப்பிட பிடிக்கும் என்பார்கள்.

இட்லி ஒன்று தான்..ஆனால் அது சேரும் இடத்திற்கேற்ப சுவை மாறுகிறது. 

அது போலத் தான் ஜாதகத்தில்  கிரகங்கள் இருக்கும் இராசி, அதனுடன் இணையும் மற்ற கிரகங்கள், அவற்றை பார்க்கும் மற்ற கிரகங்கள் அவற்றின் பகை, நட்பு, பலம், பலவீனம் போன்றவற்றை பொறுத்தே  பிறக்கும் நபரின் குணம், தோற்றம் எல்லாம் அமையும். 

சிலர்,  ஒரு இராசி அல்லது நட்சத்திரத்தை சொல்லி இந்த இராசிக்காரர்களின் குணம் எப்படி என்று கேட்கும் வினாவை பார்க்கிறேன்.  அப்படி தனித்து சொல்லமுடியாது என்பதற்காக மேலே சொன்ன உதாரணம்!!

அதனால் தான்,  அந்த குறிப்பிட்ட நேரம் மற்றும் இடத்தில் பிறந்த நம்மின் ஒத்த ஜாதகம் கொண்ட இன்னொருவர் இந்த புவியில் இன்னொருமுறை பிறக்க இயலாது   என்னும்போது நாம் தனித்தன்மை வாய்த்தவர் தானே....

இப்போது சொல்லுங்கள்,  தனித்தன்மை கொண்ட நாம் எல்லோரும் அவரவர் வரையில் கதா நாயகர்கள் தான்..


.
அதனால் எப்போதாவது என்ன..எப்போதுமே நாம் ஒவ்வொருவரும் கதாநாயகர்கள்/கதாநாயகிகள் தான்.


திங்கள், 16 ஆகஸ்ட், 2021

ஜோதிடத்தின் ஜோதி 12...திருமணத்திற்கு முன் ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும்?

 "காதலொருவனை கை பிடித்து" என்று காதல் மணம் புரிபவருக்கு ஜாதகம் தேவையில்லாமல் போகலாம். ஆனால் முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை நம் வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக்கொள்வதற்கு??

தாய், தந்தை, சகோதர சகோதரிகள் போன்ற இரத்த சம்பந்த உறவுகள் நாம் முன்கூட்டியே திட்டமிடாமல் நமக்கு அமைபவை. ஆனால் திருமணத்தின் மூலம் ஏற்படும் உறவுதான் நாமே ஏற்படுத்திக்கொள்வது. அது தான் நம் இரத்த சம்பந்த உறவுகளான பிள்ளைகளை தரக்கூடியது. இருப்பதிலேயே அழுத்தமான உறவு அது... அதனால் நமக்கு ஒத்துப்போகும் வகையில் இருக்கும் நபராக அவர் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமே ...

அப்படியென்ன ஜாதகம் சொல்லிவிடும் என்பவர்கள் பாவம் ..அந்த தேவ ரகசியம் பற்றி அறியும் அனுமதியை பரம்பொருள் தரவில்லை என்றே சொல்லலாம்.

நாம் யார் என்பதை நம் முகக்குறிப்பில் , உடல் மொழியில் மறைத்து வெளிப்படுத்தாமல் மறைக்கலாம். ஆனால் நம் ஜாதகம் நம் வாழ்க்கையின் அத்தனை ரகசியத்தையும் போட்டு உடைத்து விடும்....

அதனால் தான் "உன் ஜாதகமே என் கையில் இருக்கு" என்ற பேச்சு வழக்கு கூட வந்தது!௧

 இந்த காரநத்தினால் தான் பிரபலமானவர்கள் தங்கள் ஜாதகத்தை வெளியிடாமல் காத்துக்கொள்வர்... இல்லையென்றாலும் அவர்களுடையது என்று சொல்லி, இணையத்தில் நான்கைந்து விரவி கிடக்கும், பிரதமர் நரேந்திர மோடியினுடையது போல...


"நான் யார்? " என்ற கேள்வியை முன்வைத்தே அந்த தேடலில் ஆன்மிகத்தின் முதல் படி தொடங்குகிறது...

ஆனால் அந்த கேள்விக்கான பதிலை ஒவ்வொருவருடைய ஜாதகமும் அவருக்கு சொல்லிவிடும்...!!

இதோ முதல் பாவமான லக்கினம் நம் குண நலன்கள் என்ன என்று சொல்லிவிடும்போது, இரண்டாம் பாவம் நம் குடும்பம், தனம், நம் வாக்கு சுத்தம் எல்லாவற்றையும் கோடு போட்டு இல்லை... ரோடு போட்டே காட்டும்.!!

அது மட்டுமா... ஏழாம் பாவமும் எட்டாம் பாவமும. நமக்கு வர இருக்கும் வாழ்க்கை துனையை பற்றி சொல்லக்கூடியவை.

இந்த இடங்களில் செவ்வாய் என்னும்  கிரகம் இருந்தால் அதை செவ்வாய் தோஷம் என்று ஒதுக்கும் நிலையும் உள்ளது.

செவ்வாயின் குண நலன் என்ன? ஒரு ஷத்ரிய அரசனுக்கு இருக்கும் வீரம், தீரம், கோபம், போன்றவை செவ்வாயின் குண நலன்கள். இந்த குனநலன் உள்ள பெண், "கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருஷன்" என்று இருக்க மாட்டாள் தானே!! 

இன்றைய சமுதாயத்திற்கு, ஏற்றவளாக ஒரு பெண் இருக்கவேண்டும் என்றால் இது போல, வீறு கொண்டவளாக இருக்கவேண்டியதும் அவசியம் தான் ...அதுவும் அவள் வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்துவிட்டால்... இந்த குணங்கள் அவளிடம் ஒரு கால்வாசியாவது இல்லையென்றால் அவ்வளவு தான்...

ஆனால் செவ்வாய் ஒரு பாப கிரகம் ஆச்சே...முழு பாபர் இல்லையென்றாலும் முக்கால் பாபர்...அதனால் அவர் சுப தொடர்புகளான {அப்பா, அம்மா, சகோதர, சகோதரி ??!!) உடன் இருந்தாலோ பார்த்துக்கொண்டிருந்தாலும் சூட்சும வலு ( அது தான் படிப்பு, வேலை, நகை, சீர்) போன்றவற்றுடன் இருந்தால் யோகம் தான்...எந்த கெடுதலும் இல்லை!!

ஆனால் அப்படி எதுவும் இல்லையென்றால் கேடு பலன்தான்...

{அது யார் மூலம் வரும் என்று நான் சொல்ல தேவையில்லை}வண்டி தாறுமாறாக ஓடத்துவங்கும். நேரே காவல் நிலையத்திலோ அல்லது குடும்ப நல நீதிமன்றத்தில் போய் நிறுத்தி வைக்கும்...

இதில் ஒரு சிக்கல் உண்டு....இந்த வீர தீர பெண்ணுக்கு, ஒரு அம்மாஞ்சியான கணவனும், அல்லது அப்படியே மாற்றி கிடைத்து விட்டால் பரவாயில்லை..

அதுவே வரும் வாழ்க்கை துணையும் அதே போன்ற குணத்துடன் இருந்தாலும் சரி தான்....

நாமே பார்த்திருப்போம். சில கணவன் மனைவி பயங்கரமாக சொற்களால் தாக்கிக்\ கொள்வர். ஆனால் அன்று மாலையே ராசியாகி பேசிக்கொள்வதை பார்த்தால், இவர்களா காலையில் அப்படி சண்டை போட்டது என்று நினைக்க தோன்றும். அதற்கு காரணம் இரண்டு பேரின் ஜாதகத்திலும் உள்ள அந்த பாவத்தின் தொடர்புள்ள கிரகங்கள் சம சப்தமாக இருக்கும்.

அதாவது இது போன்ற செவ்வாய் தோஷத்தில் உள்ளவருக்கு அதே போன்ற பாவத்தில் சனி இருக்கும் ஜாதகியை திருமணம் செய்து வைக்கலாம். ஜோடி பொருத்தம் சரியாக இருக்கும்...

இப்படி இரட்டை மாட்டு வண்டியில் பூட்டிய மாடுகள் சரியான இணையாக இருந்தாலே, வாழ்க்கை வண்டி சரியாக பயணிக்கும்!!

இரண்டாம் பாவம குடும்பத்தை பற்றி மட்டுமா சொல்கிறது? அவள் எவ்வளவு கொண்டு வருவாள் என்று பார்க்கவும் முடியுமே.....]];;

நமக்கு யோக ஜாதகம் இல்லையென்றால், வருபவருக்காவது இருக்கிறதா என்று பார்க்கலாம். நிறைய வீடுகளில் பெண் கொண்டு வரும் தனத்தால் தானே வண்டியே ஓடுகிறது!!

அந்த யோகம் எத்தனை காலம் நமக்கு கிடைக்கும் என்பதை தான் எட்டாம் பாவம் காட்டுகிறது!!

இப்படி கூட்டிக் கழித்து கணக்கு போட்டு சேர்த்தாலும், சேர்ந்துக் கொண்டாலும், இன்னின்னாருக்கு இன்னினார் தான் என்று ஏற்கெனவே போட்ட பிரம்ம முடிச்சு தான் அது!!

என்ன...நாமே அதை கண்டுபிடித்தார் போல பெருமை பட்டுக்கொள்ளலாம்!!

ஜோதிடம் என்பது இந்த பிரபஞ்ச ரகசியத்தின் ஒரு சிறு துளி மட்டுமே...

மேடு பள்ளமான, ஏற்ற தாழ்வு நிறைந்த வாழ்க்கை பயணத்தில் உடன் சேர்ந்து பயணிக்க போகும் சக பயணியை , நண்பனை அல்லது தோழியை, வாழ்க்கையை பங்கு போட்டுக்கொள்ளும் பங்குதாரரை அடையாளம் காட்டும் அற்புதம் அது....

"நீ என்ன நினைகிறாயோ அதையே அடைவாய்" என்பது பிரபஞ்ச ரகசியம்...

நம் எண்ணத்திற்கேற்ற வண்ணமே நமக்கு அனைத்து,ம கிட்டும்..வாழ்க்கை துணை உட்பட....

அவரை எப்படி நடத்தவேண்டும் என்றும் ஜாதகம் சூட்சமாக நமக்கு உணர்த்துகிறது.....அந்த ஏழாம் பாவத்தின் மூலம்...

ஒரு நண்பனாக, வாழ்க்கை பங்குதாரராக இனிய துணையாக....

நம்மை மற்றவர் எப்படி நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ , அது போலவே அவரை நாம் நடத்தினால்...

தெள்ளிய நீரோடை போல சுகமாக ஓடும் நதியாகும் வாழ்வு!!

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

ஜோதிடத்தின் ஜோதி 11....ஒரே நேரத்தில் ஒருவர் அறிவியலையும் மதத்தையும் எவ்வாறு நம்ப முடியும்?

 நாள்தோறும்  எத்தனையோ மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை  கண்டு பிடித்துக்கொண்டே தான் உள்ளார்கள்.  ஆனாலும் அவர்களால  அவிழ்க்க முடியாத முடிச்சுகள், புரியாத புதிர்கள் எத்தனையோ உண்டு. 

 ஏன்  இந்த கொரானா நோய் தொற்றுக கிருமிகள் தான் ஒவ்வொரு விதமான அலைகளாக படையெடுத்து வந்துக் கொண்டிருக்கவில்லையா? இன்றுI வரை அதந பிண்ணனி  அறியமுடியாமல் தான் திணறி வருகிறோம்..




இதோ இன்று வானவெளியின் விளிம்பிற்கு போய்விட்டு திரும்பி வருகிறோம். இருந்தாலும், அதை முழுதாக அறிந்து விட்டோமா என்றால் எதிர்மறையாக தான் சொல்லவேண்டும்.  நாளுக்கு நாள் விரிந்து கொண்டே போகும் பிரபஞ்சம் எங்கு போய் முடியும்?
தெரியாது... இது எங்கிருந்து எப்படி ஆரம்பித்தது ? அதுவும் தெரியாது.  

இருக்கிறது  ஆனால்  இல்லை.. என்று  'வெங்காயத்தை' சொல்வார்களே அது போல தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் இருப்பது தானே இந்த பிரபஞ்சம்.  இந்த பிரம்பஞ்சம என்னும் அண்டவெளி  ஒன்றுமில்லாதது என்றும் கொள்ளலாம்.  அனைத்தும் உள்ளது என்றும் கொள்ளலாம்.  

அதன் கணக்கை அறிந்துக கொள்ளும் விதமாக தான் நாம் பார்க்கும் இந்த வானவெளியை 360 டிகிரியாக கொண்ட ஒரு நீள் வட்டப் பாதையாகவும்,  சூரிய சந்திரர்களை மையமாகக் கொண்ட, 
30 டிகிரி கொண்ட பன்னிரண்டு ராசிக்கட்டங்களாக பிரித்து, அதில் ஒவ்வொரு கிரகத்திற்கும் குறிப்பிட்ட காலவெளியில் உள்ள ஆதிக்கத்தை உணர்ந்து, அந்த காலத்திற்குண்டான  இரண்டு ராசிக்கட்டங்களை அதற்கு ஒதுக்கி,  அவர்களின் ஆளுகைக்கு கீழே அந்த ராசிக கட்டங்களும்  27 நட்சத்திர கூட்டங்களும்  உள்ளதை உறுதி செய்து, காலத்தை ஐந்து அங்கங்களாக தினம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம்  என பிரித்து பஞ்சாங்கம் தயாரித்து, இந்த கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அந்த கால வெளியில் செலுத்தும் ஆதிக்கத்தை கணித்து, அவற்றின்  நல்ல தீய பலன்களை குறித்து வைத்து, அதனால் மனிதனுக்கு ஏற்படும் தீய பலன்களை முன்கூட்டியே அறிந்து  அதை கணித்து சொன்ன கலை அல்லவா இந்த ஜோதிடக் கலை ?

இத்தனை ஒழுங்கோடு இந்த பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு இருப்பதன் காரணமே ஒரு மகா சக்தி என்றும் அந்த பிரம்மமே இறைவன் என்றும், உருவமற்ற அதை  பாமரனும் புரிந்துக  கொள்ளும் பொருட்டு அதற்கு ஒரு உருவமும் இட்டனர். அன்றைய வேத கால ரிஷிகள் கணித்துக கொடுத்த இந்த பஞ்சாகம், மற்றும் ஜோதிட நுணுக்கங்ளின் அஸ்திவாரத்தில் தானே இன்றைய நவீன அறிவியலே இருக்கிறது...
 
வேதஜோதிடம் என்பது ஒரு மகா சூட்சுமமான அமைப்பு. ஒரு மனிதனின் எதிர்காலத்தை நாம் அத்தனை  சுலபமாக தெரிந்து கொள்ள முடியாது. அப்படி முடியும் என்றால், பிண்டத்தில் உள்ளது தானே அண்டத்தில் உள்ளது என்று பிரபஞ்சம் எப்போது, எப்படித் தோன்றியது என்ற உண்மையை என்றைக்கோ கண்டு பிடித்திருக்க முடியும்.  

நம் மனித மனிதை மூளையின் கணிப்பிற்கும் அப்பாற்பட்டும் கணிக்க முடியாதவற்றிற்கு விஞ்ஞானிகளே ஒத்துக கொண்டது தான்...
  நமக்கு மேற்பட்ட சக்தி ஒன்று,  இந்த பிரபஞ்சம் முழுதும் வியாபித்திருக்கிறது . என்றும நம்மை அது தான் ஆட்கொள்ளுகிறது என்றும்.... 

நம்மை  மிஞ்சிய சக்தி உள்ளது என்பதை தான் அத்தனை மதங்களும் சொல்கின்றன. 

ஒரு மதம் அனைத்தும் அந்த கடவுளே...அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்  என்கிறது... ,இன்னொரு மதமோ அந்த சக்தி சூனியமானது என்கிறது...அதாவது ஒன்றும் இல்லாதது என்கிறது...அதாவது அருவமும் உருவமும் இல்லாதது என்கிறது..

உண்மை தானே ...

நேற்று இருந்த நான் இன்று இல்லை .....நேற்றைய எண்ணஅலைகள் செயல்கள் இன்று  இருக்காது...  எனக்குள் ஒரு மாற்றம் நிச்சயம்இருக்கும்.   அந்த  செயல்களும்  எத்தனை உண்மையோ அத்தனை உண்மையானது தானே இந்த பிரபஞ்சமும்?

தன்னைத்  தானே சுற்றி கொண்டும்,  இந்த வானவெளியின் நாயகனான சூரியனை மையமாக கொண்டு சுற்றி வரும் கோள்கள்,  நேற்று இருந்த இடத்திலா இன்று உள்ளன?  

"எல்லாம் மாறிக கொண்டே வரும்போது, 
எது தான் நிரந்தரம்....?  எதுவும் இல்லை... எல்லாம் மாறக்கூடியது..யாரும் நிலையற்றவர்கள் இல்லை.  எல்லாம் அழியக்கூடியது. "

 |நமக்குள் இருக்கும் உயிர் என்னும் மூச்சு காற்று, நீர், மண், வெற்றிடம், உள்ளுக்குள் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பை போன்ற அமிலம்....எல்லாம்  இந்த வானவெளியிலிருந்து வந்ததது.   இந்த பஞ்ச பூதங்கள் உடலை விட்டு நீங்குவதை நாம் 'இறப்பு' என்கிறோம்.  ஆனால் அந்த ஆன்மாவிற்கு அழிவில்லை. அது இன்னொரு கூட்டிற்குள் போய் ஒடுங்குகிறது"

  என்ற தத்துவத்தை உணர்த்தும் மதங்கள் சொல்வதைத்  தான் அறிவியலும் சொல்கிறது...

"சக்தி உருவாக்கப்படுவதும் இல்லை.  அழிக்கப்படுவதும் இல்லை . எங்கிருந்து வந்ததோ அங்கேயே செல்கிறது"  என்கிறது அறிவியல்.  

இந்த புள்ளியில் தான் அறிவியலும் ஆன்மிகமும் அதை மதம் என்று சொன்னாலும் சரி  ஒன்று சேர்கிறது..  

அறிவியல் மாமேதை சர் ஐசக் நியுடன் கூட வானவியல் சாஸ்திரத்தை அறிந்திருந்தார். அதோடு கூட மதங்களின் தொடர்பையும் தெரிந்து வைத்திருந்தார்.  ஒருமுறை, டாக்டர் ஹாலே மதத்தை அவமரியாதையாக பேச முனைந்தபோது, அவர் குறுக்கிட்டு தடுத்து, " நான் இதை பற்றி படித்திருக்கிறேன்.  நீங்கள் படிக்கவில்லை. அதனால் இப்படி பேசுகிறீர்கள்" என்றிருக்கிறார்.  லிங்க் இங்கே

ஜோதிடம் குறித்த அறிவு முன்னர் அதிகம் இருந்ததாலேயே அரசர்கள் 'நிமித்தகாரர்' என்று ஜோதிடக் கலையில் தேர்ந்த ஒருவரை தன அரசவையில் வைத்திருந்தனர்...அவர் நாட்டின்  பாதுகாப்பு குறித்து,  வரும் முன் உரைப்பதும், அதை தவிர்ப்பதும், குறித்த ஆலோசனையை அரசனுக்கு கொடுத்து , நாட்டின் நலன் பேணினார்.

 சமீபத்தில் எனக்கு கண்ணில் சிறு கோளாறு ஏற்பட்டு, கண்ணெல்லாம் சிவந்து இருந்தபோது தான், கோச் செங்கட் சோழனை பற்றி நான் படித்த  நினைவுக்கு வந்தது.    அவனை பற்றி  நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். அவனுடைய கண்கள் என்றும்  சிவந்தே இருக்குமாம..  அதனால் தான 'செங்கண்  சோழன்'  என்றே அவன் அழைக்கப்பட்டான்.

அவன் கண்கள் ஏன் அப்படியாயின என்று உங்களை போலவே எனக்கும் ஆவல் மேலிட, அவன் கதையை படித்தேன்..

 அவன் தந்தையும் சோழ மன்னனுமான சுபதேவனுக்கு குழந்தை இல்லாத குறை நெடுங்காலம் இருந்தது.. அவனும் அவன் பட்டத்து ராணி கமலாவதி தில்லை நாயகனை வேண்டியிருக்க, அதனால் கருவுற்றாள். 
குழந்தை பெறும் தருவாய் , மன்னனிடம் சோதிடர்கள் "இன்னும் ஒரு நாழிகை கழித்து குழந்தை பிறந்தால் இந்த குழந்தை மூன்றுலகும் ஆளும்" என்றார்கள். இந்த செய்தி ராணிக்கு சென்று சேர்ந்தது.. 'என் கால்களை கட்டி தலை கீழாக தொங்கவிடுங்கள்'  என்று அவள் சொல்ல, அவள் வற்புறுத்தலை தாங்க முடியாமல் அப்படியே  செய்தார்களாம்.  கிட்டத்தட்ட ஒரு நாழிகை கழித்தே குழந்தையை பெற்ரேடுத்தாளாம். பிரசவ வேதனையை பற்றி என் போன்ற பெண்களுக்கே அதன் வேதனையை பற்றி தெரியும்...அதை ஒரு நாட்டின் நல்ல எதிர்காலத்திற்காக செய்வதென்றால்? அதுவும் அதில் உள்ள ஆபத்துகளை பற்றி தெரிந்திருந்தும்?  இப்படியும் வரலாற்றில் முகம் தெரியா வீராங்கனைகள் இருந்திருக்கிறார்கள்!! 

அவ்வளவு காலதாமதாமாக பிறந்த குழந்தைக்கு  கண்கள் சிவந்து விட்டுருந்தனவாம். குழந்தையை கையில் ஏந்திப் பார்த்துவிட்டு   ‘என் கோச் செங்கணானனே’ என்றுவிட்டு அரசி உயிர் நீங்கினாள்.  பின்னாளில், தலை சிறந்த மன்னனாகவும், கிட்டத்தட்ட எழுவது சிவன் கோயில்களை கட்டி கோயில்களுக்கு உண்டான தல விருட்சகங்கள் என காஞ்சிக்கு மா, தில்லைக்கு தில்லை, குற்றாலத்திற்கு குறும்பலா என்று நிர்ணயித்து சிவத் தொண்டாற்றி அறுபத்தி நாயன்மார்களில் ஒருவரானவர் இவர்....


ஜோதிடம் பற்றி பேசும்போதே அது குறிப்பிட்ட இந்து மதத்தோடு மட்டும் தொடர்பு கொண்டது என்று நினைப்பவர் தான் அதிகம்.. 

ஆனால்  ராகு கேது எனனும் சாயா கிரகங்கள் அந்நிய மதத்தினரை பற்றியும்    அவரோடு கொள்ளும் தொடர்புகளையும் காட்டுகிறது... 

இந்த ராகுவை தன தலையில் வைத்திருக்கும் அந்த பரமேஸ்வரனே, 'என்னாட்டவரும் போற்றும் இறைவா' போற்றி'  என்று தான் பாடப்படுகிறார்.  என்பது,  அவனின் அடியவர்களான அற்பத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சாக்கிய நாயனார் சாக்கிய மதத்தை சேர்ந்தவர்.  இலங்கைக் காரர். அவரையே தன அடியவராக இறைவன் ஏற்றுக் கொண்டாரே...

அதுமட்டுமா தான் தன அடியவருக்கு மட்டுமல்லாமல்,  மற்ற ஏனையோருக்கும் அடியேன் என்று சைவ வழியல்லாது மற்ற வழியை பின்பற்றுவோருக்கும் அடியேன் என்றான் அந்த பரம் பொருள்....

அவனுக்கு தெரியாதா இந்த பிரம்பஞ்சமே அவன் என்னும் போது அதன் ஓவ்வொரு உயிரினுள்ளும் உறைபவன் அவனே' என்று!


இதோ அந்த சர்வேஸ்வரன் அடி எடுத்து கொடுக்க சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய இந்த பாடல் 

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

 

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்

ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்

கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

 

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்

திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்

ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.

 

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்

பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

 

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

 

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்

கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

 

பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்

பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்

விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

 

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்

தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

 

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை

மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

 

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

 

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்

திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே".


வியாழன், 12 ஆகஸ்ட், 2021

ஜோதிடத்தின் ஜோதி 10... கருப்பு சிவப்பு நிறங்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன?

 சிவப்பு நிறத்தின் குணங்கள் என்ன?

என் இரத்தம் கொதிக்கிறது" என்று மீசை முறுக்கி சொல்லக்கூடிய வீரம், கோபம், சட்டென்று எதையும் யோசியாமல் செய்துவிடும் தன்மை இதெல்லாம் தானே...உடலில் ஓடும் ரத்தம மட்டுமா சிவப்பு?? 


 காதலின் அடையாளமாக சொல்வதும்.. அதையே...

மென்மையும் கடினமும் இணைந்த முரண்பாடான  உணர்ச்சிகளை  வெள்ளமாக காட்டுவது  இந்த தன்மை கொண்டவர்கள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா?? 

அதிக கோபம் ஒருவருக்கு வீரத்தை ஊட்டும் என்றால் அதன் எதிர் விளைவாக அவரை நாகரிகமான ரவுடியாகவும் இருக்க வைக்கும்.  அடியாட்களின் தலைவன் என்று சொல்லத் தக்க வகையில் ஒரு கும்பலை வைத்துக் கொண்டு மிரட்டி கட்டைப் பஞ்சாயத்து செய்ய வைப்பவராக இருப்பவர்களும் இவ்வகையினர் தான். 

அதே போல , தன்னை காதலிக்கவைக்கவில்லை என்பதற்காக ஆசிட் ஊற்றவும் வைக்கும் !!

ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற செவ்வாய் சுபத்துவமான பார்வையைப் பெறாமல், வேறுவகையில் சூட்சும வலுவும் பெறாமல், லக்னத்தில் அமர்ந்தோ, லக்னத்தைப் பார்த்தோ இருந்தால் அவர் பெரிய கோபக்காரராக இருப்பார். செவ்வாய் வலுப் பெற்று பாபத்துவம் பெற்றிருந்தால் மேற்சொன்ன கெட்டகுணங்களை கொண்டவராக,   சமூகத்தால் ஏற்று கொள்ளமுடியாத மேற்சொன்ன குற்றங்களை செய்யக் கூடியவராக  இருக்க வைக்கும் என்றால், சுபத்துவமான செவ்வாய் அதே தன்மையினரை சீருடை அணியும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்ட  பணியில் அமர்த்தும்.  காவல் துறை, இராணுவம் போன்றவற்றில் இருப்போரின் ஜாதகத்தில் செவ்வாய்  சுபத்துவ ஆதிக்கம் இருப்பதை பார்க்கலாம். 

காவல் நிலையங்களுக்கும நீதிமன்றங்களுக்கும்  சிவப்பு வர்ணம் பூசப்படுவதன் காரணமும் இது தான். 




சிவப்பு வர்ணத்திற்கு நடுநடுவே வெள்ளைக கோடுகள் உள்ளன அல்லவா? அது எதற்கு?? யோசித்துக கொண்டே இருங்கள்.  கடைசியில் சொல்கிறேன்!!

 அதுவே கருப்பு என்றால்...  இருட்டு என்று சொல்வதை விட..ஒளியில்லாத தன்மை.. எனலாம்.

எதையெல்லாம் மனிதன் தன வாழ்வில் நடப்பதை விரும்ப மாட்டானோ அதையெல்லாம் தருவது ...

நயவஞ்சகம், திருட்டு, பொய், பொறாமை, குள்ளநரித்தனம் இவற்றை எல்லாம காட்டக்கூடிய குணத்தை  உள்ளவன் மனது இருளடைந்தது இல்லையா?  அவன்  சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ளவன். என்று உறுதியாக சொல்லலாம். 

ஏன்?

இதோ சனியின் காரகத்துவத்தை பார்த்தாலே தெரியும்...

மரணம் அல்லது ஆயுள், பொய் சொல்லுதல், வயதானவர்கள், இரவு, கோபம், தோல் பொருட்கள், உடல் உழைப்பால் பிழைத்தல், சட்டத்துறை, சட்டத்திற்கு புறம்பான செய்கை, கருப்பு நிறம், துக்கம், வேலைக்காரர், மேற்குத் திசை, தாழ்வு மனப்பான்மை, விவசாயம் செய்தல், கழுதை, அடிமை, கெட்ட நடத்தை, திடீர் சரிவு, முரட்டுப் பிடிவாதம், ஆண்மைக் குறைவு, அருவருப்பான இடங்கள், முறையற்ற காமம், எமன், திருட்டு.

அழுக்கான இடங்களில் பணி, போதைப் பழக்கம், திரவமான நீசப் பொருட்கள், வேஸ்ட் பேப்பர் மற்றும் குப்பைகள், சாராயம், மது, பெட்ரோல், தார், சாலை போடும் பணி, பழைய கிழிந்த துணிகள், எண்ணெய், எருமை மாடு, நயவஞ்சகம், இரும்பு, இடிந்த கட்டிடம், குட்டிச் சுவர்கள், கல்மண் சுமப்போர், ஆலைத் தொழிலாளர், எடுபிடி வேலை, துப்புரவுப் பணிகள், விறகுக் கடை, கலப்படம் செய்யும் தொழில், நீலம், விமான நிலையம், மூட்டை சுமத்தல், கூலி வேலை, சுரங்கம், கல் குவாரிகள், பிளாஸ்டிக், சிறைச்சாலைப் பணி, தண்டனை அனுபவித்தல், மக்கள் தொடர்பு, குற்றவாளிகளின் சேர்க்கை, செவிலியர், மருத்துவமனையின் நெடி,

பொதுப்பணத்தை மோசடி செய்தல், ஊராட்சி மன்றம், உடல் ஊனம், நடக்க இயலாத நிலை, அநாதை விடுதிகள், கருப்பு நிறப் பொருட்கள், மை, வெட்டியான் பணி, புரோகிதம், பிணத்துடன் இருத்தல், மரணத்திற்குப் பின் என்ன என்கிற தேடல், சித்து நிலை, ஆன்மிகம், தவம், கூடு விட்டு கூடு பாய்தல், சிறுதெய்வ வழிபாடு, ஈஸ்வரப் பற்று, சந்தேகம், நடைபாதை வியாபாரம், வளவளவென்ற விஷயமற்ற பேச்சு, குள்ளம், முட்டாள்தனம், கழிப்பிடத்தைப் பராமரித்தல், கடன், பசியுடன் இருத்தல், வறுமை, தீராத நோய், ஏமாற்றுதல் போன்ற அனைத்துக்கும் சனியே காரகன் ஆவார்.

சனிக்கு பிடித்த நிறம் கருப்பு. நீதியை நிலைநாட்டுவதில் பெரும் கடுமை காட்டும் சனி பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட சட்டத் துறையினர் ...வழக்கறிஞர்கள், நீதிபதிகள் , சட்டத்துறையினரின் சீருடையின் நிறமும் கருமை தான்.

வழக்கறிஞர்களின் கருப்பு நிற கவுனை குறித்து ஏற்கெனவே இந்தே ப்ளாக்கில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். 

சனி பாபததுவமாக இருக்கும்போது மேற்சொன்ன கெடுகுணங்களை பிரதிபலிப்பவராகவும் சுபத்துவமாக இருக்கும்போது நீதிமானாகவும் ஒருவர் இருப்பார்... 


சனியை முழு பாபர் என்று வரிசைப்படுத்தினால், செவ்வாயை முக்கால் பாபர் என்கின்றனர் வேத கால ரிஷிகள். அதாவது செவ்வாயிடம்  கால் வாசி சுபத்துவமாவது இருக்கிறது என்று இதன் பின்னே ஒரு சூட்சமம் உள்ளது.  

இந்த இரு பாபர்களும் ஒன்றினைந்தால் ...

பொதுவாக இயற்கை சுபர்கள் ஒன்று சேர்ந்தால்,  நல்லது செய்வார்கள்.   ஆனால் இயற்கை பாபர்கள் ஒன்று சேர்ந்தால், என்ன ஆகும்?

கெட்டவன் இன்னொரு கெட்டவனோடு சேர்ந்தால் என்ன ஆகும்...எந்த அளவிற்கு கெடுதல் செய்யலாம் என்று பார்ப்பார்கள்.  அடுத்து சில கணத்தில், கட்டிப் புரண்டு சண்டையும் போடுவார்கள்.  ஆக்ரோஷமான சண்டை யாரும் தலையிடமுடியாத அளவில்..

அதனால் நஷ்டப்படப்போவது சுற்றிலும் இருப்பவர்களும் தான்....

ஆனாலும் இவர்களையும் கட்டுப்படுத்த கூடிய சுபர்கள் உண்டு.  

சூரிய சந்திரர்கள் சனியை பகைவனாக பார்க்கும்போது,  அதிக சுபத்துவம்  கொண்டு குருவுக்கு சனி மீது ஒரு பரிவு உண்டு. பூமியின் சூரியனை நோக்கிய நீள் வட்டப பாதைக்கு அடுத்து உள்ளவர்கள் அல்லவா இவர்கள் இருவரும்!! 

யாருக்கும் கட்டுப்படாத சனி, தனக்கு அரூகே உள்ள குருவின் பார்வைக்கும் இணைவுக்கும்  கட்டுப்படுவார்.  

செவ்வாய் கிரகத்திற்கு அருகில் உள்ள சுபர் என்றால் ஒளி பொருந்திய சந்திரன் தானே ...சந்திரனின் இணைவிற்கு பார்வைக்கும் கட்டுப்படுவார் செவ்வாய்..

 அந்த சந்திரனின் பால் போன்ற வெண்மை நிறத்திற்கும் சிவப்பு நிறத்திற்கும் உள்ள இணைவு இது தான்!!

ஆனாலும், சனி செவ்வாய் இருவரும் இணைந்]துள்ளபோது, யாருக்கு முதல் மரியாதை ? குருவுக்கா சந்திரனுக்கா?   

குரு மட்டுமே அனைத்து கிரகத்திலும் முழு சுபர்.......எந்த காலத்திலும்,  அவர் நீச்சத்தில் இருந்தாலும்....

அப்படிப்பட்ட குரு வந்தால் தான்,  இந்த சனி செவ்வாய் ஆட்டத்தை நிறுத்த முடியும்!!

 நாமும் அந்த 'குரு'விற்காக காத்திருப்போம்!!